Posts

Police Station Katta Panchayat Civil Case

சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அதனை ஒரு மனுவாக கருதி, சமுதாய சேவைப் பதிவேட்டில் அதனை பதிவு செய்து கொண்டு புகார்தாரருக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும். மனுவை பெறும் காவல் அலுவலர், புகார் பெற்ற விபரத்தை உடனடியாக மூத்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றாலும், அவர் அதற்கான அதிகாரத்தை குவிமுச சட்டப் பிரிவு 149 ன் மூலம், அதாவது ஒரு காவல் அலுவலர், பிடியாணை வேண்டாக் குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் மூலம் அத்தகைய அதிகாரத்தை பெறுகிறார். குவிமுச சட்டப் பிரிவு 149 ஆனது ஒவ்வொரு காவல் அலுவலரும் ஏதாவதொரு பிடியாணை வேண்டாக் குற்றம் புரியப்படுவதை தடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறுக்கிடலாம் என்று கூறுகிறது. ஆனால் சிவில் மனுக்களை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதமானது. ஏற்கனவே நீதிபதி இரகுபதி

Murder fight between wife husband closed room court case argument

நடு இரவில் பூட்டப்பட்ட வீட்டிற்கு உள்ளே இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்த சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி கத்தியால் குத்திக் கொண்டதில், மனைவி உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரி தான் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 106 ன்படி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரி தான் அவருடைய மனைவியை கொலை செய்துள்ளார் என்றும், மருத்துவமனையில் எதிரி கொடுத்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தும், கணவனான எதிரி தான் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது சட்டப்படி தவறாகும்.  ஒரு நபருக்கு இறப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அளிக்கப்படும் வாக்குமூலம் தான் மரண வாக்குமூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த மரண வாக்குமூலத்தை அளித்த நபர் பின்னர் உயிர் பிழைத்து விட்டால் அதனை மரண வாக்குமூலமாக கருத முடியாது. அதேசமயம் அவரால் அளிக்கப்பட்ட மரண வாக்குமூலத்தை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவும் கருத முடியாது  ஏனெனில் ஒப்புதல் வாக்குமூலத்தை கு. வி. மு. ச பிரிவு 164ல் கண்ட

Mistake of Fact CRPC 157(1) and Final Report

*ஒரு குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு மேல் விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டதற்கு பின்னர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்தும்படி, காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அமர்வு நீதிமன்றத்தில் புகார்தாரர் (Defacto Complainant) கோர முடியும்* நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும். *உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401"* என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன.  ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் *"வினைய் தியாகி Vs இஷ்ரத்

Avvai Shanmugam Pillai Manonmaneeyam Sundaram Pillai Boys Drama Company Kannusamy Pillai related news

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா? சினிமா உலகம் தோன்றுவதற்கு முன் நாடகக் கலையே பிரதானமாக இருந்த காலகட்டம் அது. இன்று இருப்பது போல் ஷூட்டிங் நடத்தி, எடிட் செய்து வெளியிடும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம். ஆன் தி ஸ்பாட்டிலேயே மேடையில் தோன்றி வசனங்களை மறக்காமல் சிங்கிள் டேக்கிலேயே பாடி நடிக்க வேண்டும். பக்கவாத்தியம் தனி. இவ்வாறு நாடகக் கலைகளில் கைதேர்ந்தவர்கள்தான் பின்னாளில் தமிழ் சினிமாவினை ஆண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி., உள்ளிட்ட நடிகர்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர்தான் டி.கே. சண்முகம். டி.கே. சண்முகம் என்றால் பலருக்கும் தெரியாது. அவ்வை சண்முகம் என்றால் இந்தத் தலைமுறைக்குத் தெரியும். ஏனெனில் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் இவரின் பெயரிலிலேயே எடுக்கப்பட்டது. மேலும் சென்னையின் பிரதான சாலை ஒன்றும் இவர் பெயரிலியே அமைந்துள்ளது. அப்படி என்ன செய்தார் நாடகத் துறைக்கு என்கிறீர்களா? தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்;  நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; "அண்

Power of Attorney full details

பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33)  பவர் ஆப் அட்டார்னி பத்திரம் பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.  அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4). ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது. பிரிவு 33(1)(ஏ):  (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்): இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம்

Case & Counter Case. Mistake of Fact. Mistake of Law.

Mistake of Fact or Law Case in Counter :- பிழை வழக்கு ( MF) எதர் வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு- சந்துரு,கரூர். பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்,குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக கூறுகிறது. PSO-660 முறையாக புகார்தாரர்க்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அதனை முதல் தகவல் அறிக்கையுடன் இணைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். PSO-661 இறுதி அறிக்கை( RCS)களை வட்ட ஆய்வாளர் மூலமாக (I.O.) விசாரணை அதிகாரி அனுப்ப வேண்டும்.அதன் மீது ஆணை பிறப்பிக்கப்பட்டால் குறிப்புரை எழுதித் தாமதமின்றி குற்றவியல் நடுவர்க்கு அனுப்ப வேண்டும்.மேற்கொண்டு விசாரணை செய்யுமாறு ஆய்வாளர் நிலைய அலுவலர்க்கு அணையிடலாம் அல்லது தானே விசாரணை செய்யலாம்.PSO-662 விசாரணை அலுவலர்(IO),ஒரு வழக்கை திட்டமிட்ட பொய்யென்றோ வன்ம்மான பொய்யென்றோ அறிக்கை செய்கையில்,அவர்,இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கைவெடுக்க உத்தேசிக்கிறாரா இல்லையா என்றும்,அப்படி உத்தேசிக்காவிட்டால் அவ்வாறு செய்யாத்தன் காரணங்களை கூற வேண்டும்.PS

How to see Ayodhya Ram Mandir. Rameswaram to Ayodhya Train

குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள் கவனத்திற்கு. ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது .  *ரயில் எண் 22613* RMM AYC சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.  *அயோத்தியா தாம்* என்ற ரயில் நிலையம் இறங்கவும் அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும். அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும். அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், *அனுமான் காரி* என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோவிலை அடையலாம். 50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம். பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking  முன்பே வலது பாகத்தில் locker  அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , watch தவிர) வைத்து செல்லலாம்.  உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு  belt, mobile