கதம்பர்கள் கடம்பர்கள் கந்தா கடம்பா கரவேலா காரவேளா கதிர்காமா என்று ஆப்கானிஸ்தான் குஜராத் மராட்டியம் கொங்கணம் கன்னடம் துளு தமிழகம் இலங்கை வரை ஆண்டவர்கள் தமிழர்கள் வேளிர்கள் வேள் முருக வேள் சிவன் பிள்ளைகள் குமாரர்கள் Khmer கம்போடிய அங்கோர் வாட் ஆங்கொரு வாடிகை கட்டிய குமாரர்களும் தமிழ் வேள்களே.

*#முருகன்
#ருசிகரத் தகவல்கள்* …2…….
#முருகனுக்கு…#அரோஹரா …

முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்"என்கிற பெயரில் காவியம் இயற்றியவர்மகாகவி களிதாசர்.

#யானை மேல் வீற்றிருக்கும் முருகன்உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில்செதுக்கப்பட்டுள்ளது.

#கதம்ப அரசர்கள் கார்த்திகேயனைவழிபட்டனர்.

 #முருகப் பெருமானின் திருவருளால் சாபவிமோசனம் பெற்ற பராசர முனிவரின்ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி,சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்இவர்கள் மீனாய்

இருந்து, முருகன்அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

#முருகனின் கையில் உள்ள வேல்இறைவனின் ஞானசக்தி எனப் பெயர்பெறும்.

#முருகனே திருஞான சம்பந்தராய்அவதாரம் செய்தார் என்று பலர்பாடியுள்ளனர்.

#பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்கோலங்களில் முருகனை மட்டுமே காணமுடியும். பிற கடவுள்களுக்கு இல்லாதசிறப்பு இது.

#தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக்கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை,திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,குடுமியான்மலை, சித்தன்னவாசல்,வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

#முருகக் கடவுளின் அடையாளப் பூகாந்தள் மலர்க் கண்ணியாகும்.

#கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர்,சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள்எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடிவரும் திருவிழா ஆகும்.

#தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக்கடவுள் என்றும், செந்நிற மேனியன்,சேவற்கொடியோன், சூரியனுக்குஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

#பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர்நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

#மலைகளில் குடி கொண்டுள்ளகுமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர்உள்ளது.

#முருகனுக்கு விசாகன் என்றும் ஒருபெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில்சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

#முருகனின் கோழிக் கொடிக்கும்குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக்கோழியே வைகறைப் பொழுதில் ஒங்காரமந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவதுஆகும்.

#பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம்,வைராக்கியம் என்கிற ஆறு குணங்களேஆறுமுகம்.

#பல்லவ மன்னர்கள் முருகனைப் பரமபாகவதன், பரம மகேஸ்வரன், பரமவைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்றுஅழைத்தார்கள் என்று செப்பேடுகள்கூறுகின்றன.

#எத்தனை துன்பம் எதிர் கொண்டுவந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடியநொடிப் பொழுதிலேயே துன்பங்கள்எல்லாம் தொலைந்து போகும் என்றுமுருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத்தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

#வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,ஜெர்மன், இலங்கை, பாரிஸ்,ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா,சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன்கோவில்கள் உள்ளன.

#முருகப் பெருமானுக்கு 
உகந்த மலர்கள்முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன்முதலியவை ஆகும்.

#இறை_உணர்வோடு
#ஸ்ரீராமஜயம்

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி