Aditya Hrudhayam Mantram by Agathiyar

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
    ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
    உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
    யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
    ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
    சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
    பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
    ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
    மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
    வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
      ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
      திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
      அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
      கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
      கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
      தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
      ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
       நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
       நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
       பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
      கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
       நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
       பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
       ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
       யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
      கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
      எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
       ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
       தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
       த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
       ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி



நாம் மேலே காண்பது மகத்துவம் பொருந்திய அகத்தியர் இயற்றிய ஆதித்ய ஹ்ருதயம் ஆகும்.  இது அகத்தியரால் ராமனுக்கு உபதேசிக்கப்பட்டது.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.  தன்னை மனிதனாக கூறிக் கொண்ட ராமனுக்கு சூரியனின் அருளை வழங்க அகத்தியர் இதனை உபதேசம் செய்தார்.  இது சோர்வினை போக்க வல்லது.  தைரியத்தையும், பலத்தையும் கொடுக்கக்கூடியது.  ஆயுளை வளர்க்கக்கூடியது.  புண்ணியத்தை தர வல்லது.  எதிரிகளை அழிக்கக்கூடியது.

நமது ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்கவோ அல்லது அரசாங்க ஆதரவோ இருக்க வேண்டுமானால் சூரியனின் பலம் முக்கியம் ஆகும்.  அரசு வேலையைத் தரும் கிரகங்கள் ஜாதகத்தில் சரியாக அமைந்திருக்க வேண்டும்.   பலம் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஷட்பல நிர்ணயம் மூலம் கணிக்கப்பெறும் பலம் ஆகும்.  ஷட்பல நிர்ணயம் மட்டுமல்லாமல் தொழில் வீடான 10 வது இடத்திற்கு அரசு கிரகங்களின் பலம் இருக்க வேண்டும்.

பொதுவாக நம்மில் பலர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.  அவ்வாறு முயற்சி செய்யும் எல்லோருக்கும் அரசு வேலை அமைவதில்லை.  பலரின் முயற்சி வீணாக போகிறது.  இதனை போக்கும் விதத்தில் அரசு வேலையை பெற ஆதித்ய ஹ்ருதய துதியை பயன்படுத்தும் முறையை கீழே காண்போம்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் சூரிய ஓரையில் வெட்ட வெளியிலோ அல்லது மாடியிலோ ஆதித்ய ஹ்ருதய துதியை பாராயணம் செய்ய வேண்டும்.

முதலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  உங்களின் குலதெய்வத்தினை வணங்கவும்.  பின்பு கணபதியை வணங்கவும்.  பின்பு இஷ்ட தெய்வத்தினை வணங்கவும்.  பின்பு எழுந்து நின்று சூரியபகவானுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்.  பின்பு ஒரு துண்டின் மீது அமர்ந்து ஆதித்ய ஹ்ருதய துதியை 3 முறை பாராயணம் செய்யவேண்டும்.

இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 16 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரம் வரும் நாட்களின் மேற்கண்ட முறையில் பாராயணம் செய்ய வேண்டும்.  கடைசி நாள் மட்டும் கோதுமையால் செய்த பாயசம் வைத்து பாராயணம் செய்யவும்.  பாயசத்தில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்க்க வேண்டும்.

ரசாயன முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் எலும்புச்சாம்பல் கலக்கப்படுவதால் அது அசைவ பொருள் ஆகும்.  எனவே அதனை விலக்க வேண்டும்.  எனவே அதற்கு பதிலாக கரும்பு வெல்லமோ அல்லது பனை வெல்லமோ சேர்க்க வேண்டும்.

இதனால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகமாகும்.  சூரிய தோஷம் நீங்கும்.  அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தங்களின் முயற்சியில் வெற்றி கிட்டும்.  அரசாங்க ஆதரவு உண்டாகும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மறைமுகமாக அரசாங்க ஆதரவு உண்டாகும்.  அரசியலில் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அரசியலில் வெற்றியும் பதவிகளும் வந்து சேரும்.

மற்றவர்கள் இதனை பின்பற்றினால் எல்லா செயல்களிலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.  தைரியமும் மனபலமும் உண்டாகும். ஆன்ம லாபமும் உண்டாகும்.  செல்லுமிடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும்.

கிரக தோஷங்கள் நீங்கி, சூரியனின் அருளினைப் பெற்று எல்லா நலங்களும் பெற இறையருளும் குருவருளும் திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஜயமில்லை

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி