Ottiyanam Ottiyam Ottakoothar Ottoman Ottomon Odiya Orissa Attabiratta Atta Veerattanam Veerattaneswar Kovil Atta Veerattam Kovils

அருமையான செய்தி. புவனேஸ்வர் ஒரிசா தலைநகர். அங்கு தமிழ் சோழர் அமைத்த கோவில்கள் பல. விட்டல் கோவில் என்று கிருஷ்ணன் கோவில். முக்தேஸ்வர் கங்காரேஷ்வர் லிங்கநாத் கோவில் ஓம்காரேஷ்வர் என்று 360 கோவில்கள் ஒரிசா ஒடியா என்ற தூய தமிழ் ஒட்டியாணம் ஒட்டியம் என்ற நாடு.
ஒட்டியாணம் என்ற பெயரே தமிழர் இந்தியாவை பாரதத்தை பாரத மாதாவாக நினைத்து அங்கம் வங்கம் மகதம் (மகுடம்) கச்சிபுரம் (வட கச்சி காஷ்மீரம்) தென் கச்சிபுரம் (காஞ்சிபுரம்) வட மதுரை தென் மதுரை வட காசி 
தென் காசி என்று பல்வேறு தமிழூர்கள் வடக்கில் இருந்தன.
பாரத மாதாவின் இடுப்பு பிரதேசம் ஒட்டியாணம். ஒட்டக்கூத்தர் ஒட்டியாணத்தில் பிறந்து இருக்கலாம். அல்லது ஒட்ட ஒட்டக ஒட்டி ஒட்டியாண ஒடிய ஒட்டிய ஒடியா ஒரியா தொடர்பு ஒட்டக்கூத்தருக்கு இருந்திருக்கலாம்.
ஒடிசாவின் அட்ட பிரட்டா ரயில்வே நிலையம் ஊர் மிக செழுமையான வயல்வெளிகள் பனைகள் கொண்டு உள்ளது. இந்த அட்டபிரட்டா ஊர் தூய தமிழ் சொல் அட்ட வீரட்டம் சிவன் கோவில் ஆகும். தமிழர் சிவன் இந்து சிவன் பவுத்த புத்த சமண சாக்கிய மன்னர்கள் ஆண்ட பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர் மக்கள் ஆண்ட ஒரிசா ஆந்திரா பாணவாசி வனவாசி பாணர்வாசி பாணராசி வாணர்ஆசி வாரனாசி என்ற காசி வரை ஆண்ட தமிழ் பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர் மக்களின் குல தெய்வமான அனுமான் அனுமார் ஹனுமன் ராமாயண காலத்திலேயே (கிமு5000 வாக்கில்) ஆந்திரா ஒரிசா பகுதிகள் பள்ளி பள்ளேளா பள்ளேளர் பள்ளவர் என்ற பாழி பாலி வாலி தமிழர் வன்னியர்கள் படையாட்சிகள் கையில் இருந்த நாடுகளே பள்ளி என்று ஆந்திரா ஒரிசாவில் முடியும் ஊர்கள். இதே பள்ளி என்று முடியும் கன்னட ஊர்கள் பிற்பாடு ஹள்ளி ஹள்ளி என்று மாற்றப்பட்டன. 
அட்டபிரட்டா ஊர் ஒடியா ஒட்டியாண தேசத்தில் அட்ட வீரட்டம் செய்த சிவன் கோவில் (அந்தகன் அந்தகாசுரன் வதம் செய்த ஊர்கள்) புத்தமதம் சமண மதம் என்று வழி மாறிப் போன தமிழர்களை சிவன் அழித்த மயானம் ஊர்கள் சமாதி ஊர்கள் அவை. தமிழகத்திலும் அட்ட வீரட்டம் என்று எட்டு சிவனார் கோவில்கள் உண்டு. திருக்கோவிலூர் அட்ட வீரட்டம் கோவில். திருக்கோவிலூர் வீரட்டேஸ்வர் கோவிலில் பள்ளி பள்ளேளர் பள்ளேளா மக்களின் குரு அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியாரை சிவன் டாகினி என்ற ஆந்தையாக மாற்றி வைத்துள்ளார். அந்தகாசுரன் வதம் சிலை. சிவன் உடல் முழுக்க மண்டை ஓட்டு மாலை. சூலத்தில் அந்தகன் என்ற காமக் கொடூரனை குத்தி உள்ளார். இந்த அந்தகன் பெயரில்தான் ஆந்திராவே அமைந்து உள்ளது. அந்தக பிரதேசம் தான் ஆந்திரா. இந்த அந்தகன் காமத்தால் கண் குருடாகி பெற்ற தாயையே பார்வதியையே உமையம்மையையே மனைவியாக்கிட துடித்தவன். இந்த அந்தகனையே தலை வெட்டி கஜமுகனாக கணபதியாக கணங்களின் அதிபதியாக கணாதிபதியாக விநாயகராக மாற்றினார்கள் என்றும் சொல்வார்கள்.
ஒடியா அட்டபிரட்ட கோவிலுக்கும் தமிழக திருக்கோவிலூர் திருக்கடவூர் அட்ட வீரட்ட கோவில்களுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ச்சி செய்து நூல் வெளியிடணும்.

