பில்லி சூனியம் ஏவல் செய்வினை காத்து கருப்பு

பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?' என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.   உண்மையான பாதுகாப்பு கவசம் ..!!! ஸ்ரீ சரபேஸ்வரர் பாதுகாப்பு கவசம் இன்று 27/9/2020  ஞாயிறு அன்று சொல்லுங்கள் இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.

 சரப புராணம் என்பது சரபம் என்னும் பறவை உருவம் கொண்டு சிவபெருமான் நரசிங்க உருவம் கொண்ட திருமாலை அடக்கிய வடமொழிப் புராணக் கதையைத் தமிழில் கூறும் நூல். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இது இயற்றப்பட்டது.

சரப புராணம் 431 பாடல்கள் கொண்டது.
பாயிரம், நரசிங்க உற்பத்திச் சருக்கம், கடவுளர் முறையீடு சருக்கம், வீரபத்திரன் எழுச்சி, அறிவுறுத்திய சருக்கம், சலந்தரன் வதைச் சருக்கம், சக்கரம் பெற்ற சருக்கம், நரசிங்கர் வதை சருக்கம் என ஏழு சருக்கங்களைக் கொண்டது.

இந்த நூலில் உள்ள பாடல் ஒன்று. எடுத்துக்காட்டு. நரசிங்கத்தின் அடம்பிடித்த செயல்களை முறையிட்ட தேவர்களின் முன் சிவபெருமான் காட்சி தருகிறார்.

கங்கைமுடிச் சடைமுடியும் கண்மூன்றும் விண்மூன்றும்
அங்கழியா தருள்மிடலும் அணிப்புயங்கள் ஒருநான்கும்
செங்கையணி மான்மழுவும் சேயிழையாள் ஒருபாலும்
பொங்க எதிர் முன்னின்றான் பூ வனங்கள் தொறும் நின்றான்.

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை

ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "

இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை
நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.

அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி