tag:blogger.com,1999:blog-3539036593746113772024-03-13T09:20:42.093+05:30pasug blogPasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.comBlogger340125tag:blogger.com,1999:blog-353903659374611377.post-22589555859077349982024-03-03T14:51:00.001+05:302024-03-03T14:51:50.116+05:30Police Station Katta Panchayat Civil Case<div>சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அதனை ஒரு மனுவாக கருதி, சமுதாய சேவைப் பதிவேட்டில் அதனை பதிவு செய்து கொண்டு புகார்தாரருக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும். மனுவை பெறும் காவல் அலுவலர், புகார் பெற்ற விபரத்தை உடனடியாக மூத்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது.</div><div><br></div><div>சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றாலும், அவர் அதற்கான அதிகாரத்தை குவிமுச சட்டப் பிரிவு 149 ன் மூலம், அதாவது ஒரு காவல் அலுவலர், பிடியாணை வேண்டாக் குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் மூலம் அத்தகைய அதிகாரத்தை பெறுகிறார். குவிமுச சட்டப் பிரிவு 149 ஆனது ஒவ்வொரு காவல் அலுவலரும் ஏதாவதொரு பிடியாணை வேண்டாக் குற்றம் புரியப்படுவதை தடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறுக்கிடலாம் என்று கூறுகிறது. ஆனால் சிவில் மனுக்களை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதமானது.</div><div><br></div><div>ஏற்கனவே நீதிபதி இரகுபதி அவர்கள் CRL. OP. NO - 5426/2009 என்ற வழக்கில், காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்றும், அது கடுமையாக தண்டிக்க பட வேண்டிய குற்றம் என்றும் கூறியுள்ளார்.</div><div><br></div><div>மேலும் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றால் எதிர் தரப்புக்கு குவிமுச சட்டப் பிரிவு 160 ன் கீழ் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.</div><div><br></div><div>W. P. No - 6453/2010 என்ற வழக்கில் நீதிபதி திரு. பால் வசந்தகுமார் அவர்கள் போலீசார் சிவில் வழக்குகளில் தலையிட்டு சட்ட விரோதமாக கட்டப் பஞ்சாயத்து செய்வதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.</div><div><br></div><div>2004 - 1 - CTC - 130 என்ற வழக்கில் காவல்துறையினர் சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் ஒரு புகார் மனுவாக கருதி விசாரிக்கலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.</div><div><br></div><div>ஆக சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க தடை ஏதுமில்லை. ஆனால் அந்த விசாரணை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-48010220827066878122024-03-03T10:06:00.001+05:302024-03-03T10:06:34.618+05:30Murder fight between wife husband closed room court case argument<div>நடு இரவில் பூட்டப்பட்ட வீட்டிற்கு உள்ளே இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்த சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி கத்தியால் குத்திக் கொண்டதில், மனைவி உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரி தான் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 106 ன்படி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரி தான் அவருடைய மனைவியை கொலை செய்துள்ளார் என்றும், மருத்துவமனையில் எதிரி கொடுத்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தும், கணவனான எதிரி தான் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது சட்டப்படி தவறாகும். </div><div>ஒரு நபருக்கு இறப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அளிக்கப்படும் வாக்குமூலம் தான் மரண வாக்குமூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த மரண வாக்குமூலத்தை அளித்த நபர் பின்னர் உயிர் பிழைத்து விட்டால் அதனை மரண வாக்குமூலமாக கருத முடியாது. அதேசமயம் அவரால் அளிக்கப்பட்ட மரண வாக்குமூலத்தை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவும் கருத முடியாது ஏனெனில் ஒப்புதல் வாக்குமூலத்தை கு. வி. மு. ச பிரிவு 164ல் கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பதிவு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமானது ஆகும். </div><div>வீட்டிற்குள் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சில முக்கிய விஷயங்களை நுணுக்கமாக பரிசீலனை செய்ய வேண்டும். இறந்து போன மனைவியால் கணவனுக்கு முதலில் காயம் ஏற்பட்டதா? அல்லது கணவனால் மனைவிக்கு முதலில் காயம் ஏற்பட்டதா? என்கிற விஷயத்தை ஆழமாக பரிசீலிக்க வேண்டும். இந்த மாதிரி கொலைகளில் மூன்று வித கோணங்களை பார்க்க முடியும். ஒன்று கணவன் மனைவியை முதலில் குத்தியிருந்தால் அதற்கு பழிவாங்கும் விதமாக மனைவி கணவனை திரும்ப குத்தியிருக்கலாம். மற்றொன்று மனைவி முதலில் கணவனை குத்தியிருந்து அதற்கு பழிவாங்கும் விதமாக கணவன் மனைவியை குத்தியிருக்கலாம். மூன்றாவதாக ஒரே சமயத்தில் இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குத்தியிருக்கலாம். இவ்வாறான நிலையில் யார் முதலில் வலுச் சண்டைக்கு சென்றவர் (Aggresor) என்பதை அறிய வேண்டும். </div><div>இதில் கணவன் தற்காப்புரிமையை (Private Defence) கோர முழு உரிமை உண்டு. ஒருவேளை கணவன் அந்த தற்காப்புரிமையை நீதிமன்றத்தில் கோரா விட்டாலும், அந்த வழக்கிலுள்ள சாட்சியங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் கணவன் தன்னை காத்துக் கொள்வதற்காக அந்த செயலை செய்துள்ளார் என்று நீதிமன்றம் கருதினால் கணவன் தற்காப்புரிமையை கோராமல் இருந்தாலும் அவருக்கு அந்த உரிமையின் பயனை நீதிமன்றம் வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் " James Martin Vs State of Kerala (2004-2-SCC-203)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது கணவன், மனைவி இருவரும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் யார் சண்டையை முதலில் இழுத்தவர் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். யார் முதலில் சண்டையை இழுத்தது என்று அரசால் நிரூபிக்கப்பட முடியவில்லை என்றால் அந்த சந்தேகத்தின் பலனை எதிரியான கணவனுக்கு வழங்க வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்றம் "Bagavan Singh Vs State of M. P (2002-4-SCC-85)" என்ற வழக்கில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. </div><div>எனவே ஒருவரை யூகத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டிக்க கூடாது. ஒரு குற்றச் செயல் குறித்து எவ்வளவு பலமான சந்தேகம் இருந்தாலும், அந்த சந்தேகத்தை மெய்பிக்கப்பட்டதற்கு இணையாக கருத முடியாது. எனவே யூகத்தின் அடிப்படையில் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை அளிப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. A. NO - 166/2015, DT - 1.7.2016, Manickam Vs Inspector of police, Valappadi P. S, Salem District (2016-4-MLJ-CRL-356)</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-30250855302297383742024-02-21T10:52:00.001+05:302024-02-21T10:52:40.785+05:30Mistake of Fact CRPC 157(1) and Final Report<div>*ஒரு குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு மேல் விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டதற்கு பின்னர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்தும்படி, காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அமர்வு நீதிமன்றத்தில் புகார்தாரர் (Defacto Complainant) கோர முடியும்*</div><div><br></div><div>நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும். *உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401"* என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன. </div><div><br></div><div>ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் *"வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)"* என்ற வழக்கில், ஒரு குற்ற வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க, அந்த வழக்கின் புகார்தாரர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு காவல்துறையினருக்கு ஓர் உத்தரவினை பிறப்பிக்கும்படி குற்றவியல் நடுவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கலாம் என்று கூறியுள்ளது. </div><div><br></div><div>ஒரு குற்ற வழக்கில் புலனாய்வு என்பது மிகவும் விரிவான ஒரு பகுதியாகும். அந்த புலனாய்வு என்பது காவல்துறையின் செயல்பாடுகளுக்குள் ஒன்றாகும். அந்த புலனாய்வு பகுதிக்கு காவல்துறையினர் தான் தலைமைப் பொறுப்பிலுள்ள நபராவார். ஆனால் அத்தகைய *அதிகாரம் கொண்ட காவல்துறையை யார் கண்காணிப்பது?* *அவர்களை சட்டத்தின் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது?* அவர்கள் வரம்பு மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அவர்களை தட்டி கேட்பது யார்? அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்பதை அவர்களுக்கு சொல்லக்கூடியவர் யார்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் உட்பட பல சட்டங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில் மீது அவர்களுடைய கவனத்தை செலுத்தும் படி செய்யக்கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது? நியாயமான, ஒரு சார்பில்லாத, திறமையான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய பொறுப்பு யாருக்கு உள்ளது? புகார்தாரரின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தக்கூடிய நபர் யார்? </div><div><br></div><div>காவல்துறையினருக்கு ஒரு வழக்கை பதிவு செய்யக்கூடிய அதிகாரமும், ஒருவரை கைது செய்யக்கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக நாட்டில் அந்த காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற நபர் நீதிமன்றமாக தான் இருக்க முடியுமே தவிர, வேறு யாரும் இருக்க முடியாது. அந்த அதிகாரம் பெற்ற அமைப்புக்கு காவல்துறையினர் பதில் அளிக்க கடமைபட்டவராவார்கள். அந்த வகையில் காவல்துறையினரின் புலன் விசாரணை திசை மாறிப் போகின்ற நிலையில்,திறம்பட புலனாய்வு இல்லாத நிலையில், பாரபட்சமாக இருக்கக்கூடிய நிலையில், அந்த புலனாய்வில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியது அவசியமாகும். </div><div><br></div><div>நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஒரு குற்ற வழக்கில் உண்மை வெளியே கொண்டு வரப்பட வேண்டும். நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும். </div><div><br></div><div>உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களும். நீதிபதிகளும் சட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சட்டம் என்பது