உந்தீ பற பதிகம் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் பொழிப்புரை உடன்...
8.14 திருவுந்தியார் பின்னணி: உந்தி என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சிறுமியர்கள் கீழே குத்துக்கால் இட்டு அமர்ந்தும், திடீரென்று பறவை போல் கைகளை விரித்துக்கொண்டு எழுந்து ஓடிச்சென்று, மறுபடியும் தங்களது கைகளை மடக்கிக்கொண்டு அமர்ந்தும், இவ்வாறு மீண்டும் மீண்டும் அமர்ந்தும் எழுந்தும் தொடர்ந்து விளையாடுவதை உந்தீ விளையாட்டு என்று கூறுவார்கள். மணிவாசக அடிகளார் மகளிரை முன்னிலைப்படுத்தி பாடிய பாடல்களின் வரிசையில் இந்த பாடலையும் வைத்துள்ளார். அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து குதித்து மீண்டும் அமரும் நிலைக்கு ஏற்றவாறு இந்த பாடல்கள் அமைந்துள்ளன.வளைந்தது வில்லு என்ற போது அமர்ந்தவர்கள் எழுவதும் விளைந்தது பூசல் என்ற போது கைகளை விரித்து குதிப்பதும், உளைந்தன முப்புரம் என்ற போது விரித்த கைகளை சிறகு போன்று அசைப்பதும் ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற என்ற போது அமர்வதும் ஆக செயல்கள் அமையும் வண்ணம் இயற்றப்பட்ட பாடல்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் பெரும்பாலும் பெருமானின் வீரச்செயல்கள் குறிப்பிடப் படுகின்றன. அதற்கு ஏற்றார் போல் வீறுகொண்டு எழுவது போன்று பண்ணிசைத்துப் பாடவேண்டும். நாலாயிர தி...