கோனார்க் சூரியன் கோவில் கோனார் அகம் என விரிகிறது. கோனார் என்ற தமிழர் ஆயர் சாதிப் பெயர் ஒரிசா பெங்காலில் இன்றும் உண்டு. பாலர் பால் என்ற சாதிப் பெயர் தமிழரும் ஒரிசா பெங்காலில் தமிழ் ஆயர் ஆயி ஆஹிர் யாதவர் குடிகளே. தயிர் தஹி ஆனது போல ஆயர் ஆஹிர் ஆனது.

கட்டாக் என்ற ஒட்டியாண ஒடியா ஊர் குடகு குடக் என்ற பழந் தமிழ் கோங்கண கொங்கண ஊர் பெயர் போல உள்ளது.

கட்டுரையாளர் செய்தி=
தமிழர்களும் பண்டைய வட இந்திய நகரங்களும்

புகழ்பெற்ற நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.6ஆம் 5ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் "சாவகம்" எனப்படும் இந்தோனேசியாத் தீவுகள் அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும் அப்பாதுரை குறிப்பிடுகிறார்.  வின்சென்ட் ஆர்தர் சுமித் போன்ற வெளி நாட்டு வரலாற்றறிஞர்கள், தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தன என்கின்றனர். திரு சுகாப், கென்னடி, வார்மன், சேசு, சுவெல் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் தமிழர்கள் உலகளாவிய அளவில் வணிகம் செய்தனர் என்கின்றனர். ஆகவே மிகப் பண்டைய காலத்திலேயே தமிழரசுகள் மாபெரும் கடல் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தைப் பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழிபெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாக அவர்களின் கடற்படை களுக்கிடையேயான ஐக்கியக் கூட்டணி இருந்துள்ளது. 

அயல்நாடு மட்டுமின்றி தமிழர்கள் கடல்மூலமாக கங்கை நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தாமரலிபதி (TAMRALIPTI) என்ற துறைமுகம் வழியாக கங்கை நதியில் உள்ள வட நாட்டு நகரங்களை அடைந்து அங்கும் தமது வணிகத்தை நிலை நாட்டினர் என்கிறார் நரசய்யா. பட்டினப்பாலையில் உள்ள "கங்கைவாரியும் காவிரிப் பயனும்" என்ற வரிகளும், நற்றிணையின் "கங்கை வங்கம் போகுவர் கொல்லோ" என்ற பாடல் வரிகளும் நரசய்யாவின் சொற்களை உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் வடமேற்கே அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதே காலகட்டத்தில் கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த தாமிரலிபத (Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். இந்த இரண்டு நகரங்களும் தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயர்களாகும். 

'பண்டைய ஒரியாவின் கடல்வணிகப் பெருமை' என்கிற கட்டுரையை ஒரிசா ரிவியூ(ORISSA REVIEW) என்கிற மாத இதழில் எழுதிய பாலபத்ர காதை, 'தந்தபுர' என சமண, புத்த நூல்களில் குறிப்பிடப்படும் பண்டைய கடற்கரைத் துறைமுகம் என்பது பண்டைய பாளூர் துறைமுகமாகும் எனவும், தமிழில் பல்+ஊர்= பாளூர் என்பதன் வடமொழிப்பெயர் தான் 'தந்தபுர' என ஆயிற்று எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி (DR.PRAFULLA CHANDRA MOHANTY) எழுதிய கட்டுரையில் ஒரிசாவில் உள்ள பண்டைய துறைமுகமான பாளூர் என்பது தமிழ்ப் பெயராகும் என பேராசிரியர் எஸ். இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார். அதேமாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் காரவேலன் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியிடம் இருந்து கைப்பற்றிய கலிங்கத்தின் முக்கியத் துறைமுகநகராக இருந்த பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது என குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது மீண்டும் தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனலாம். 

அதே இதழில் MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய இரு கட்டுரைகளில் சொல்லப்பட்ட கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ்ப் பெயரோடு தொடர்புடையனவாகும். இந்நகரங்களில் 'தாமிரலிபத' தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் 'பட்டினம்' என்கிற தமிழ்ப் பெயரைக் கொண்டுள்ளன. தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப்பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ்ப் பெயராகும். 

வட இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள குசராத் பகுதிகளிலும் பட்டினம் என்ற பெயர்கள் கொண்ட நகரங்கள் இருந்துள்ளன. ஆகவே பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய வட இந்திய கடற்கரை நகரங்கள் அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வந்து வணிகம் செய்த போது உருவான நகரங்கள்தான் மும்பாய், கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களாகும். அதுபோன்றுதான் கி.மு. 500 அல்லது அதற்கு முன்பிருந்து தமிழர்கள் வட இந்திய நகரங்களோடு வணிகம் செய்தபோது உருவாகியவைதான் இந்த நகரங்களாகும். இத்தரவுகள் கி.மு. 500 அல்லது அதற்கு முன்பிருந்தே  தமிழர்கள் இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளையும், இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, அங்கு பல நகரங்களையும் உருவாக்கியுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 145-151, 155-158,

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி