Kind request to Aranilayathurai Amaichchar TVK Ramesh Sir
அறநிலையத்துறை அமைச்சர் தவெக ரமேஷ் ஐயா அவர்களுக்கு, லஞ்சம், ஊழல், லாவண்யம் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டியது தான். தவறு இல்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஐயர்வாளுக்கு ரூபாய் 1500 கொடுத்து சண்முகர் அருகில் பின்புறம் சென்று ரொம்ப நேரம் நின்று சிலைகள் அருகில் நின்று தரிசனம் பூஜைகள் வழிபாடு காணும் பாக்கியம் பெற்றேன். தரிசனம் முடிந்த பிறகு மஞ்சள் பையில் திருச்செந்தூர் முருகன் படம் மற்றும் விபூதி மற்றும் சந்தனம் உருண்டை மற்றும் சாமிக்கு சார்த்தப்பட்ட மாலையில் சிறு துண்டு போன்றவை இருந்தது. மணமாக இருந்தது. அவற்றை பக்தி சிரத்தையுடன் வீட்டுக்கு கொண்டு வந்து இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். பாவம். வைதீகம் ப்ராம்மணர் சிவாச்சாரியார் ஐயர் அர்ச்சகர் குடும்பங்கள் வாழ வேண்டும் அல்லவா? விலைவாசி எந்தளவுக்கு உயர்ந்துள்ளது? எத்தனை அர்ச்சகர்கள், ப்ராம்மணர்கள், அரசு வேலையில் பணி அமர்த்த முடியும்? 24 மணி நேரம் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகர், ப்ராம்மணர், சிவாச்சாரியார், பூசாரி வேலை. அவர்களுக்கு உதவியாளர்கள் கண்டிப்பாக தேவை. அதிகாலை 3 மணிக்கு...