உயிர் வாழ்கிற ஓர் உயிரினம் ஆகும். அந்த சட்டம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் அடிப்படை சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். </div><div><br></div><div>எனவே ஒரு குற்ற வழக்கினை மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோர புகார்தாரருக்கு உரிமை உள்ளது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. </div><div><br></div><div>CRL. RC. NO - 1779/2016, DT - 11.8.2016 </div><div>V. Mohan Vs Inspector of police, East Police Station, Thanjavur </div><div>(2016-2-TNLR-265)</div><div><br></div><div> இதில், ஒவ்வொரு வழக்கின் குற்ற எண்ணும் (Crime Number) குறிப்பிடப்பட்டு, புலனாய்வு காலக் கிரமப்படி பதிவு செய்யப்படுகிறது. </div><div><br></div><div>புலனாய்வு செய்கிற காவல் அலுவலர் ஒவ்வொருவரும், புலனாய்வில் தாம் எடுக்கும் நடவடிக்கைகளை இந்த நாட்குறிப்பில் அந்தந்த நாளில், தமக்கு வந்து சேர்ந்த நேரம், புலனாய்வை தாம் ஆரம்பித்த நேரம், முடித்த நேரம், தாம் பார்வையிட்ட இடம் அல்லது இடங்கள் மற்றும் தம் புலனாய்வின் மூலம் நிச்சயிக்கப்பட்ட விவரங்களை பற்றிய குறிப்பு ஆகியவற்றை பதிவு செய்து வருதல் வேண்டும் </div><div><br></div><div>குற்றவியல் நீதிமன்றம் எதுவும், அந்நீதிமன்றத்தில் பரிசீலனை அல்லது விசாரணையிலுள்ள வழக்கு சம்பந்தமான காவல் நாள்குறிப்புகளை தருவிக்கலாம். மற்றும் அத்தகைய நாள்குறிப்புகளை அவ்வழக்கில் சாட்சியமாக அல்லாமல், ஆனால் அத்தகைய பரிசீலனை அல்லது விசாரணையில் அந்நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் இதை பயன்படுத்தலாம். </div><div><br></div><div>எதிரிக்கோ அவரது முகவருக்கோ அத்தகைய நாள்குறிப்புகளை வரவழைக்கும் உரிமை கிடையாது. அவற்றை நீதிமன்றம் பார்வையிட்டிருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே அவற்றை பார்ப்பதற்கும் அவருக்கோ, அவர்களுக்கோ உரிமை கிடையாது. ஆனால் அவற்றை எழுதிய காவல் அலுவலர் தான் நினைவுபடுத்தி கொள்வதற்காக நீதிமன்றத்தில் பயன்படுத்தினால், அல்லது அத்தகைய காவல் அலுவலரின் கூற்றை முரண்படுத்துமானால், இந்திய சாட்சிய சட்டம் பிரிவுகள் 145 மற்றும் 161 ன் நிலவரத்திற்கேற்ப இயங்குதல் வேண்டும்.... </div><div><br></div><div>*பிழை வழக்கு* (*மிஸ்டேக் ஆப் பேக்ட்*)</div><div><br></div><div>ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR ( Community Service Register) எனப்ப்டுகின்ற "மனு ஏற்புச் சான்றிதழ்" அளிக்க வேண்டும். </div><div><br></div><div>அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். </div><div><br></div><div>புகார் அளித்த நபருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்க வேண்டும்.</div><div><br></div><div>ஒரு வேளை கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், , குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 - (Cr.P.C) பிரிவு -155ன்படி புகாரையும், புகார் தந்தவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். </div><div><br></div><div>மேற்கண்டவாறு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.</div><div><br></div><div>அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது உத்தரவிட முடியும். இதனையே நாம் கோர்ட் டைரக்ஷன் என்கிறோம். </div><div><br></div><div>நீதிமன்ற உததரவுக்குப் பின், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157ன் கீழ் அந்த வழக்கை காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இது போன்ற வழக்குகளில் இர்ண்டுக்கு மேலான குற்றங்கள் செய்யப்பட்டிருந்து, அவற்றில் ஏதேனும் ஒரு குற்றம் கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கானது குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 155(4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடிய வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.</div><div><br></div><div>அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. </div><div><br></div><div>ஒருவேளை புலனாய்வு செய்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிக்கு தோன்றினால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(1)ஆ-ன் கீழ் அந்த வழக்கை அவர் புலனாய்வு செய்யக் கூடாது. இதனையே "பிழை வழக்கு" (Mistake of Fact) என்கிறார்கள்.</div><div><br></div><div>அதே நேரத்தில் ஒரு வழக்கை புலனாய்வு செய்வதாக இல்லை என்பதை குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(2)ன் கீழ், புகார் அளித்தவர்க்கு விசாரணை அதிகாரி உடனடியாக அறிவிக்க வேண்டும்.</div><div><br></div><div>காவல் நிலை ஆணைகள்-660ன்படி "பிழை வழக்கு" (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்ட பின், விசாரணை அதிகாரியானவர், வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை புகார் அளித்தவர்க்கு (காவலர் படிவம் எண்:90ல்) செய்ய வேண்டும்.</div><div><br></div><div>புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், அறிக்கை அனுப்ப வேண்டும்.</div><div><br></div><div>அதன் பிறகு நீங்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணை அதிகாரியால் பிழை வழக்கு (Mistake of Fact) என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,இது பற்றி ஏதேனும் கூற விரும்பினால். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் முறையிடலாம்! என்று புகார் தந்தவர்க்கு நீதிமன்ற நடுவர் சம்மன் அனுப்புவார்கள்.</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-15722990016233768342024-02-20T18:05:00.001+05:302024-02-20T18:05:29.871+05:30Avvai Shanmugam Pillai Manonmaneeyam Sundaram Pillai Boys Drama Company Kannusamy Pillai related news<div>இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?</div><div><br></div><div>சினிமா உலகம் தோன்றுவதற்கு முன் நாடகக் கலையே பிரதானமாக இருந்த காலகட்டம் அது. இன்று இருப்பது போல் ஷூட்டிங் நடத்தி, எடிட் செய்து வெளியிடும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டம். ஆன் தி ஸ்பாட்டிலேயே மேடையில் தோன்றி வசனங்களை மறக்காமல் சிங்கிள் டேக்கிலேயே பாடி நடிக்க வேண்டும். பக்கவாத்தியம் தனி. இவ்வாறு நாடகக் கலைகளில் கைதேர்ந்தவர்கள்தான் பின்னாளில் தமிழ் சினிமாவினை ஆண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி., உள்ளிட்ட நடிகர்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர்தான் டி.கே. சண்முகம்.</div><div><br></div><div>டி.கே. சண்முகம் என்றால் பலருக்கும் தெரியாது. அவ்வை சண்முகம் என்றால் இந்தத் தலைமுறைக்குத் தெரியும். ஏனெனில் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் இவரின் பெயரிலிலேயே எடுக்கப்பட்டது. மேலும் சென்னையின் பிரதான சாலை ஒன்றும் இவர் பெயரிலியே அமைந்துள்ளது.</div><div><br></div><div>அப்படி என்ன செய்தார் நாடகத் துறைக்கு என்கிறீர்களா? தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்; நாடக உலகிலும், திரை உலகிலும் பிரபல நட்சத்திரங்களின் குருவாகத் திகழ்ந்தவர்; "அண்ணாச்சி" என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர்.</div><div><br></div><div>1912 ஏப்ரல் 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் பிறந்த டி.கே. சண்முகம் "மனோன்மணியம்" தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மருமகன் ஆவார். இவரின் தந்தை கண்ணுசாமிப்பிள்ளை சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த பாய்ஸ் கம்பெனியில், சண்முகம் உள்ளிட்ட தனது 4 மகன்களையும் சேர்த்து விட்டார். பின்னர் சதாவதானம் தெ. பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரிடமும் சண்முகம் பயிற்சி பெற்றார்.</div><div><br></div><div>இவரது நான்கு சகோதரர்களும், "பால சண்முகானந்த சபா" என்ற சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினர். சமுதாய சீர்திருத்தங்களையும், சரித்திரங்களையும் இக்குழுவினர் நடத்தினர். "குமாஸ்தாவின் பெண்", "அந்தமான் கைதி", "உயிரோவியம்", "முள்ளில் ரோஜா", "மனிதன்", "சிவலீலா" போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.</div><div><br></div><div>1943-ல் "அவ்வையார்" நாடகத்தில் அவ்வையார் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 31 வயதே ஆன சண்முகம், பெண் வேடத்தில் அதுவும் வயது முதிர்ந்த பாட்டியாக, தனது தோற்றத்தையும், பேச்சையும் மாற்றிக் கொண்டு, அவ்வையாராகவே வாழ்ந்துக் காட்டினார். இதன் காரணமாக அவர் "அவ்வை சண்முகம்" என்று அழைக்கப்பட்டார்.</div><div><br></div><div>நாடகங்களை நடத்திக்கொண்டே சினிமா உலகம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்ததார் அவ்வை சண்முகம். "மேனகா", "பெண் மனம்", "பில்கணன்" முதலிய படங்களில் நடித்த சண்முகம், பின்னர் அறிஞர் அண்ணா கதை – வசனம் எழுதி ஏவி.எம். தயாரித்த "ஓர் இரவு" படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்கள் நடித்த போதிலும் சிவாஜிகணேசன் நடித்த "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் சுப்பிரமணிய சிவாவாக சண்முகம் உணர்ச்சிகரமாக நடித்துப் பெயர் பெற்றார். "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் டி.கே.பகவதி ராவணனாக பிரமாதமாக நடித்தார்.</div><div><br></div><div>குழந்தைகளுக்காக நாடகம் நடத்த விரும்பிய சண்முகம், கவிஞர் திருச்சி பாரதனைக் கொண்டு, "அப்பாவின் ஆசை", "பலாப்பழம்" ஆகிய நாடகங்களை எழுதச்செய்து அரங்கேற்றினார். இரண்டு நாடகங்களிலும், அப்போது 10 வயது சிறுவனாக இருந்த கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. பேசும்போது இவர் அடிக்கடி 'எங்கள் சண்முகம் அண்ணாச்சி' என்று டி.கே.சண்முகம் அவர்களை நினைவுபடுத்துவார்.</div><div><br></div><div>டி.கே.சண்முகத்தின் நாடகக் குழுவில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, ஆர்.எம்.வீரப்பன், "பிரண்ட்" ராமசாமி, எம். ஆர்.சாமிநாதன், டி.கே.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம், எம்.எஸ். திரவுபதி, டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் பின்னர் திரை உலகில் நுழைந்து மிகவும் புகழ் பெற்றனர். தமிழ் நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு காரணமாக தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுகிறார்.</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-10475392680468667662024-02-16T16:35:00.001+05:302024-02-16T16:35:35.060+05:30Power of Attorney full details<div>பவர் ஆப் அட்டார்னி பத்திரம் (இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33)</div><div> பவர் ஆப் அட்டார்னி பத்திரம்</div><div><br></div><div>பவர் ஆப் அட்டார்னி பத்திரம் என்னும் பவர் பத்திரங்களைப் பற்றி இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) ல் பிரிவு 33-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.</div><div><br></div><div>எந்த வகைப் பவர் பத்திரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் பத்திரம் என்று இந்த பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. </div><div><br></div><div>அதன் உட்பிரிவுகள் 33(1), 33(2), 33(3) & 33(4).</div><div><br></div><div>ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் போது, அதை எழுதிக் கொடுப்பவரே கையெழுத்துச் செய்ய வேண்டும். அவரே நேரில் பதிவு அதிகாரி முன்பு சென்று, அதை எழுதிக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டு அதை பதிவு செய்து கொடுக்க வேண்டும். சில வேளைகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும். அப்போது, அவருக்காக அவரின் ஏஜென்ட் அந்த வேலையைச் செய்யும்படி அவர் ஒரு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுப்பார். அதையே பவர் பத்திரம் என்று இந்த சட்டப் பிரிவு சொல்கிறது.</div><div><br></div><div>பிரிவு 33(1)(ஏ): (இந்தியாவில் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):</div><div><br></div><div>இந்தியாவுக்குள் வசிப்பவர் இப்படி ஒரு பவர் பத்திரம் எழுதி அவரின் ஏஜெண்டை நியமித்தால், அந்த பவர் பத்திரத்தை, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து இருக்க வேண்டும். </div><div><br></div><div>பிரிவு 33(1)(பி): (இந்த சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர் பவர் எழுதிக் கொடுத்தால்):</div><div><br></div><div>இந்த பதிவுச் சட்டம் அமலில் இல்லாத பகுதியான இந்தியாவுக்குள் வசிப்பவர், பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு கோர்ட் மாஜிஸ்டிரேட் முன்பு எழுதி கையெழுத்து செய்து, அதை அந்த மாஜிஸ்டிரேட் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். </div><div><br></div><div>பிரிவு 33(1)(சி): (இந்தியாவுக்கு வெளியே வசித்து வருபவர் பவர் எழுதிக் கொடுத்தால்):</div><div><br></div><div>பவர் எழுதிக் கொடுப்பவர் இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் வசித்து வந்தால், அவர் பவர் எழுதிக் கொடுப்பதாக இருந்தால், அவர் அந்த பவர் பத்திரத்தை அங்கேயே அவர் வசிக்கும் பகுதியில் எழுதி, அதை, அந்த நாட்டில் உள்ள நோட்டரி வக்கீல் அல்லது கோர்ட் நீதிபதி, அல்லது இந்திய தூதரக அதிகாரியான கான்சல் (Consul), அல்லது துணை தூதரக அதிகாரியான வைஸ்-கான்சல் (Vice-Consul) அதிகாரியிடம் ஒப்புதல் கையெழுத்தை பெற வேண்டும். அதை இந்தியாவுக்கு அனுப்பினால், அவர் நியமித்த பவர் பத்திரத்தை இந்தியாவில் உள்ள பவர் ஏஜென்ட் அதற்குரிய முத்திரை தீர்வை செலுத்தி பதிவு செய்து கொள்வார். அதை உபயோகித்துக் கொள்ளலாம்.</div><div><br></div><div>இப்படி வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரங்களை இரண்டு வகையாக சொல்லாம். ஒன்று - காமன்வெல்த் நாடுகளில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரம். மற்றொன்று - காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி போன்ற ஆட்சிகள் நடக்கும் நாடுகள். காமன்வெல்த் என்பது பழைய பிரிட்டிஷ் அரசாட்சி செய்த நாடுகளை இவ்வாறு சொல்லலாம். அங்கு, இந்தியாவில் இருப்பதை போன்றே வக்கீல்கள் கோர்ட் முறை இருக்கும். எனவே அந்த நாடுகளில் பவர் பத்திரம் எழுதினால், அதை அங்குள்ள நோட்டரி வக்கீல் முன்னர் அத்தாட்சி செய்து கொண்டால் போதுமானது. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள். இங்கு காமன் லா என்னும் சட்ட முறை உள்ளது.</div><div><br></div><div>ஆனால், காமன்வெல்த் நாடுகள் அல்லாத மன்னர் ஆட்சி போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர் இந்த பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தான் சென்று அத்தாட்சி செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிய அலைச்சலும் இருக்கும். ஏனென்றால், அவர் வசிக்கும் பகுதியில் இந்திய தூதரகம் இல்லாமலும் இருக்கும். எனவே அவர் அங்குள்ள பெரிய நகரத்துக்கு சென்று அங்கு இருக்கும் இந்திய தூதரகத்தில் அதைச் செய்ய வேண்டி வரும். துபாய், யூ.ஏ.ஈ. (எமிரேட்), ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்டான், போன்ற நாடுகளில் காமன் லா சட்ட முறை இல்லை. </div><div><br></div><div>விதிவிலக்கு:</div><div><br></div><div>இந்தியாவுக்குள் வசிப்பவர் ஒரு பவர் பத்திரத்தை எழுத நினைத்தால், அதை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் நேரில் சென்று எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி) ல் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், மற்றும் அரசு அதிகாரிகள் இவர்கள் ஒரு பவர் பத்திரத்தை எழுதினால், அதை அவர்கள் நேரில் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பதிவு செய்யாமலேயே அவர்களின் பவர் பத்திரம் செல்லும். </div><div><br></div><div>பிரிவு 33(2): மேற்சொன்னபடி எழுதிய பவர் பத்திரங்கள், (பிரிவு 33(1)(ஏ) & 33(1)(பி)-ல் சொல்லியுள்ளபடி, அவர்கள் தான் எழுதிக் கொடுத்து, பதிவாளர் முன்பு சென்று பதிவு செய்து கொடுத்துள்ளார்கள் என்று அதை பார்க்கும் வேறு பதிவாளர் கருதினால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரை நேரில் அழைக்காமல், அந்த பவர் பத்திரமே போதும் என்று ஏற்றுக் கொள்ள அடுத்த நடவடிக்கையை பதிவாளர் செய்ய வேண்டும். </div><div><br></div><div>பிரிவு 33(3): பிரிவு 33 (1)(சி) ன்படி எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள், (அதாவது, உடல்நிலை சரியில்லாதவர், சிறையில் இருப்பவர், அரசு அதிகாரிகள் இவர்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரங்கள்) அவர்கள் தான் எழுதிக் கொடுத்துள்ளார்கள் என்று பதிவாளர் கருதினால், (நம்பினால்) அதை ஏற்றுக் கொண்ட அடுத்த நடவடிக்கையை தொடரலாம். சந்தேகமாக இருப்பதாக கருதினால், அந்த பதிவாளரே நேரி்ல், உடல்நிலை சரியில்லாதவரின் வீட்டுக்கோ, அல்லது சிறையில் இருப்பவராக இருந்தால் சிறைக்கோ, அல்லது அரசு அதிகாரியை நேரில் சந்தித்தோ, அது அவர் எழுதிக் கொடுத்தது தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவாளரால் நேரில் செல்ல முடியவில்லை என்றால், அதற்கு ஒரு கமிஷன் அதிகாரியை நியமித்து அவரைக் கொண்டு சரி பார்த்துக் கொள்ளலாம். </div><div><br></div><div>பிரிவு 33(4): இவ்வாறு ஒரு பவர் பத்திரம் மேலே சொல்லியுள்ளபடி எழுதி பதிவாகி (அதாவது அத்தாட்சி செய்யப்பட்டு) இருந்தால், அதன் அசல் பத்திரத்தை ஒரு பதிவாளரிடம் கொடுக்கும்போது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு வேறு சாட்சியம் வேண்டும் என்று கேட்க கூடாது என்று இந்த உட்பிரிவு சொல்கிறது.</div><div><br></div><div>**</div><div><br></div><div>தமிழ்நாட்டில் திருத்தல் சட்டம்;</div><div><br></div><div>தமிழ்நாட்டில் இந்த பவர் பத்திரங்களை வியாபார நோக்கங்களுக்கு வாங்குவதால், அதிகமான தில்லு முல்லுகள் ஏற்பட்டன. எனவே அதை சரி செய்யும் பொருட்டு, 2012-ல் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, சொத்துக்களை விற்கும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை பதிவு அலுவலகத்தில் உள்ள புத்தகம் 1-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த பவர் பத்திரத்தின் பதிவு விவரம் அந்த சொத்தின் வில்லங்கத்தின் அட்டவணையில் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. குடும்ப உறுப்பினரை ஏஜென்டாக நியமித்தால் அதற்கு ரூ.1000 பதிவுக் கட்டணம் என்றும், வெளி நபராக இருந்தால் அதற்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் என்றும் திருத்தம் செய்துள்ளது. மேலும், 2012 முதல் எழுதிப் பெறப்படும் சொத்தின் விற்பனை செய்யும் அதிகாரம் கொண்ட பவர் பத்திரங்களை, அதை பதிவு செய்த ஒரு மாதத்துக்குள் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்துக்கு மேல் கடந்து விட்டால், அந்த பவர் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக ஒரு அரசு மருத்துவரிடம் LIfe Certificate என்னும் சான்றிதழ் பெற்று அந்த பவர் பத்திரத்தை உபயோகப்படுத்தலாம் என்று விளக்கம் சொல்லி உள்ளது. </div><div><br></div><div>சொத்தின் விற்பனை சம்பந்தப்பட்ட பவர் பத்திரங்களை வேறு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது, சில நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. அது புத்தகம்-1ல் பதிவு செய்ய வேண்டிய பவர் ஆகி இருப்பதால், அந்த சொத்து இருக்கும் பதிவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி, அனுமதி பெற்றே பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே கிரயப் பத்திரத்தை நேரில் சென்று எழுதிக் கொடுப்பதே நல்லது என்றும், இப்படி வேறு பதிவு அலுவலகத்தில் இந்த பவர் பத்திரம் பதிவு செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக இருக்கிறது. இதை சுலபமாக செய்ய அரசு முன்வர வேண்டும்.</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-37128181071397313202024-02-05T12:13:00.001+05:302024-02-05T12:13:18.374+05:30Case & Counter Case. Mistake of Fact. Mistake of Law.<br><div>Mistake of Fact or Law</div><div>Case in Counter :-</div><div>பிழை வழக்கு ( MF) எதர் வழக்கு ( counter case) பற்றிய சட்ட விழிப்புணர்வு- சந்துரு,கரூர்.</div><div>பிழை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் PSO-658 to 669 காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்,குற்றவியல் நீதித்துறை நடுவர் அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெளிவாக கூறுகிறது. PSO-660 முறையாக புகார்தாரர்க்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அதனை முதல் தகவல் அறிக்கையுடன் இணைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். PSO-661 இறுதி அறிக்கை( RCS)களை வட்ட ஆய்வாளர் மூலமாக (I.O.) விசாரணை அதிகாரி அனுப்ப வேண்டும்.அதன் மீது ஆணை பிறப்பிக்கப்பட்டால் குறிப்புரை எழுதித் தாமதமின்றி குற்றவியல் நடுவர்க்கு அனுப்ப வேண்டும்.மேற்கொண்டு விசாரணை செய்யுமாறு ஆய்வாளர் நிலைய அலுவலர்க்கு அணையிடலாம் அல்லது தானே விசாரணை செய்யலாம்.PSO-662 விசாரணை அலுவலர்(IO),ஒரு வழக்கை திட்டமிட்ட பொய்யென்றோ வன்ம்மான பொய்யென்றோ அறிக்கை செய்கையில்,அவர்,இறுதி அறிக்கையில் வாதிக்கு எதிராக நடவடிக்கைவெடுக்க உத்தேசிக்கிறாரா இல்லையா என்றும்,அப்படி உத்தேசிக்காவிட்டால் அவ்வாறு செய்யாத்தன் காரணங்களை கூற வேண்டும்.PSO-664 இதச( IPC) 182 or 211 ஆவது பிரிவின் கீழ்க் குற்றச்சாட்டுகளை,காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் உட்கோட்ட ( DSP) அலுவலரின் உத்தரவுகளின்றித் தொடங்கலாகாது.PSO-665 Cr.P.C.,195 குற்றச்சாட்டு:- </div><div>(1) இதச(IPC) 211 ஆவது பிரிவின் தண்டிக்கத்தக்க ஒரு குற்றத்திற்காக அக்குற்றம் யாதேனுமொரு நடவடிக்கையில் அல்லது அது சம்பந்தமாகச் செய்யப்பட்டிருப்பதாகச் சாற்றும்போது அந்நீதிமன்றமோ அல்லது அல்லது அது கீழ்ப்பட்டுள்ள வேறெந்த நீதிமன்றமோ எழுத்தில் கொடுத்த புகாரின் மேலன்றி மற்றப்படி,வழக்கு எதுவும் தொடரக்கூடாது.(2)ஆகவே,கீழ்க்கண்டவநேர்வுகளில் அத்தகைய நீதிமன்றத்தின் எழுத்து மூலமான குற்றச்சாட்டு ஒன்று அவசியமாகும்.(அ) முதல் குற்றச்சாட்டு காவலருக்குக் கொடுக்கப்பட்டு,அவர்களால்வக்குற்றம் பொய்யென்று தீர்ப்பு செய்யப்பட்ட ஒரு வழக்கில்,குற்றவியல் துறை நடுவர் நீதிமன்ற நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கும்போது,(ஆ) கு.வி.மு.ச.Cr.P.C.,159 ஆவது பிரிவின் கீழ்ப் புலனாய்வின்றி ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அது நீதிமன்ற நடவடிக்கையாக அமையாது.PSO-668 Orders of Magistrate on Final Reports- இறுதி அறிக்கைகளின் பேரில் குற்றவியல் துறை நடுவரின் ஆணைகள். குற்றவியல் வழக்கு நடைமுறை விதித்தொகுப்பு,173- ஆவது பிரிவின் கீழ் ஒரு வழக்கு பொய்யானதென்று குற்றவியல் துறை நடுவருக்குச் செய்யப்படும் இறுதி அறிக்கைமேல்,அப்பிரிவே காட்டுகின்றபடி மேற்கொண்டு காவலர் விசாரணை செய்யும்படி குற்றவியல் துறை நடுவர் உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம்.ஆனால்,அவ்வழக்கு,பொய்யானதென்று காவலரே செய்த அறிக்கைக்கு எதிராக அவ்வழக்கில் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்யும்படி காவலருக்குக் கட்டளையிட குற்றவியல் துறை நடுவருக்கு உரிமையில்லை.இவ்வழக்கு பொய்யானதென்று காவலர் செய்த அறிக்கையின் மேல் குற்றவியல் துறை நடுவர் மனநிறைவு அடையாவிட்டால்,கு.வி.மு.ச.190- ஆவது பிரிவின் கீழ்,அவருக்குத் தானாகவே நடவடக்கை எடுத்துக்கொள்ள அதிகாரம் உண்டு.</div><div>விசாரணை முடியும்ஙமுன்வெப்பொழுதும் நீதிமன்றம் கு.வி.மு.ச.(Cr.P.C) பிரிவுவ216,385(2),386-ன் படி புதிய குற்றச்சாட்டை சேர்க்கவும்,மாற்றவும் முடியும் என உச்ச நீதிமன்றம் Bhimanna V/s State of Karnataka 2012(9)SCC 650; 2012 AIR SC 3026: 2012(7)SCR 909. 2012(8) Scale 457,2013AIAR( Crl.)861 வழக்கில் உத்தரவிட்டுள்ளது.</div><div>எதிர் வழக்கில் (Case in Counter)- ஒரு குற்ற வழக்கில் காவல்துறையினர் அறிக்கையைத் தாக்கல் செய்த்தற்கு பிறகு அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்குக் ( further Investigation)காவல் துறையினருக்கு உத்தரவிடும்படி கோரி நிகழ்நிலைப்( Defecto Complaintant) ஓர்எதிர் விண்ணப்பத்தைத் Protest Petition)தாக்கல் செய்யவதற்கு நிகழ்நிலைப் புகார்தார்ருக்கு உரிமையுள்ளது எனுச்ச நீதிமன்றம் பகத் சிங் எதிர் காவல்துறை ஆணையாளர் AIR 1985 SC 1285, 1985-2-SCC-537, 1985-1- MLJ- CRL-536 உத்தரவிட்டுள்ளது.</div><div><br></div><div>எதிரியாக உள்ள வழக்கில் கு.வி.மு.ச.பிரிவு 315 ல் சாட்சியாக குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சி கூறலாம்.</div><div>எதிர் வழக்கில் (case in counter)ஒரே அரசு வழக்கறிஞர் APP இருவழக்கிற்கும் முன்னிலையாக முடியாது.சென்னை உயர்நீதிமன்றம் கணேசன் A-1 Vs.அரசு State Rep. என்ற வழக்கில் 28-4-2011 ல் நீதியாரசர் எஸ். நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.</div><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-87607226076777766132024-01-31T08:02:00.000+05:302024-01-31T08:03:02.615+05:30How to see Ayodhya Ram Mandir. Rameswaram to Ayodhya Train<br><div>குறைந்த செலவில் அயோத்தியா மட்டும் செல்ல நினைப்பவர்கள்</div><div>கவனத்திற்கு.</div><div><br></div><div>ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது . </div><div>*ரயில் எண் 22613* RMM AYC</div><div><br></div><div>சரியாக புதன் கிழமை காலை 9 மணிக்கு செல்கிறது.</div><div><br></div><div> *அயோத்தியா தாம்* என்ற ரயில் நிலையம் இறங்கவும்</div><div><br></div><div>அயோத்தியா கன்டோன்மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 km மீண்டும் வர வேண்டும்.</div><div><br></div><div>அயோத்தியா தாம் இறங்கி நேராக சரயு காட் (ராம் காட்) 2 km நடந்து தான் வர வேண்டும்.</div><div><br></div><div>அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 km திரும்பினால், *அனுமான் காரி* என்னும் அனுமான் கோட்டை காவலாக இருக்கும் கோவிலை அடையலாம்.</div><div><br></div><div>50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீ தொலை உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி நுழைவு வாயிலை அடையலாம்.</div><div><br></div><div>பெரிய luggage bag இருந்தால் போலீஸ் checking முன்பே வலது பாகத்தில் locker அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , watch தவிர) வைத்து செல்லலாம். </div><div><br></div><div>உள்ளே சென்றவுடன் இலவச பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய bag, hand bag, இடுப்பு belt, mobile, watch முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் )</div><div><br></div><div> மீண்டும் உள்ளே பாதையில் சென்றவுடன் , ஒருவர் பின் ஒருவர் கணக்கில் இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம்.</div><div><br></div><div>200 மீ நடந்தால் கோவில் முன் மண்டபத்தில் இருந்தே ஶ்ரீ பால ராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20 metre தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம்.</div><div><br></div><div>பூந்தி அல்லது சர்க்கரை கற்கண்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.</div><div><br></div><div>வெளி வரும் வழியில் purse, mobile, bag போன்ற பொருட்களை பெற்று கொண்டு நுழைவு வா அடையலாம்.</div><div><br></div><div>பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோவில் அருகே வந்து தசரதன் மாளிகை தரிசனம் செய்யலாம்.</div><div><br></div><div>இங்கு தான் ஶ்ரீ ராமன், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆடி பாடி விளையாடிய உப்பரிகை பார்க்கலாம்.</div><div><br></div><div>அங்கிருந்து வெளி வந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால் ஒரு பழைய வீட்டில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் தரிசிக்கலாம் </div><div><br></div><div>பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக பக்க வாட்டு சந்தில் நுழைந்து பின் புறம் சென்றால் ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாக கட்டி கொடுத்த மாளிகை காணலாம்.</div><div><br></div><div>வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள்.</div><div><br></div><div>வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது.</div><div><br></div><div>முன்பதிவு செய்து விட்டு செல்லலாம்.</div><div><br></div><div>ஒவ்வொரு புதன் கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட் இருந்து சென்னை அல்லது ராமேஸ்வரத்திற்கு ரயில் திரும்புகிறது. *22614 AYY RMM* </div><div><br></div><div>Lucknow வந்தும் சென்னை திரும்பலாம்</div><div><br></div><div>9532065447 சீத்தா ராம் பியாஸ் குஞ் இந்த இடத்தில் நாங்கள் தங்கினோம்.</div><div><br></div><div>சூடு தண்ணீர் , கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது</div><div><br></div><div>உங்கள் சந்தேகங்களுக்கு</div><div>K.முருகராஜ்</div><div>9840927502</div><div> *ஆத்ம சரண ஆலயம் தபோவனம்*</div><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-34230027946569440472024-01-26T16:09:00.001+05:302024-01-26T16:09:22.863+05:30அம்மாவின் வாசனை. கவிதை ஆசிரியர் கனிமொழி MP. DMK. இசை = இளையராஜா. பாடியவர் = பவதாரிணி. <div>அம்மாவின் வாசனை. </div><div>கவிதை ஆசிரியர் </div><div>கனிமொழி MP. DMK. </div><div>இசை = இளையராஜா. </div><div>பாடியவர் = பவதாரிணி. </div><div><br></div><div>அம்மாவின் வாசனை... </div><div>என் அம்மாவின் வாசனை... </div><div><br></div><div>அது சந்தனம் இல்லை... </div><div>ஜவ்வாதோ... </div><div>இப்போது அழகான புட்டிகளில் விற்கும் வாசனை திரவியமோ... </div><div>எதைப்போலும் இல்லாத</div><div>புது மணம். </div><div>அம்மாவின் வாசனை... </div><div>என் அம்மாவின் வாசனை... </div><div><br></div><div>சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது.... </div><div><br></div><div>சின்ன வயதில் அவளைக் கட்டிக் கொண்டு தூங்கிய போது....</div><div><br></div><div>மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்... </div><div><br></div><div>அவள் அவிழ்த்துப் போட்ட சேலையைக் சுற்றிக் கொண்டு திரிந்த போது.... </div><div>அவளின் வாசனையை பூசிக் கொண்டதாய் தோன்றும்.... </div><div><br></div><div>முதல் மழையின் மண் வாடை போல் மூச்சு முட்ட நிறுத்தி வைத்துக் கொள்ளத் தூண்டும்.... </div><div><br></div><div>அம்மாவின் வாசனை... </div><div>என் அம்மாவின் வாசனை... </div><div><br></div><div>எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு மருந்தாய்... மருந்தாய்.... </div><div><br></div><div>அவள் மடியில் தலை வைத்து தூங்கிய போதெல்லாம்.... </div><div><br></div><div>பாதுகாப்பாய்.... </div><div><br></div><div>என்னைத் தழுவிய மணம்.... </div><div><br></div><div>அவள் என்பதே... ஏ.... ஏ... </div><div><br></div><div>அவள் என்பதே... அதுவும் சேர்ந்து தான்... (திமுக தலைவர் மு கருணாநிதி???) </div><div><br></div><div>வளர்ந்து விட்ட மனதின் சுவர்கள்... </div><div><br></div><div>அவளைக் கட்டிக் கொள்ள விடாத போதும்.... </div><div>ஆ ஹாஹா..... </div><div><br></div><div>மெத்தென்ற இதழாய் வருடிப்போகும்.... </div><div><br></div><div>தேவைகளின் தடம் பிடித்து </div><div>தூரம் வந்து விட்ட போதும்... </div><div><br></div><div>எனக்கு மட்டுமே புரியும் அவளின் கருவறை மணத்தை.... </div><div><br></div><div>அள்ளி... அள்ளி... என்... </div><div>வீடெங்கும் தெளித்து.... </div><div><br></div><div>சுருண்டு படுத்து.... </div><div><br></div><div>தூங்கிப் போக வேண்டும்... </div><div><br></div><div>அம்மாவின் வாசனை.... </div><div><br></div><div>என் அம்மாவின் வாசனை... </div><div><br></div><div>26 ஜனவரி 2024...</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-54536975826059612502024-01-22T11:07:00.001+05:302024-01-22T11:07:43.273+05:30உந்தீ பற திருவாசகம் உந்தீபற<div>14. திருவாசகம்-திருவுந்தியார்</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 1</div><div><br></div><div>வளைந்தது வில்லு விளைந்தது பூசல்</div><div>உளைந்தன முப்புரம் உந்தீபற</div><div>ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>இறைவனது வில் வளைந்தது; வளைதலும் போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`வில்` என்பது. ஈற்றில் உகரம் பெற்று வந்தது. `வில் சிவ பெருமானுடையது` என்பதும், `பூசல் (போர்) அசுரருடையது என்பதும் ஆற்றலான் விளங்கின.</div><div>உளைந்தன - துயருற்றன. ``முப்புரம்`` என்றது இரட்டுற மொழிதலாய் முன்னர் அதன்கண் வாழ்வார் மேல் நின்று, உளைதல் வினையோடும், பின்னர் முப்புரத்தின் மேலதேயாய் வேதல் வினையோடும் இயைந்தது.</div><div>ஒருங்கு - ஒருசேர. ``உடன்`` என்றது. `நொடியில்` என விரைவு குறித்தவாறு. ``வெந்த வாறு`` என்றதன்பின், `பாடி` என்பது வருவிக்க. இதனுள் இனிவரும் திருப்பாட்டுக்களிலும் வேண்டு மிடங்களில் இவ்வாறே இதனை வருவித்து முடிக்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 2</div><div><br></div><div>ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்</div><div>ஓரம்பே முப்புரம் உந்தீபற</div><div>ஒன்றும் பெருமிகை உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>இறைவர் திருக்கரத்தில் இரண்டு அம்பிருக்கக் கண்டிலேம்; கண்டது ஓரம்பே; அந்த ஓர் அம்பும் திரிபுரம் எரித்தற்கு அதிகமேயாயிற்று என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>``ஏகம்பர் தங்கையில்`` என்றதனை முதலில் வைத்து. ``ஓரம்பே`` என்றதன்பின், `கண்டனம்` என்பது வருவிக்க, ``முப்புரம்`` என்று அருளினாராயினும், `புரம் மூன்று` என உரைத்தல் திருவுள்ள மாம். ஆகவே, `இறைவர் கையில் இருந்தது ஓரம்பே; பகையாய் எதிர்ந்த புரங்களோ மூன்று; எனினும், அவைகளை அழித்தற்கு அவ் ஓர் அம்புதானும் சிறிதும் வேண்டப்படாதாயிற்று` என்பது பொருளாதல் அறிக. சிவபெருமான் திரிபுரங்களை அம்பு முதலிய வற்றால் அழியாது, புன்சிரிப்பானே அழித்தமையின், அவ் ஓர் அம்பும் வேண்டப்படாததாயிற்று. இதனால், இறைவன், எல்லாவற்றையும் கரணத்தானன்றிச் சங்கற்பத்தானே செய்தலைக், கூறியவாறு. ``பெருமிகை`` என்றதன்பின், `என்று` என்பது வருவிக்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 3</div><div><br></div><div>தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்</div><div>அச்சு முறிந்ததென் றுந்தீபற</div><div>அழிந்தன முப்புரம் உந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>தேவர்கள் தேரினை இணைத்து விடுத்ததும், அத் தேரில் இறைவன் திருவடியை வைத்ததும், தேரினது அச்சு முறிந்தது; எனினும் முப்புரங்கள் அழிந்தன என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`தைத்து` என்பது `தச்சு` எனப் போலியாயிற்று. `தைத்தல், அழகுபடச்செய்தல் என்பது, ``வேலன் தைஇய வெறியயர் களனும்` (தி.11 திருமுருகா -222.) என்றற்றொடக்கத்தனவாக வருவனவற்றான் அறிக. மகளிர்க்கு, `தையலார்` என்னும் பெயரும், தம்மை ஒப்பனை செய்துகொள்ளுதலாகிய காரணம் பற்றிவந்ததாம். `தையல்` என ஒருமைக்கண் வருதல் ஆகுபெயர். இப்பொருட்டாகிய `தையல், தைத்தல்` என்பன பிற்காலத்தில், துன்னத்திற்கும், துன்னம் செய்தற்கும் உரியவாயின. ஒருவகைத் தொழிலை உணர்த்தும் `தச்சு` என்னும் பெயர்ச் சொல், இங்கு, வினையெச்சமாய் வந்த `தச்சு` என்பதனின் வேறு. `தச்சு` என்பது அடியாக, `தச்சன், தச்சர்` முதலிய ஒட்டுப் பெயர்கள் பிறக்கும். ``தச்சு`` என்றதற்கு, `தேர்` என்னும் செயப்படு பொருளும், அச்சுமுரிதலுக்கு, அஃது என்னும் எழுவாயும், வருவிக்க.</div><div>``தாம்`` என்றது, முன்னை திருப்பாட்டில், ``ஏகம்பர்`` எனக் குறிக்கப்பட்டவரை என்பது வெளிப்படை. `இடலும்` என்பது விரித்தல் விகாரம் பெற்றது. `அடியிட்டபொழுதே அச்சு முறிந்தமை அவரது வன்மையையும், பிறரது மென்மையையும் எளிதின் விளக்கும்` என்பதும், `தேர் அச்சு முறிந்ததாயினும் அவர் முப்புரத்தை அழிக்கக்கருதியது முடிந்தேவிட்டது` என்பதும் குறித்தவாறு. ``அழிந்தன`` என்றதற்குமுன், `ஆயினும்` என்பது வருவிக்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 4</div><div><br></div><div>உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு</div><div>எய்யவல் லானுக்கே உந்தீபற</div><div>இளமுலை பங்கனென் றுந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>பிழைக்க வல்லவராயிருந்த மூவரையும் கயிலைக்குத் துவார பாலகராகச் செய்து முப்புரத்தை அம்பேவி எரிக்க வல்லவனாகிய உமாதேவி பாகனைக்குறித்து உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>உய்ய வல்லார் - யார் யார் எத்துணை மயக்க உரை களைக் கூறினும் அவற்றைக் கேளாது நன்னெறியைக் கடைப்பிடிக்க வல்லவர், ஒரு மூவராவார், `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்னும் பெய ருடைய அசுரர். இவர்கள் திரிபுரத்தில் வாழ்ந்தவர்கள். திரிபுரத் தலைவர்களாகிய, `தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்பவர், முதலில் தாங்களும் சிவநெறியில் ஒழுகிப் பிறரையும் ஒழுகச்செய்து, பின்பு திருமால் புத்த வடிவம் கொண்டு நாரத முனிவ ருடன் சென்று புத்த சமயத்தைப் போதித்தபொழுது புத்தர்களாய்ச் சிவநெறியைக் கைவிட, ஏனையோரும் அவ்வாறே சிவநெறியைக் கைவிடவும், இம்மூவர் மட்டில் சிவநெறியிலே நின்றமைபற்றி இவரை, ``உய்ய வல்லார்`` என்றும், சிவபெருமான் திரிபுரத்தை எரித்த பொழுது இம்மூவரை மட்டில் அழியாதவாறு காத்து ஏனைய பலரை யும் அழித்தமை பற்றி ``ஒரு மூவரைக் காவல்கொண்டு எய்ய வல்லான்`` என்றும் அருளிச்செய்தார்.</div><div>``மூவார் புரங்கள் எரித்த அன்று</div><div>மூவர்க் கருள்செய்தார்`` -தி.1 ப.69 பா.1</div><div>என இதனைத் திருஞானசம்பந்தரும் எடுத்தருளிச்செய்தல் காண்க. `திரிபுரங்கள் அழிக்கப்பட்ட பொழுது அழியாது பிழைத்தவர் மேற்குறித்த மூவரே` என்பதையும், பின்பு அவர்கள், சிவபெருமான் திருவருளால் அப்பெருமானது வாயில் காவலராயினர்` என்பதையும்,</div><div>முப்பு ரங்களின் மூவர் புத்தன்</div><div>மொழித்தி றத்தின் மயங்கிடாது</div><div>அப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு</div><div>ளாற்றின் நின்றனர் ஆதலால்</div><div>பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை</div><div>நாவின் மன்னவர் போல்எரி</div><div>தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில்</div><div>நிற்ப வர்க்கிடர் சாருமோ.</div><div>சுதன்மன் என்று சுசீலன் என்று</div><div>சுபுத்தி என்று சொலப்படும்</div><div>அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்</div><div>அருள்சு ரந்துமை பாகனார்</div><div>இதம்வி ளங்க வரங்கள் வேட்ட</div><div>விளம்பு மின்என அங்கவர்</div><div>பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி</div><div>வாயில் காப்பருள் என்றனர்.</div><div>என்றற் றொடக்கத்துக் காஞ்சிப் புராணச் செய்யுட்காளான் அறிக. காஞ்சிப் புராணத்துள் இங்ஙனம் `வாயில் காப்பு` எனப் பொதுப்படக் கூறி இருப்பினும், `மூவருள் இருவர் வாயில் காவலரும், ஒருவன் இறைவனது திருக்கூத்திற்கு மத்தளம் முழக்குபவனும் ஆயினர்` என்பதை,</div><div>மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்</div><div>இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்</div><div>காவ லாளர்என் றேவிய பின்னை</div><div>ஒருவன் நீகரி காடரங்காக</div><div>மானை நோக்கியோர் மாநடம் மகிழ</div><div>மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த</div><div>தேவ தேவநின் திருவடி யடைந்தேன்</div><div>செழும்பொ ழில்திருப் புன்கூருளானே.</div><div>(தி.7 ப.55 பா.8) என்னும் சுந்தரர் திருமொழியான் உணர்க. `சுதன்மன், சுசீலன், சுபுத்தி` என்ற முறைபற்றி, `இறுதியிற் சொல்லப் படுபவனே மத்தளம் முழக்குவோனாயினன்` என்று கொள்ள இடம் உண்டு. வாயில் காவலரை இப்பொழுது, `திண்டி, முண்டி` என்கின்றனர். இவ்வசுரர்கள் சிவபெருமான் கோயிலில் வாயில் காவலர் ஆயினமையை அடிகளும் திருத்தோணோக்கத்து ஒன்பதாம் திருப்பாட்டில் குறித்தருளுதல் காண்க. ``வல்லானுக்கு`` என்றதும், ``என்று`` என்றதும் எஞ்சிநின்ற, `பாடி` என்பதனோடு முடியும். பாடுதலுக்கு இறைவனைச் செயப்படு பொருளாகவன்றிக் கொள்வோனாகக் கருதினமையின், ``வல்லானுக்கு`` எனக் குவ்வுருபு கொடுத்து ஓதினார்; பின்வருவனவற்றிற்கும் இது பொருந்தும். இத் திருப்பாட்டால், சிவபெருமானது அருளையும், ஆற்றலையும் வியந்தவாறு.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 5</div><div><br></div><div>சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்</div><div>ஓடிய வாபாடி உந்தீபற</div><div>உருத்திர நாதனுக் குந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>தக்கனது யாகம் குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர மூர்த்தியாகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>``சாடிய`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் `சாடியதனால்` என்பது கருத்தாயிற்று. இங்கு `வேள்வி` எனப்படுவது, தக்கனுடையதே என்பது இனிது விளங்கிக் கிடக்கும். உருத்திரநாதன், இருபெயரொட்டு. `உருத்திர நாதனுக்குப் பாடி` என இயையும். இனி, `உருத்திரநாதனாகிய ஒருவனுக்குத் தேவர் பலர் உடைந்தோடிய வாற்றைப் பாடி` என உரைப்பினுமாம்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 6</div><div><br></div><div>ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று</div><div>சாவா திருந்தானென் றுந்தீபற</div><div>சதுர்முகன் தாதையென் றுந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>பிரம தேவனுக்குத் தந்தையாகிய, திருமாலானவன் தக்கன் வேள்வியில் அவியுணவைக் கொண்டு, அந்நாளில் வீரபத்திர ரால் பெரிதும் தாக்கப்பட்டு உயிர் ஒன்றையுமே உடையவனாய் இருந்தான் என்று சொல்லி, உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>ஆவா, இரக்கக் குறிப்பு; இதனை, ``இருந்தான்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``சாவாதிருந்தான்`` என்றது. `உயிர் போதல் ஒன்றொழிய ஏனை எல்லாத் துன்பங்களையும் எய்தினான்` என்றவாறு. வீரபத்திரரது தண்டத்தால் மார்பில் அடியுண்டு மூர்ச்சை யுற்றுக் கிடந்த நிலையை இவ்வாறு அருளிச் செய்தார். திருமால் எய்தியதாக யாண்டுங்காணப்படும் இந்நிலையையே அடிகள் அருளிச் செய்ததன்றி, அவன் தலையறுப்புண்டதாக ஒரோவிடத்துக் கூறப் படும். அதனை அடிகள் அருளிச்செய்திலர். `உலகையெல்லாம் படைப்பவனைப் படைத்த பெரியோன்` என அவனது பெருமையை எடுத்துக் கூறுவார், ``சதுர்முகன் தாதை`` என்று மறித்தும் அருளிச் செய்தார்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 7</div><div><br></div><div>வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய</div><div>கையைத் தறித்தானென் றுந்தீபற</div><div>கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>கொடியவனாகிய அக்கினிதேவன் அவியுண்ண வளைத்த கையை வெட்டினான் என்று உந்தீபற, வெட்டுதலும் யாகம் கலங்கிற்று என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`வெம்மை யுடைவன்` என்னும் பொருளதாகிய, `வெய்யவன்` என்பது, `கொடியவன்` என்னும் நயத்தைத் தோற்று வித்து, ஒறுக்கப்படுதற்குரிய இயைபுணர்த்திநின்றது. `விருப்பமுடைய வனாய்` எனவும் உரைப்ப. திரட்டுதலுக்கு, `அவிப்பாகம்` என்னும் செயப்படுபொருள், முன்னைத் திருப்பாட்டினின்றும் வந்து இயையும்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 8</div><div><br></div><div>பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்</div><div>பார்ப்பதென் னேஏடி யுந்தீபற</div><div>பணைமுலை பாகனுக் குந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>பார்வதி தேவியைப் பகைத்துப் பேசின தக்கனை உயிரோடு வைத்துப் பார்ப்பதனால் சிவபெருமானுக்கு என்ன பயன்? என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`பர்வதம்` என்பது, `பருப்பதம்` என வருதல் போல, `பார்வதி` என்பது, `பார்ப்பதி` எனவந்தது. `மலைமகள்` என்பதே இதன் பொருள்; எனினும், இங்கு, `இறைவி` என்னும் பொருளதாய் நின்றது. பார்ப்பது - கண்ணோடுவது. `இறைவி என்று கருதாமல் ஏனையோர்போலக் கருதிய அறிவிலியாகிய அவன்மீது கண்ணோட்டஞ் செய்து இகழாதொழிதல் வேண்டா` என்றபடி. எனவே, `அவனை மிக இகழ்ந்தும், சிவனை மிகப்புகழ்ந்தும் பாடி ஆடு` என்றதாயிற்று. குற்றம் செய்தவரை ஒறுத்தல் அரசர்க்கு முறைமையாதல்போல, குற்றம் செய்தவரை இகழ்தலும் அறிவுடை யோர்க்கு முறைமையாதலின், இவ்வாறு அருளிச்செய்தார்</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 9</div><div><br></div><div>புரந்தர னாரொரு பூங்குயி லாகி</div><div>மரந்தனி லேறினார் உந்தீபற</div><div>வானவர் கோனென்றே உந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>இந்திரன் ஒரு குயில் உருக் கொண்டு ஒரு மரத்தில் ஏறினான்; அவன் தேவர்களுக்கு அரசன் என்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>புரந்தரன் - இந்திரன். பூ - அழகு. `தக்கன் வேள்வியில் வீரபத்திரருக்கு அஞ்சி இந்திரன் குயில் உருவங்கொண்டு ஓடி ஒளிந்தான்` என்பது வரலாறு. ``வானவர் கோன்`` என்றதும், முன்னர் ``சதுர்முகன் தாதை`` (தி.8 திருவுந்தியார். பா-6.) என்றதனோடு ஒப்பது. ``கோன்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 10</div><div><br></div><div>வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை</div><div>துஞ்சின வாபாடி உந்தீபற</div><div>தொடர்ந்த பிறப்பற உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`வெஞ்சினத்தால் தொடங்கிய வேள்வியையுடைய வியாத்திரனார்` என்க. வெஞ்சினம், சிவபெருமான்மீதெழுந்தது. வியாத்திரன் - மாறுபட்ட செலவினையுடையவன்; தக்கன். ``மெச்சன் வியாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.9) என்னும் திருத்தாண்டகத் தொடருள், ``வேறாக`` என்றதனால், இப்பெயர் தக்கனைக் குறித்தல் இனிதுணரப்படும். துஞ்சுதல் - அழிதல். ஈண்டுச் சிவபெருமானது வெற்றியையே பெரிதும் பாடுதல் பற்றி, தக்கன் உயிர்த்தெழுந்தமையை அருளாது, அவன் துஞ்சியது மாத்திரையே அருளினார். தொடர்ந்த - பண்டுதொட்டு விடாது வந்த, `பிறப்பு அறப்பாடி` என இயையும்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 11</div><div><br></div><div>ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்</div><div>கூட்டிய வாபாடி உந்தீபற</div><div>கொங்கை குலுங்கநின் றுந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>விதி - சிறுவிதி; தக்கன். `சிறுவிதி` என்னும் பெயர், பிரமன் மகனாயினமை பற்றிக் கூறப்படுவது. யாட்டின் தலையை அமைத்ததும் ஒறுப்பேயாகலின், இதுவும் வெற்றி கூறியதேயாயிற்று.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 12</div><div><br></div><div>உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே</div><div>கண்ணைப் பறித்தவா றுந்தீபற</div><div>கருக்கெட நாமெலாம் உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>நமது பிறவி ஒழியும் வண்ணம் அவிர்பாகத்தை உண்ண வந்த பகனது கண்ணை அவன் ஓடாமற் பறித்த விதத்தைப் பாடி உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`அவியை உண்ண` என வருவித்துரைக்க. பகன், ஆதித்தர் பன்னிருவருள் ஒருவன். `நாமெலாம் கருக்கெட` என மாற்றி, எஞ்சி நின்ற `பாடி` என்பதனோடு முடிக்க. ``கரு`` என்றது, `கருவில் வீழ்தல்` எனப் பொருள் தருதலின், `நாமெலாம் கருக் கெட` எனத் தொழில், முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டதாம்.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 13</div><div><br></div><div>நாமகள்நாசி சிரம்பிர மன்படச்</div><div>சோமன் முகன்னெரித் துந்தீபற</div><div>தொல்லை வினைகெட உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>நமது பழவினை ஒழிய, சரசுவதியின் மூக்கும் பிரமன் சிரமும் அற்று விழச் செய்து, சந்திரனைத் தேய்த்து, யாக பங்கம் செய்த செய்தியைக் குறித்துப் பாடி உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>``பட`` என்றதனை, ``நாசி`` என்றதனோடும் கூட்டி, `நாமகள் நாசி படவும், பிரமன் சிரம்படவும்` என உரைக்க. சோமன் - சந்திரன். முகன் - முகம்; போலி. னகரவொற்று விரித்தல். `முகம்` என்பது பாடமாயின், நகர வொற்று விரித்தலாம். `நெரித்தது` என்பது குறைந்து, `நெரித்து` என நின்றது. நெரித்தது - காலால் தேய்த்தது. இதன்பின், `பாடி` என்பது எஞ்சிநின்றது. `நெரிந்து` எனப்பாடம் ஓதி, அதனையும், `நெரிந்தது` எனக் கொண்டுரைத்தல் சிறக்கும். இதனுள், வீரபத்திரரால் நாமகள் மூக்கிழந்தும், பிரமன் தலையிழந்தும், சந்திரன் தேய்க்கப்பட்டும் போயினமை அருளப்பட்டது. இதனுள், ``பிரமன்` என்றது, முன்னர், ``விதி`` என்றதுபோல, தக்கனையே குறித்தது என்பாரும் உளர். தக்கனை, `சிறுவிதி` என்றல்போல, `சிறு பிரமன்` என்றல் வழக்கின்கண் இன்மையானும், தக்கன் தலையிழந்து மாற்றுத் தலை பெற்றமை முன்னர்க் கூறப்பட்டமை யானும் அது பொருந்து மாறில்லை.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 14</div><div><br></div><div>நான்மறை யோனு மகத்திய மான்படப்</div><div>போம்வழி தேடுமா றுந்தீபற</div><div>புரந்தரன் வேள்வியில் உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>பிரமனும் யாகாதிபனாகிய தக்கனும் இறந்து வீழ்தலும் இந்திரன் ஓடிப்போய் வழியைத் தேடுகிற விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>``வேள்வியில்`` என்றதனை முதலிற்கொள்க. நான் மறையோன் - பிரமன். அகத்து இயமான் - நடுவிடத்தில் இருந்த தலைவன்; தக்கன். `இயமானன்` என்பது, குறைந்து நின்றது; இது வேட்போனைக் குறிக்கும் ஆரியச் சொற்சிதைவு. ``இயமானன்`` என்றதன்பின்னும் உம்மை விரிக்க. `மகத்தியமான்` எனவும் பிரிப்பர். `பட` என்பது, `பட்டமையால்` எனக் காரணப்பொருளில் வந்தது. `புரந்தரன் தேடுமாறு` என இயையும். முன்னர், ``இந்திரனைத் தோள் நெரித்திட்டு`` (தி.8 திருவம்மானை-15.) என்றமையால், இங்கு, `போம் வழிதேடுதல்` என்றது, அங்ஙனம் தோள் நெரிந்து மன வலியிழந்தமையையேயாம். ஆகவே, `நான் மறையோனும், அகத்தியமானும் பட` என்றது மனவலி இழத்தற்குக் காரணங்கூறும் அளவிற்றாய் வந்ததாம். `வேட்பிப்போனும், வேட்போனும் பட்டமையின், அவியைப் பெறுவோருள் முதல்வனாகிய இந்திரன் ஆங்கு நிற்க வல்லனோ` என்றபடி. முதற்கண் அவிபெறுவோனாகிய இந்திரனது எளிமை மிகுதியுணர்த்தற்கு அவன் குயிலாகி ஓடினமை முன்னர்க் கூறப்பட்டதாயினும், `தோள்நெரிந்த பின்னரே அவ்வாறு ஓடினான்` என்றற்கு, இதனை அருளிச்செய்தார் என்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 15</div><div><br></div><div>சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை</div><div>வாரி நெரித்தவா றுந்தீபற</div><div>மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>சூரியனது பற்களைத் தகர்த்த விதத்தைக் குறித்தும் வேள்வி கலக்கமடைந்ததைக் குறித்தும் உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>`கண் பறிக்கப்பட்டான்` (தி.8 திருவுந்தியார். பா-12.) என முன்னர்க் கூறப்பட்ட சூரியன், `பகன் என்னும் பெயரினன் என்பது அங்கு எடுத்து ஓதப்பட்டது.</div><div>அதனால், இங்குப் பல் தகர்க்கப் பட்டவனாகக் குறிக்கப்படும் சூரியன் வேறொருவன் என்பது வெளிப்படை. இவன் பெயர், `பூடன்` எனப்படுகின்றது.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 16</div><div><br></div><div>தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்</div><div>மக்களைச் சூழநின் றுந்தீபற</div><div>மடிந்தது வேள்வியென் றுந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>தக்கன் தன் மக்களால் சூழப்பட்டிருந்தும் தலை யிழக்கப் பெற்றான் என்றும் வேள்வி அழிந்தது என்றும் உந்தீபறப் பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>``அன்றே என்பது, `முன்னரே` எனப் பொருள் தந்தது. `தக்கன் முன்னரே இறந்தமையால், வேள்வி, பின்னர் அவன் மக்களைச் சூழ நின்று மடிந்தது` என்க. மடிதல் உயிர்கட்கன்றிப் பிறவற்றிற்கின்மையின், வேள்வியில் வந்தாரது தொழில் வேள்வி மேல் ஏற்றி, ``மடிந்தது வேள்வி`` எனப்பட்டது. இதனானே, ``சூழநின்று`` என்றதும், அவ்வாற்றாற் கூறப்பட்டதேயாயிற்று.</div><div>இதனுடன் தக்கன் வேள்வி பற்றியவற்றை முடிக்கின்றா ராகலின், இறுதிக்கண் இவ்வாறு தொகுத்தருளிச்செய்தார். தக்கன் வேள்வி செய்த ஞான்று அவன் மைந்தர் ஆண்டிருந்திலர் என்பது கந்த புராணத்தால் அறியப்படுதல்பற்றி, ஈண்டு, ``மக்கள்`` எனப்பட்டார் பெண்மக்களே என்பர். எனினும், அடிகள் திருமொழிக்கு அவ் வரலாற்றினை அடியாகக்கொண்டு உரையாது, வேறுபட உரைத்தல் இழுக்காது.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 17</div><div><br></div><div>பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட</div><div>கோலச் சடையற்கே யுந்தீபற</div><div>குமரன்தன் தாதைக்கே உந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>முன்னாளில் ஒரு பாலகனுக்குப் பாற்கடலைத் தந்தருளின சிவபெருமான் பொருட்டு உந்தீபற; குமரவேள் தந்தையின் பொருட்டு உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>பாலகனார், உபமன்னிய முனிவர். இவர் வியாக்கிர பாத முனிவர் மைந்தர். இவர் தம் தாய்மாமனாராகிய வசிட்ட முனிவர் இல்லத்தில் காமதேனுவின் பாலை உண்டு வளர்ந்து, பின் தம் தந்தையார் இல்லத்தை அடைந்தபொழுது பால் வேண்டி அழ, அவர், `சிவபெருமானை வேண்டி அழுக` என, அவ்வாறே வேண்டி அழுத பொழுது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அச்சிறு முனிவரிடம் வரச் செய்தார் என்பது புராண வரலாறு. இதனைக் கோயிற் புராணம் விரித்து விளக்கும். இது, ``பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற் கடல் ஈந்தபிரான்`` (தி.9 பா.9) எனத் திருப்பல்லாண்டினும், ``அத்தர் தந்த அருட் பாற் கடல்உண்டு - சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்`` (தி.12 திருமலைச் சிறப்பு. 15.) எனத் திருத்தொண்டர் புராணத்தினும் கூறப் பட்டது. கோலம் - அழகு. குமரன் - முருகன். `மகனைப் பெற்றவ னாதலின் மகவருமை அறிந்து அளித்தான்` என்றபடி. இரண்டிடத்தும், `பாடி` என்பது வருவிக்க. `பெரிதாகிய பாற்கடலைச் சிறுவர்பால் வருவித்தான்` என வெற்றி கூறியவாறு.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 18</div><div><br></div><div>நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை</div><div>ஒல்லை யரிந்ததென் றுந்தீபற</div><div>உகிரால் அரிந்ததென் றுந்தீபற.</div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>பிரமனது சிரம் விரைவில் அரியப்பட்டது என்றும் அதுவும் சிவபெருமானது நகத்தால் அரியப்பட்டது என்றும் உந்தீபறப் பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>நன்மை - அழகு. `அழகிய மலரின்மேல் அழகுடன் வீற்றிருந்த அவன், தலை இழத்தலாகிய பேரிழிவை எய்தினான்` என்பது நயம். ஒல்லை - விரைவு. உகிர் - நகம். பிரமனும், திருமாலும் தாங்களே முதற்கடவுளர் எனத் தருக்கித் தம்மிற்போர் செய்தபொழுது சிவபெருமான் ஒரு சோதி வடிவாய்த் தோன்ற, திருமால் அவரை வணங்கினார். பிரமனோ, தனது ஐந்து தலைகளுள் உச்சித் தலையினால் சிவபெருமானை இகழ, சிவபெருமான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து, அவரால் அவ்வுச்சித் தலையைக் கிள்ளி விடச் செய்தனர் என்னும் வரலாற்றைக் கந்த புராணம் ததீசி யுத்தரப் படலத்துட் காண்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 19</div><div><br></div><div>தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்</div><div>ஈரைந்தும் இற்றவா றுந்தீபற</div><div>இருபதும் இற்றதென் றுந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>தன் தேரை நிறுத்திக் கயிலாய மலையைத் தூக்கின இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிந்த விதத்தைக் குறித்து உந்தீபறப்பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>தேர் - புட்பக விமானம். இது, குபேரனிடத்தினின்றும் திக்குவிசயத்தில் கொண்டது. மலை, கயிலாயமலை. இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்தபொழுது சிவபெருமான் தமது திருவடிப் பெருவிரல் ஒன்றினால் சிறிது ஊன்ற, அவன் அம்மலையின் கீழ், பன்னாள் அழுதுகொண்டு கிடந்தான் என்னும் வரலாறு நன்கறியப் பட்டது. ``சிரம் ஈரைந்து`` என்றமையால், ``இருபது`` என்றது தோள்களாதல் வெளிப்படை. ``இருபதும்`` என ஒருங்கு தொகுத்தமையின் ``இற்றது`` என்று அருளினார்.</div><div>``பொருள்மன்ன னைப்பற்றிப் புட்பகங் கொண்ட</div><div>மருள்மன்ன னைஎற்றி`` (தி. 4 ப.17 பா. 11)</div><div>என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தமை காண்க.</div><div><br></div><div>பண் :</div><div>பாடல் எண் : 20</div><div><br></div><div>ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்</div><div>ஆகாசங் காவலென் றுந்தீபற</div><div>அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற. </div><div><br></div><div>பொழிப்புரை :</div><div><br></div><div>மேலாடை அணிந்துள்ள, முனிவர்கள் அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும், ஆகாயத் துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப் பாயாக!</div><div><br></div><div>குறிப்புரை :</div><div><br></div><div>ஏகாசம் - உத்தரீயம். `போர்வை` எனவுங் கூறுவர். முனிவர்கள் `சூரிய மண்டலத்தருகில் இயங்குவர் என்பதனால், `அங்கு அவர்களையும், அவர்கட்குமேல் உள்ள மற்றையோரையும் காப்பது சிவபெருமானது திருவருள்` என்பது இதன் திரண்டபொருள். முனிவர்கள் சூரிய மண்டலத்தருகில் இயங்குதலை, ``நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் - காலுண வாகச் சுடரொடு கொட்கும் - அவிர்சடை முனிவர்`` (புறம் - 43.) என்பதனானும் அறிக. `ஆகாசத்தில்` என உருபு விரிக்க. இரண்டிடத்தும் ``காவல்`` என்ற எழுவாய்க்கு `உள்ளது` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. ``அதற்கு`` என்றது, கூன்.</div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-27942187018465917512024-01-17T11:54:00.001+05:302024-01-17T11:54:22.993+05:30ThirukKural Podhu Noola திருக்குறள் பொது நூலா...<div><br></div>திருக்குறள் பொது நூலா? ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை<div> திருக்குறள் பொது நூலா?</div><div> சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை;; திருநெல்வேலி பேட்டை</div><div><br></div><div> தோற்றுவாய்</div><div><br></div><div>விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் சம்மதிக்கலாம்.</div><div><br></div><div>76272732_2338376816475876_4896147968798752768_n74305681_2338376606475897_3402800218075299840_n75407752_2338376409809250_3112307145777872896_n</div><div>விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அறிவு போல்வதாமா அனுபவிக்கும் அறிவு? மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவனது அறிவு சிறந்தது. அதில் ஏறிச் செல்பவனுக்கு அவ்வண்டி பற்றிய அறிவு எவ்வளவிருக்கும்? அப்படியிருந்தும் அதில் ஏறிச் செல்கிறவரும் தம்மறிவை மெச்சிக் கொள்கின்றனர். இன்றையவுலகில் அவர் பிறந்தார், இருக்கிறார். அதனால் அவரும் தம்மைப் புத்திசாலிகளென எண்ணிக் கொள்கின்றனர். முன்னோரை இகழ்ந்து பேசுமளவுக்கு அவரிடம் அச்செருக்கு மிகலாயிற்று.</div><div><br></div><div>மனிதனுக்கு ஆசையுண்டு. அதற்கு அளவோ? அதையளக்க முயன்றர் பூர்விகர். உலகெல்லாம் ஒரு குடைகீழ் வைத்து ஆள்கிறான் ஓர் அரசன். ஆயினும் அவனாசை அடங்கவில்லை. கடல்மீதிலும் தன் ஆணையைச் செலுத்தலாமா எனவும் அவன் நினைக்கிறான். ஆசைக்கோரளவில்லை. அதைக் காட்ட அக்கடலோடு நின்றனரவர். ஆனால் இன்றைய நிலையென்ன? ர்ஷிய ராக்கெட் வானிற் பறந்தது. எத்தனையோ இலக்கம் மைல்கள் மேற்சென்றது. சந்திரனைத் தாண்டியது. சூரியனையும் எட்டிவிட்டதாம். வானத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில வருஷங்களே கழிக. அதற்குள் இவ்வுலக மக்கள் அக்கிரகங்களிற் போய் உலவுவர். அங்கும் மக்கள் உளரானால் அவரோடுந் தொடர்பு கொள்வர். போக்குவரத்துக்கான சாதனங்கள் விருத்தியாகும். போக்குவரத்தும் தொடர்ந்து நிகழலாம். அங்கு மக்கள் இல்லையானால் அக்கிரகங்கள் ஆக்கிரமிக்கப்படும். இவ்வுலக மக்களுக்கு அந்நம்பிக்கையுண்டு. இவருக்கு ஆசை மென்மேலும் வளர்கிறது. ஆனால் ஒன்று. அந்தக் கிரகங்களிலிருந்து எவரும் இவ்வுலகத்துக்கு இதுவரை வந்ததில்லை. அங்கு மக்களில்லையா? அவருக்கு ஆசையில்லையா? விஞ்ஞானம் வளரவில்லையா? என்னவோ? இங்குள்ளவரின் அறிவும் ஆசையும் முயற்சியும் நிதர்சனம். அவர் அங்குச் செல்ல முந்திக் கொண்டனர். இவராலாவது எல்லாக் கிரகங்களிலுமுள்ள மக்கள் விரைந்து சந்திக்க. அளவளாவுக, கொண்டுங் கொடுத்துங்குலாவுக. கடவுளென ஒருவரிருந்தால் அவரும் அதற்குத் துணை புரிக.</div><div><br></div><div>மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.</div><div><br></div><div>ஆனால் பாரதி</div><div><br></div><div>'வள்ளுவன் றன்னை யுலகினுக்கே தந்து</div><div><br></div><div>வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'</div><div><br></div><div>என்றார். திருவள்ளுவரை அவ்வளவு புகழவேண்டுமா? அவரறிவு அதற்குத் தகுதியுடையதா? புகைவண்டி, வானொலி கருவி, வானவூர்தி முதலிவற்றுள் ஒன்றிரண்டையாவது அன்றே அவர் கண்டு பிடித்திருக்கலாம். அது செய்தாரா? எல்லாக் கிரகங்களையும் நேசப்படுத்த அவரால் முடிந்ததா? அவராற் கிடைத்தது ஒரு நூல். அன்று முதல் இன்று வரை அந்நூலாற் பயனெய்தியவர் எத்தனைபேர்? ஒருவரிருவர் பெயர்தானும் யார்கேனுந் தெரியுமா? அந்நூற்குப் பயன்றான் என்னை? அந்நூல் இவ்வுலகத்துள்ள மக்களைத்தானும் ஒன்றுபடுத்தியதா? அவ்வினாக்களுக்கு விடை இன்றுங் கிடைத்தபாடில்லை. எனவே பாரதி பாடிய அப்புகழ் பொருளுடையதாமா? சிந்திக்கவல்லார் சிந்திக்க.</div><div><br></div><div>இப்படி நான் கூறுகிறேன். அது திருவள்ளுவரை இகழ்வதாகும் என்பார் சிலர். அதற்காக அவர் என்மேற் சீறவுஞ் செய்யலாம். எல்லாம் அறிந்தவருமில்லை. ஏதும் அறியாதவருமில்லை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பது ஒரு நியாயம். விஞ்ஞானிகளும் அறிஞர். திருவள்ளுவரும் அறிஞர். முன்னவரறிவு ஒருவகை. பின்னவரறிவு இன்னொரு வகை. அவரறிவு இவருக்கில்லை. இவரறிவு அவருக்கில்லை. இங்ஙனம் திருவள்ளுவருக்கும் ஒரு வகை வகுத்து அவரறிவை அவ்வளவில் தடுத்து வைப்பார் சிலர். அதனால் திருவள்ளுவரும் அறியாதன பல, அது பற்றி அவருக்கும் அறியாமையுண்டு என்பது அவருக்குங் கருத்தாகும். அவர் தான் என்மேற் சீறுபவர். அச்சீற்றத்தில் அர்த்தமில்லை.</div><div><br></div><div>உண்மையில், உலகிற்கே திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற மேதைதான். அவரை நன்கு அறிந்தவரே அவரறிவுடைமையைப் புகழ்தற்குரியார். அவரை நன்கு அறிதலாவது யாது? சூரிய மண்டலத்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படும் ராக்கெட்டை ஆக்கியவரது அறிவு சாமானியமானதன்று. திருவள்ளுவரறிவும் அன்னதே. ஆனால் யாருடைய அறிவையும் மதிப்பது இரண்டு வழியாலாம். ஒன்று அவரிடமிருக்கும் அறிவின் விளக்கம் பற்றியது. இன்னொன்று அவரை விட்டு நீங்கியிருக்கும் அறியாமை பற்றியது. அறிவு விளங்கப் பெற்றவன் அறிஞனா? அறியாமை நீங்கப் பெற்றவன் அறிஞனா? இப்படி வினவிச் சிந்திக்க வேண்டும். அறிவு விளங்கப் பெற்றவரெல்லாம் அறியாமையில்லாதவரென்று சொல்ல முடியாது. அறியாமை நீங்கப் பெற்றவரை அறிஞரெனத் துணிந்து சொல்லலாம். அவரே தெள்ளறிஞர். ராக்கெட்டையனுப்பிய விஞ்ஞானிக்கும் அறியாமையுண்டு. பிற விஞ்ஞானிகளுக்கும் அ·துண்டு. அது கலவாத அறிவு பிராகிருதராயுள்ள எவரிடமுமில்லை. ஆனால் திருவள்ளுவரிடம் அவ்வறியாமை இம்மியுங் கிடையாது. அ·தறவே நீங்கப் பெற்றவர் அவர். அவர் போன்றோர் ஒரு சிலரேயுளர். அவரெல்லாம் பிராகிருதத் தொடர்பைக் கடந்தவர். திருவள்ளுவரை அறிவுடையாரென்பதை விட அறியாமை அறவே நீங்கப் பெற்றாரெனக் கொண்டு போற்றுபவன் நான்.