Casteism. Sanatana Dharma. Varnasramam. Dicipline. Character. ஒழுக்கம். Kulam. Kula Deivam. Kula Devata.

Caste + Small Business (DeCentralisation). 
Versus. 
No Casteism + Corporatisation. (Full Centralisation. No devolution of Power). 

ஜாதி+ சிறு தொழில்கள். 
Versus. 
ஜாதி அற்ற மேல் நாடுகள், ஐரோப்பிய நாடுகள், பெருந்தொழில் அதிபர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள். 

இந்தியர்கள் குறிப்பாக தென் இந்தியா முழுவதும் ஜாதி என்பது பெரிய விஷயமாக சக்தியாக உள்ளது. 

ஆனால் சனாதன தர்மம் என்பதின் ஆணி வேர் ஆக ஜாதி உள்ளது. 

சனாதன தர்மம், பகவத் கீதை எழுதியதாக, சொன்னதாக, பாடியதாக வேத வியாசர் மூலமாக யாதவர்களின் இடையர்களின் அரசன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூட நால் வர்ணங்கள் இறைவன் படைத்தது என்கிறார். 

சைவ சித்தாந்தம் பல இடங்களில் குலம் என்பதை இறைவன் சிவன் படைத்தார் என்றும் மேல் குலம் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் இழிந்த குலம் உண்டு என்று பல இடங்களில் சைவ சித்தாந்தம் மற்றும் திருக்குறள் வலியுறுத்துகிறது. 

இவ்வாறு ஜாதி, வர்ணம், குலம், குலப்பெருமை இவை எல்லாம் இந்தியர்கள் வாழ்வின் பிரிக்க முடியாத கூறுகள். அழிக்க முடியாத,  அழிக்க இயலாத கூறுகள். 

இது ஏன் இந்த ரோபோட், கம்ப்யூட்டர், ஆர்ட்டிபிஷியல் இன்ட்டெலிஜன்ஸ் காலத்திலும் அழியாமல் உள்ளது? என்ன காரணம்? 

Wild, Wild West என்பார்கள். அதாவது காட்டுமிராண்டித்தனம். பண்பாடு இல்லாத வாழ்க்கை. ஆறுதல் இல்லாமல், ஒற்றுமை இல்லாமல், தான் தோன்றித்தனமான வாழ்க்கை. இது தான் இன்றைய மேற்கத்திய நாடுகளில் காணப்படும் வாழ்க்கை முறை. 

தனித்தனி தீவுகள் ஆக மனிதர்கள் விலங்குகள் போல மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 

கோடிக்கணக்கான பணம் உள்ளது. 100+ அறைகள் உள்ள பங்களா உள்ளது. அரண்மனை உள்ளது. ஆனால் உற்றார் உறவினர்கள் இல்லை. வேலைக்காரர்கள். தொழிலாளர்கள். மட்டுமே. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் கோடிக்கணக்கான சொத்துக்களை நாய்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வேலைக்காரர்கள், நர்சுகளுக்கு எழுதி வைத்து விட்டு சாகின்றனர்.

இது போக மருத்துவமனையில் இந்த கோடீஸ்வரர்கள் யாரும் உதவி இன்றி படுத்துக் கிடக்கும் போது உதவிக்கு துணைக்கு கூட ஆள் இன்றி தவிக்கின்றனர். 

இது தான் இன்றைய மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம். 

ஆனால் இந்தியாவில் 1950...
1960 வரையிலும்.... தாத்தா மரணப் படுக்கையில் உள்ளார்... பாட்டி மரணப் படுக்கையில் உள்ளார்... என்றால் பெரிய குடும்பம் ஒன்று கூடி.... ஓடி வந்து... உதவிக்கு வந்து... தாத்தா.. பாட்டி... மாமன்... மச்சான்... மைத்துனர்... கொழுந்தியாள்.... சகலப்பாடி... அத்தான்... அத்தை... என்று ஏகப்பட்ட சொந்தங்கள் பந்தங்கள் வந்து மருத்துவமனையையும் சாவு வீட்டையும் சிறப்பித்து.... உடல் நலிவுற்று... உள்ளம் வெதும்பிக்  கிடக்கும் முதியவருக்கு அஞ்சலிகள். அனுதாபங்கள். இரக்கங்கள். உதவிகள். வீட்டு உதவிகள். கடைக்குப் போக... மாத்திரை வாங்க.. என்று பல்வேறு உதவிகள் செய்து சூழ்நிலையை கலகலப்பாக மாற்றி... கல்யாணச்சாவாக அந்த 80+ அல்லது 90+ வயோதிகர்கள் சாகும் போது துணை இருந்தனர்.... 

இது ஜாதி. குலம். குடும்பம் என்ற உறவினால் வந்தது. இந்த மாதிரி ஏற்பாடுகள். செயல்கள். கலாச்சாரம். பண்பாடு. மேற்கத்திய நாடுகளில் இல்லை. 

எந்த நேரமும் டிவி. 
நெட் ஃப்ளிக்ஸ்.
படம். யூட்யூப். 
இன்டர்நெட். 
மொபைல் போன். 
வீடியோ கேம். 
வாட்ஸ்அப். 
முகநூல். 
என்று சம்பந்தம் இல்லாத. 
உபயோகம் இல்லாத. 
வெற்றுக் குப்பை கலாச்சாரம் தான் இந்த கம்ப்யூட்டர் இன்டெர்நெட் யுகம். 

ஜாதி மதம் என்பது வெறி இல்லாமல் சமுதாயம் நலன் கருதி ஒழுக்கம் கட்டுப்பாடு கருதி பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து ஒரு காலத்தில் இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். 

இப்போது எந்த மரியாதையும் இல்லை. உறவுகள் இடையே ஒற்றுமை இல்லை. பணம். பணம். பணம். என்று அலைகிறார்களே தவிர என் ஊர். என் மண். என் மக்கள். என் தேசம். என் கோவில் என்று கலாச்சாரம் பண்பாடு பாதுகாப்பு செய்ய குறைவான ஆட்கள் பழைய காலத்து ஆட்கள் தான் முன் நிற்கின்றனர். 

அதாவது ஜாதிக்கொரு தெரு. 
ஜாதிக்கொரு கோவில். 
ஒரு ஜாதிக்குள் ஆகவே ஏகப்பட்ட சிறிய கோவில்கள். குடும்பம் ஒவ்வொன்றுக்கும் குல தெய்வம் கோவில் என்று வாழ்ந்து வந்தனர் தமிழர்கள். 

இன்றைக்கும் குல தெய்வம், குல தெய்வம் கோவில் என்றால் ஏகப்பட்ட செல்வாக்கு. மதிப்பு. மரியாதை. உண்டு. இருக்கிறது. 

காரணம். அந்த குல தெய்வம் கோவில்களில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் இடுவார்கள். படையல் இடுவார்கள். சேர்ந்து சாப்பிடுவார்கள். சேர்ந்து உண்ணுவார்கள். இதனால் ஒற்றுமை வளர்ந்தது.... 

மேற்கத்திய கலாச்சாரம் என்ன? கோவில் இல்லை. குளம் இல்லை. குல தெய்வம் இல்லை. ஜாதி இல்லை. சாமி இல்லை. சாத்தான் இல்லை. அவனுக்கு என்ன செய்வது? எப்படி செய்வது? பொழுதை எப்படிக் கழிப்பது என்றே தெரியவில்லை! 

அவன் பைக், கார், வேன், விமானம் எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றுகிறான். விநோதமான இனங்களை, மக்களை காண்கிறான். போட்டோ எடுக்கிறான். வீடியோ எடுக்கிறான். கதை. கட்டுரை. பயண அனுபவங்கள் எழுதுகிறான். ஆனால் அவன் செத்தால் 200+ நாடுகளை சுற்றிப் பார்த்து உலகம் முழுவதும் நண்பர்கள் கொண்ட அவனுக்கு அடக்கம் பண்ண, கவனிக்க யாரும் வரப்போவதில்லை. காரணம் தொலை தூரம். பணம். லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அமெரிக்கா சென்று அவனது இறுதிச்சடங்கில் அவனுடைய இந்தியா நண்பன்..... பிலிப்பைன்ஸ் நண்பர் கலந்து கொள்ள முடியும். பணம் இல்லாத காரணத்தால் அவனுடைய உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் சிறிது காலம் மட்டுமே பழகிய உறவுகள் அவனை வழி அனுப்பி வைக்கக்கூட செல்ல முடியாத சூழ்நிலை உண்டு. 

ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நாம் சொன்னாலும் சொந்தம் பந்தம் ஒட்டு உறவு பந்தம் பாசம் என்று ஜாதியை சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள், செயல்பாடுகள், கோவில் சார்ந்த நடவடிக்கைகள், செயல்பாடுகள், குல தெய்வம் சார்ந்த செலவுகள், மண்டகப்படி, பாத்தியதை என்று ஏகப்பட்ட கலாச்சாரம், பண்பாடு நடவடிக்கைகள் குடும்பம் ஒற்றுமை, குடும்ப நலன், சமூக நல்லிணக்கம், சமூக அமைதி என்று கருதி செய்து வருகின்றனர்..... 
இது தான் சனாதன தர்மம். 

இது இருந்தால் தான் வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக நமது சந்ததியினர் சிரித்துப் பேசி கூடிக் குலாவி கொஞ்சிப் பேசி மகிழ்ந்து வாழ முடியும்.... 

இன்றைக்கு திராவிடர் கழகம்... 
திமுக... அதிமுக...கம்யூனிஸ்டுகள்... என்று பல பொது உடமை பேசும் கட்சியினர் கூட கோவில், கொடை, திருவிழா, குல தெய்வம் கோவில் மண்டகப்படி, ஊர்க் கோவில் திருவிழா என்று விமரிசையாக பணம் செலவழிக்கின்றனர். மகிழ்ச்சிக்கான பொக்கிஷம் அந்த கோவில் கொடை திருவிழா செலவில் உள்ளது என்பது நாம் அனைவரும் கண்கூடாக காணமுடிகிறது.... 

இது போக ஜாதி மதம் என்பதின் பலன்கள் நன்மைகள் ஏகப்பட்டது உள்ளது. அவற்றை எல்லாம் பொறுமையாக எழுதி உங்கள் மனதுக்கு ஏற்புடையதாக தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.... 

மாயன் மயன் தட்சன் எட்சன் என்ற ஆசாரி ஆச்சாரி ஆச்சார்யா சிவாச்சாரியார் விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த தமிழர்கள் தான் பிற ஜாதிகள் ஆன விவசாயம் மற்றும் ஆடு மாடு மேய்க்கும் சிவன் பெருமாள் ஜாதியை சேர்ந்த அரசர்களால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்டார்கள் என்று சொன்னேன். 

கிமு 5000 போன்ற காலங்களில் 
பர்மா. 
பிலிப்பைன்ஸ். 
கொரியா. 
ஜப்பான். 
வியட்நாம். 
தாய்லாந்து. 
கம்போடியா. 
இந்தோனேசியா. 
ஜாவா. 
சுமத்ரா. 
பாலி. 
இலங்கை. 
போன்ற தீவுகளில் நாகரிகம் என்பது அறவே இல்லை. 

மக்கள் காட்டுமிராண்டிகள் ஆக இருந்தனர். அங்கு சென்று அவர்களுக்கு ஜாதி மதம் கோவில் பூஜை புனஸ்காரம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆய கலைகள் 64 ம் கற்பித்தவர் தமிழர்கள்.... 

இதனால் அரசர்களுக்குள் சண்டை வந்தது.... அவ்வாறு வந்த சண்டையில் தான் தட்சன் எட்சன் தாரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி போன்ற அசுரர்கள் அரக்கர்கள் தமிழர்களாக இருந்தும் கூட மீதி தமிழர்கள் ஆன மேல் ஜாதிகள் என்று கருதப்பட்ட மீதி தமிழர்கள் அந்த ஆசாரி ஆச்சாரி ஆச்சார்யா சிவாச்சாரியார் விஸ்வகர்மா கம்மாளர் கம்மியர் கம்மா இனத்து மக்கள் மற்றும் அரசர்களை அரசுகளை அடித்துப் போட்டு... குலைத்துப் போட்டு... துரத்தி விட்டனர்... இந்தியாவை விட்டு... பர்மா என்ற மியன்மார் மயன்மார் நாட்டை விட்டு...... 

இதனால் உலகம் பயன் அடைந்தது. அமெரிக்கா பர்மா அடைந்தது. அங்கு மாயன் மயன் தமிழர்கள் கலாச்சாரம் பிரமிடுகள் உருவானது. 64 கலைகள் உருவாயின. அங்குள்ள காட்டுமிராண்டி மக்கள் திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டு உயர்ந்தனர்.... 

ஆகவே ஜாதி மதம் குலம் என்ற பிரிவுகள் மனித ஒழுக்கம் மனித மேன்மை குல ஒற்றுமை கோவில் கலாச்சாரம் பண்பாடு குல தெய்வம் கோவில் பொங்கல் திருவிழா என்று கூடி வாழ வேண்டும் என்பது எனது கருத்து.

இது இல்லாமல் போனால்... 
கார்பரேட் கலாச்சாரம் என்ற பெருந்தொழில் சென்ட்ரலைசேஷன் கலாச்சாரம் வந்து விடும். வந்துவிட்டது. வந்துள்ளது. அது தான் உலகம் முழுவதும் இன்று ஆட்டிப்படைக்கின்றது. 
இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் எதை ஊக்குவிக்கின்றன? ஜாதி மதம் பேதம் இல்லாத திருமணங்கள். இஷ்டத்து செக்ஸ். நினைத்த உடன் திருமணம். கர்ப்பம். காதல். செக்ஸ். உடல் உறவு. கல்யாணம். விவாகரத்து. இப்படி போகிறது. 

இது தவறு. 
கார்ப்பரேட் நிறுவனங்கள் கலாச்சாரம் இந்தியாவை அழிக்கும். இந்தியர்கள் ஆன்மாவை அழிக்கும். சனாதன தர்மம் அழிக்க முயலும். அது. ஆனால் முடியாது. 

சனாதன தர்மம் என்ற ஜாதி மதம் பேதம் உள்ள இந்து மதம் அப்படி அல்ல. குடும்பம். தெரு. ஊர். மக்கள். பொதுஜனம். கோவில். திருவிழா. குல தெய்வம். என்று பழைய காலத்தின் படி மக்கள் ஒற்றுமையை குடும்ப ஒற்றுமையை பேணி.... 
கூட்டுக் குடும்பம் என்ற உறவுமுறை பேணி... 
வீட்டைக் காக்கும். 
நாட்டை காக்கும். 

கார்ப்பரேட் கலாச்சாரம் ரொம்ப காலம் வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக வாழ இயலாது. முடியாது. 

கோவில். திருவிழா. பொங்கல். குல தெய்வம் கோவில். சீர். செனத்தி. குடும்ப உறவுகள் என்ற இந்திய சனாதன தர்மம் தான் வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக செழிக்கும். வாழும்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala