பச்சை கற்பூரம்

வீட்டில் பணத்தை ஈர்க்கும் ,  மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்.  பச்சை கற்பூரம் பற்றி தெரியாத சில உண்மைகள்!

(இன்று நம் திருமந்திர வகுப்பு அன்பர்களுக்கு அதிஷ்டங்களை ஈர்க்கும் , மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்க கூடிய ஒரு அபூர்வ பொருளை பற்றி என் குருநாதர் மாபெரும் மூலிகை முனிவர் ப்ரமரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் ஸ்வாமிகள் அவர்கள் கூறிய ரகசியங்களை தொகுத்து  விரிவாக பகிர்கிறேன். ஆழ்ந்து கற்று கொள்ளுங்கள்.)

பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது.

ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.

வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். எனவே பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

#பச்சை_கற்பூரத்தை வீட்டில் இதர விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதை போலவே நாம் சாப்பிடும் இனிப்பு உணவுகளிலும் சேர்க்கிறார்கள்.

பச்சை கற்பூரத்தை உணவுகளில் எடுத்து கொள்ளும் பழக்கம் மற்ற நாடுகளில் காண படுகிறது. உணவுகளில் நறுமணத்திற்கு பயன்படுவதை போலவே உடல் உபாதைகளை போகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.

கற்பூரம் என்றாலே கோவில்களில் மற்றும் கடவுளுக்கு வழிபாடு செய்யவே பயன்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனை அதிகம் உபயோகித்தால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும்.

நன்மைகள் :
**************

கற்பூரத்தை கொண்டு தயாரிக்க படும் மருந்துகளை கொண்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படும் வயிற்று கோளாறுகளை போக்கும், மூட்டுகளில் ஏற்படும் வலிகளை போக்கவும், நல்ல வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது, அதோடு தசைகளில் ஏற்படும் பிடிப்புகள், மூச்சு பிடிப்புகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கவும் மற்றும் இதர கோளாறுகளை போக்கும் பின்வருமாறு :

சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நச்சுக்கள் சளி தொல்லை தொடர் இருமல் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை அளிக்கவும் பயன் உள்ளது.

செய்முறை :
**************

பச்சை கற்பூரத்துடன் துளசி, ஏலக்காய் சேர்த்து நீரினை இரவு தூங்கும் பொழுது ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, காலை எழுந்தவுடன் அதனை அருந்த உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுத்து நம்மை பராமரிக்கும்.

இன்று தயாரிக்க படும் ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், உணவு பொருட்கள், நறுமணத்தை கொடுக்கவும் உதவுகிறது.

இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட, பலகாரத்தில் கற்பூரத்தை சேர்த்து தயாரிக்க நீண்ட நாட்கள் இருக்கும். எவ்வித பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் இருக்காது.

சருமத்தில் உள்ள பருக்களை போக்க பெரிதும் பச்சைகற்பூரம் பயன்படுகிறது. 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கி காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி இரவில் படுக்கும் முன் முகத்தை கழுவி இந்த எண்ணெய் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய பருக்கள் போக்குவதுடன் கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கும் குணம் கொண்டவை.

பச்சை கற்பூரம் மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் அளித்து சுவாசத்தை சீர் செய்யும் குணம் கொண்டது.

பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்கு தடவி வர பேன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். குளிக்கும் நீரில் பச்சை கற்பூரம் கலந்து குளிப்பதினால் தலைவலி மற்றும் பேன் தொல்லைகள் இருந்து விடுபடலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு போட்டு அந்த நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைக்க கால் வெடிப்பு மற்றும் கால் வலி குறையும்.

பச்சை கற்பூரம் இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஒரு பாட்டில் 5 கிராம் பச்சை கற்பூரத்தை கலந்து வீடுகளில் தெளித்து வர பூச்சி மற்றும் கொசுக்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
    சித்தர்களின் குரல் shiva shangar

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி