Posts

எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்?

எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டமாகிவிடும்?  நன்கு அறிந்த நண்பர்களே, நாம் நாசமாய் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்.தனக்கு போகவே தானமும் ,தர்மமும் என பெரியோர்கள் கூறியுள்ளனர். கஷ்டத்தோடு கண்கலங்கி வந்து நின்று கடன் கேட்கும் பொழுது, இரக்கம் உள்ள மனிதர்கள் யாவரும் எளிதாக கடன் கொடுத்து விடுகின்றனர். கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது  அதே நன்றியுடன் பலர் நடந்து கொள்வதில்லை.  கடன் வாங்கும்போது நாம் அவர்கள் வீட்டிற்கு நாயாய்  அலைந்தோம் அல்லவா? கடனை திருப்பி வாங்க அவர்கள் நம் வீட்டிற்கு அலையட்டும் என்ற மனப்பான்மையுடன் பலர் உள்ளனர்.  மானம் மரியாதைக்கு பயந்து கடனை கண்ணியத்துடன் கட்டுபவர்கள் மிகக் குறைவு.   கடன் கொடுத்தவருக்கே விபூதி அடிப்பவர் பலர். 1. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் ,சனி திசை ,சனி புத்தியில்  கடனாக கொடுத்த பணம்  திரும்பக் கிடைப்பது மிக அரிது. 2. ஏழரை சனியில் ,விரய சனியில் கொடுத்த பணமும் ஸ்வாகா. 3. ராகு திசையில் ராகு ,சனி புத்தியில் கொடுத்த பணமும் அம்பேல். 4. அட்டமாதிபதி திசையில், அட்டமச் சனியில்  கொடுத்த காசு ...

எந்தநாள் நல்லநாள் auspicious day

Image
நல்ல  நாள் #எந்தநாள்_நல்லநாள்: ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்றுஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.  அப்படிப்பட்ட சமயங்களில்அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லதுபஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒருசிலர்ஏதாவது ஒரு ஜோசியர்அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாப் பார்த்து நாள் குறிக்காமல்அவரவர்ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்லநாள் பார்க்கலாம். நாள் என்ன செய்யும்? நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும்சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும்அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவதுகிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன்,,வெள்ளி  ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்...

கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்

கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்; பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,மகம்,பூரம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை ,பூராடம்,பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களில் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது . நீண்ட தூர பயணம் ஆகாது.அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல் ஆகாது.இந்த நட்சத்திரங்களில் கடன் பெர்றவர் மீள்வதும்,கடன் கொடுத்தவர் திரும்ப பெறுவதும்,பயணம் செய்தவர் வெற்றியுடன் திரும்புவதும் ,மருத்துவம் வெற்றி பெறுவதும் கடினம்.

Homams and its benefits

□□□சில ஹோமங்களும் அதன் பயன்களும்□□□ 1. கணபதி ஹோமம் :  தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். 2. சண்டி ஹோமம் :  பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். 3. நவகிரஹ ஹோமம் :  கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். 4. சுதர்ஸன ஹோமம் :  ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். 5. ருத்ர ஹோமம் :  ஆயுள் விருத்தி உண்டாகும். 6. மிருத்யுஞ்ச ஹோமம் :  மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும். 7. புத்திர கமோஷ்டி ஹோமம் :  புத்திர பாக்கியத்தை உண்டாக்கும். 8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும். 9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும். 10. லக்ஷ்மி குபேர ஹோமம் :  செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும். 11. தில ஹோமம் :  சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். 12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் :  நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். 13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். 1...

மிக அழகிய பாசுரம் ஓம் சிவாய நம

திருச்சிற்றம்பலம் நற்றுணையாவது நமச்சிவாயவே #ஐந்தாம்திருமுறை -#பொது-#சித்தத்தொகைழுத்திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர் #97 #சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர் அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே. (2026) - - - - - பொருள் உரை: "சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் ." - - - - - #அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர் உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம், வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே. (2027) - - - - - பொருள் உரை: "அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் ." - - - - - #ஆதி ஆயவன், ஆரும் இலாதவன், போது சேர் புனை நீள் முடிப் பு...

Agathiyar

அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்! காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார். அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது. 1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு 'தேவதாரு மரம்'. 2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் 'திருத்தோடகன்' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது. 3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் 'திரிபூரணம்' என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது. 4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மா...

மாஞ்சோலை ஊத்து குதிரைவெட்டி நாலுமுக்கு

#ஆசியாவின்_அழகுபூமி_மாஞ்சோலை மாஞ்சோலை சுற்றுலா - திருநெல்வேலி.. கொளுத்தும் அக்னி நட்சத்திர 104 டிகிரி வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வந்தால் முதலை மூச்சு விடுகிறார்கள் பொதுமக்கள். காலை முதல் மாலை வரை வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பங்குனி, சித்திரையின் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் மக்களை நரக வேதனையில் தள்ளுகிறது. இதிலிருந்து மீளுவதற்கு சிறிதளவு வெப்பம் தணிந்த குளிர்ச்சி கிடைத்தால் அதை சொர்க்கமாகவே கொண்டாடலாம். அந்த சொர்க்கத்தைத் தருகிறது நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். தரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கிறது மாஞ்சோலை. அதற்கும் மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு. மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம். சாதாரணமாக அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் 50 டிகிரி அளவு வெயிலின் உஷ்ணமிருந்தாலும் குளிர்ச்சியாகவே காணப்படுவை இந்த மாஞ்சோலை, குதிரைவெட்டி ஊத்து நாலுமுக்கு எஸ்டேட்கள். குளிர் காலமான நவ...