அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்: (1) "நசி, மசி" என்றிட எமனையும் வெல்லலாம். (2) "மசி, நசி" என்றிட மன்னனும் மாண்டிடுவான். (3) "நங், நங்" என்றால் கெடுதல் நிகழாது. (4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் ஓடும். (5) "வங், வங்" என்றால் உலகமும் வசியமாகும். (6) "வசி, வசி" என்றால் பீடைகள் விலகும். (7) "மசி, மசி" என்றால் சகல விஷங்களும் இறங்கும். (8) "அசி, அசி" என்றால் செல்வம் அமோகமாக பெருகும். (9) "உசி, உசி" என்றால் செல்வம் யாவும் ஒழிந்து போகும். (10) "மசி, நசி, நசி, மசி" என்றால் பேய் பிசாசுகள் ஓடும். (11) "சிவ, சிவ" என்றால் தீவினைகள் அழியும். இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து சித்தர்களின் குரல் சிவ shangar
மலையூர் "மம்பட்டியான்" வாழ்ந்த வரலாறு .... சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன் மம்பட்டியான். இந்த மம்பட்டியானை கதாபாத்திரமாக வைத்து, "மலையூர் மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமாப்படம் வெளிவந்தது. தியாகராஜன்,சரிதா நடித்த இந்தப்படம் ஓகோ என்று ஓடி வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம். மம்பட்டியான் சாதாரண ஆள் அல்ல. 27 கொள்ளை, 9 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். போலீஸ் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு காடுகளில் 5 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்தவன். ஆனால் காதல் மோக உருவில் எமன் அவனுடைய உயிரை பறித்துக்கொண்டான். சுருக்கமாக சொன்னால் மம்பட்டியானின் வாழ்க்கை, மர்ம கதைகளில் வரும் சம்பவங்கள் போல இருக்கும். மம்பட்டியானின் உண்மை பெயர் அய்யாத்துரை. சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் சரகம் கொல்காரனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தை பெயர் மொட்டையன். மம்பட்டியானுக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் பெயர் சின்னப்பிள்ளை என்கிற நல்லம்மாள். இவளுக்கு நல்லப்பன் என்ற மகனும், பாப்பா என்ற மகளும்
வந்தாரை வாழ வைக்கும் தென் பொதிகை மலை தமிழ்க் குறுமுனி அகத்தியர் கூடம்! ---------------------------------------------------------------------- திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 1868மீட்டர் அதாவது 6129 அடி உயரத்தில் உலக நன்மைக்காகத் தவமிருக்கும் அகத்தியரை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்ய ஆர்வம் உடையவரா நீங்கள்...!? திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்! இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது! இதை
Comments
Post a Comment