</div><div><br></div><div> மக்களிடம் அறியாமையும் உண்டு. அ·து எதனால் வந்தது? எப்போது வந்தது? யாராலாவது தரப்பட்டதா? அவரேதேடிக் கொண்டனரா? அதற்கு மூலம் யாது? அ·து அறவே தீரக் கூடியதா? அல்லது குட்டம், குன்மம் முதலிய நோய்கள் போல் அவ்வப்போது செய்யப்படும் சாந்தியளவில் அடங்கிப் பிறகு துன்புறுத்திக் கொண்டிருப்பதா? அறவே தீர்தற்கு வாயிலென்ன? அவற்றையெல்லாம் விசாரித்து ஆவன செய்ய வேண்டும். அவ்வகையில் பிராகிருத நூல்கள் சிறிதும் பயன்படா. சமய நூல்களே உதவக் கூடியன. சமயங்கள் பல. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த நூல்களும் அநேகம். ஆயினுமென்? அறியாமையைப் பற்றிய விளக்கமான செய்தி எந்தச் சமயத்திலுண்டு. அந்தச் சமய நூல்களின் சகாயம் வேண்டும். அந்த நூல்களே கற்பவை. திருவள்ளுவர் அவற்றைக் கசடறக் கற்றிருப்பர், கற்றபின் அதற்குத் தக நின்றிருப்பர். அதனால் அவரறியாமை அறவே நீங்கியிருக்கும். அவர் தெள்ளறிஞரானார். அச்சமயம் எது? பார்க்கலாம்.</div><div><br></div><div>உரைகள்</div><div><br></div><div>திருவள்ளுவர் தந்த நூல் திருக்குறள். அதற்கு உரைகள் பல. அவை பத்து என்றொரு கணக்குண்டு. பத்தாவதாகவுள்ளது பரிமேலமுகரியற்றியது. இந்நூலில் அவர் பெயர் வருமிடங்களில் அழகரென்று சொல்லப்படுவார். அவர் போய்ச் சில நூறு வருடங்களாயின. அக்காலை இத்தமிழகம் எத்தனையோ தமிழ்ப் புலவர்களைப் பெற்றது. இலக்கணிகள், தார்க்கீசர், கவிகள், உரையாசிரியர், நீதிநூல் வல்லார், அரசியல் வல்லார், இன்பநூல் வல்லார், வீட்டு நூலார் எனப் பல துறைகளில் வல்லவர் வந்து போயினர். புலமைப் பஞ்சம் இங்கில்லை. அவரால் ஆக்கப்பட்டு இப்போது கிடைத்தது வரும் நூல்களே அதற்குச் சான்று. ஆனால் அவருள் திருக்குறளுக்குப் பதினோராவது உரையாசிரியராக எவரும் வந்திலர். காரணமென்ன? கெளரவ புத்தி கொண்டு சிந்திக்க. விடை கிடைக்கவே செய்யும். அவ்விடைக்காலத் தமிழ்ப் பெரும் புலவரனைவராலும் அவ்வழகருரை அங்கீகரிக்கப்பட்டது என்பதே விடை. அவ்வுரை இலக்கண தருக்க வரம்புடையது. நடுநிலையிலிருந்து நூலாசிரியர் கருத்தை வாங்கி விளக்குவது. பல ஞான நூல்களிற் பயின்று எழுதப்பட்டது. மக்களையுயர்த்த வேண்டுமென்ற கருணையாலியன்றது. ஆனால் சென்ற சில ஆண்டுகளாகப் பல புத்துரைகள் வெளிவரலாயின. அவற்றுள் நான் சிலவுரைகளைப் படித்தேன். அவை திருக்குறள் கூறும் உண்மைகளைப் புலப்படுத்தவில்லை. தான்றோன்றித்தனமாக எழுதப்பட்டன. உரைக்காரனின் அபத்தக் கொள்கைகள் புகுத்தப்பட்டன, காசு கொடுப்பவரைக் களிப்பிக்கப் போந்தன. நூலைக் கருதாமல் காலத்தைக் கருதின. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாலும் இறங்கலாம். அப்போலியுரைகளைக் கொண்டு சபையேற முடியாது. ஏறினால் அச்சபை பரிகசிக்கும். அவ்வுரைகளுங் கணக்கிற் சேர்ந்தன. இப்போது அவ்வுரைகளின் தொகை பத்தைத் தாண்டி விட்டது. நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன். பிராமண ஸ்தானத்தை வகித்து வருகிற அழகருரையைத் தழுவித் திருக்குறளுக்குப் பொருள் காணு முகத்தால், திருவள்ளுவர் ஆசரித்த சமயம் எதுவாயிருக்குமென ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.</div><div><br></div><div>நூற்பெயர்</div><div><br></div><div> திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வைத்தனவா அத்தனையும்? ஒன்றிரண்டு அவரிட்டனவாயிருக்கலாம். அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் பலர். அவர் அந்நூலை ஊன்றிப் படித்திருப்பர். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். அதனால் மதிப்புரை பல வழங்கியிருப்பாரவர். அம்மதிப்புரைகளே அப்பெயர்கள். அவ்வொன்பதுக்கு மேலும் அன்ன பெயர்கள் இருந்திருக்கலாம். அவை நூலருமையைச் சரியாக விளக்கியிரா. அதனால் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கும். இன்றுவரை நிலைத்திருப்பன அவ் வொன்பது. அவை தள்ளப்படுவன அல்ல. போற்றபடுவனயென்பது அதனாற் புலனாம். அவற்றுட் சிலவற்றை இயைபுபற்றி இங்கு ஆராய வேண்டும்.</div><div><br></div><div>பொதுமறை</div><div><br></div><div>'பொதுமறை' யென்பது ஒரு பெயர். பொதுவுடைமையென்ற சொல்லையெடுத்துக்கொள்க. ரஷியப் பொதுவுடைமை, சீனப் பொதுவுடைமையெனப் பலவுள. ரஷியர் சீனப் பொதுவுடைமையில் உரிமை கொள்ளமுடியாது. சீனர் ரஷியப் பொதுவுடைமையில் அப்படியே. அவ்வத்தேச வரம்பு அப்போது வென்னுஞ் சொல்லைக் கட்டுப்படுத்தி அவ்வுடைமையை அவ்வத்தேசத்தார்க்கே உரிமையாக்குகிறது. பொதுவென்னுஞ் சொல்லைப் பற்றிக் கொண்டு எவனும் எல்லாத் தேசங்களின் பொதுவுடைமைகளிலுங் கைவைக்கமாட்டான். வைத்தால் கை தறிபட்டுப்போம். அதுபோல் திருக்குறள் பொது மறையாயினும் அப்பொதுவுக்கும் வரம்புண்டு. அவ்வரம்பைக் கண்டு அதற்கு வெளியில் நிற்பவர் அந்நூலைத் தம்மதெனக் கொள்ளாதிருப்பதே நல்லது.</div><div><br></div><div>ஒரு தேசத்திற் பிறந்தவர் அத்தேசத்துக்கு மாத்திரம் பொதுமக்கள். யாமெல்லாம் பொதுவெனச் சொல்லிக்கொண்டு ஒரு தேசத்து மக்கள் மற்றத் தேசங்களுக்கும் பொதுவெனச் சொல்லிக் கொள்ளமாட்டார். அது போலப் பொதுமறையென்பதிலுள்ள பொதுவெனுஞ் சொல் தனக்கெனவொரு பொருளையுடையது. அதைவிட்டு அச்சொல்லே கொண்டு அம்மறை தனக்குப் புறம்பான மறைகளுக்குந் தன்னையுரியதெனச் சொல்லிக் கொள்ளமாட்டாது.</div><div><br></div><div>பொதுமக்கள் என்பதொரு பிரயோகம். அப்பொதுவை எவரும் தம்பாற் சார்த்திக்கொள்ள விரும்பார். பொதுமறையென்பதிலுள்ள பொதுவும் அங்ஙனமே.</div><div><br></div><div>சித்தாந்த சாத்திரங்களிற் சொரூப லட்சணம், தடத்த லட்சாம் என்ற பிரயோகங்களுள. அவை முறையே சிறப்பியல்பு, பொதுவியல்பு எனத் தமிழிற் பெயர்க்கப்படும். த்ருக்கத்தில் சாமானியம் விசேடம் என இரண்டிலக்கணங்களுள. அவற்றுக்கும் முறையே பொது, சிறப்பு என்பன தமிழ். அப்பொதுக்களின் பொருளும், பொது மறையென்பதிலுள்ள பொதுவின் பொருளும் ஒன்றாகுமா?</div><div><br></div><div>சிதம்பர ஆலயம் பொதுவெனப்படும். அப்பொதுப் போன்றதா பொதுமறை யென்பதிலுள்ள பொது?</div><div><br></div><div>'வேதமொ டாகம மெய்யா மிறைவனூ</div><div><br></div><div>லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக'</div><div><br></div><div>என்றது திருமந்திரம். சிவாகமமென்னுஞ் சிறப்புநூலொன்றுண்டு. அது பற்றி அவ்வேதம் பொதுநூலெனப்பட்டது. அப்பொதுவும், பொதுமறைப்பொதுவும் சமந்தானா?</div><div><br></div><div>தெய்வநூல் எதுவும் வயிநயிகருக்குத்தான் வேண்டப்படும் திருக்குறளுந் 'தெய்வநூல்'. அது பிராகிருதருள்பட அனைவருக்கும் பொதுவாதல் யங்ஙனம்?</div><div><br></div><div>சூரியன் சந்திரன் முதலியவை எல்லார்க்கும் நலஞ் செய்வன வாய்ப் பொதுவாகும் என்பர் சிலர்.</div><div><br></div><div>'அல்லவை புரியா ரேனு மறிவினற் பெரிய ரேனு</div><div><br></div><div>மெல்லவர் தமக்கு நண்பா யினியவே புதிதற் பாற்றோ</div><div><br></div><div>பல்லுயிர்த் தொகைக்கு மின்பம் பயந்திடு மதிகண் டன்றோ</div><div><br></div><div>புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே'</div><div><br></div><div>என்ற கந்தபுராணச் செய்யுளால் அவையும் வெறுப்புக் கிலக்காதல் அறியப்படும். அவற்றின் பொதுமைப்போல் பொதுமறைப் பொதுமையும் இருக்குமா? அறிஞர் சிந்தனையில் இன்னும் பல பொதுமைகள் தோன்றலாம். அவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. பொதுமறையென்பதிலுள்ள பொதுமையென்னுஞ் சொல் தெளிவான விளக்கத்தை வேண்டி நிற்றல் காண்க.</div><div><br></div><div>ஆனால் ஒன்று சொல்லப்படும் எல்லா மதங்களுஞ் சம்மதிக்கக் கூடிய அறங்களின் தொகுப்பே திருக்குறள், அதுபற்றி அந்நூலைப் பொதுமறையென்னலாம் என்பது அது. அதுவுஞ் சரியன்று. ஏன்? அப்பொதுவறங்கள் அவ்வச் சமயத்திலேயே கூறப்பட்டுள்ளன. எச் சமயத்தாரும் தம் சமய நூல்களிலேயே அவற்றைக் கற்றுக் கொள்வர். அவர்க்குத் திருக்குறள் அநாவசியம். மேலும் அதிற் காணப்படும் பொதுவறங்களத்தனையும் சர்வ மத சம்மதமுமல்ல. பொதுவறங்கள் Natural Religion என்றும், சிறப்பறங்கள் Revealed Religion என்றும் ஆங்கிலத்திற் சொல்லப்படும். சமயந்தோறும் சிறப்பறங்களுமுள. ஒவ்வொரு சமயமும் மோக்ஷமென ஒரு லக்ஷ¢யத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவறங்களைத் தழுவினாலே போதும், மோக்ஷம் சித்திக்கும் என எச்சமயமுஞ் சொல்லாது. பொதுவறங்களோடு சிறப்பறங்களையும் அனுட்டிக்கவேண்டும். அவ்வனுட்டான பரருக்குத்தான் அச்சமயத்தின் மோக்ஷமுண்டு. அங்ஙனமே ஒவ்வொரு சமயமும் தன் சமயத்தவர்க்கு உபதேசிக்கிறது. திருக்குறள் அச்சிறப்புத் தருமங்களையுஞ் சொல்லாமல் விட்டிருக்குமானால் அந்நூலால் மக்களுக்கு முடிவான லக்ஷ¢யங் கிடைக்கப் போவதில்லையென்பது உறுதி. ஏதாவது ஒரு சமயமும், அதற்கேயுரிய சிறப்பறங்களும் மக்களுக்கு உறுதி பயப்பன என்பது அவருள்ளத்திற்பட்டிருந்தால், அவற்றையும் ஆசிரியர் அந்நூலிற் சொல்லத்தான் வேண்டும், சொல்லியேயிருப்பர். இன்றேல் அந்நூல் முற்றுப் பெற்றதாகாது. அவரும் மக்களுக்காக அதனைச் செய்தவராகார். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை விரும்புவார் மிகப்பலர். அவர்பாற் பரிபாகம் குறைவு. அவரையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கான ஒழுகலாறுகளுமுள. அவற்றை ஆசிரியர் அந்நூலில் அதிகமாகச் சொல்லிவைத்தார். மறுவுலக வாழ்க்கையை விரும்புவார் வெகு சிலரே. உள்ளம் பக்குவப்பட்டவர் அவர். அவருக்கு வேண்டும் ஒழுகலாறுகள் வேறு. அவற்றைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொன்னாற் போதும். அப்படித் தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சத்திநிபாதர்க்கு வேண்டும் சிவாகமவுண்மைகளைச் சுருக்கமாகவும் சூசகமாகவும், உலகர்க்கு வேண்டுவனவற்றை விரிவாகவும் வெளிப்படையாகவுந் தன்பாற் கொண்ட வேதம் அவ்வியல்புபற்றிப் பொதுநூலெனப்படும். அம் முறையிற் செல்வது திருக்குறள். அது பொதுநூல் எனப்படாது பொதுமறை எனப்படாது பொதுமறை யெனப்பட்டது அவ்வுண்மையைக் காட்டவேயாம். அங்ஙனம் பொதுநூல் என்பதிலுள்ள பொதுவிற்குரிய பொருளைப் பொதுமறையென்பதிலிருந்து பொதுவுக்குப் பொருத்துவதுதான் பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது.</div><div><br></div><div> திருவள்ளுவர்</div><div><br></div><div>திருக்குறளுக்குத் திருவள்ளுவரென்பது இன்னொரு பெயர். தொல்காப்பியர் செய்த இலக்கணம் தொல்காப்பியம். சேனாவரையர் செய்தவுரை சேனாவரையம். பாணினீ செய்த வியாகரணம் பாணினீயம். அவற்றிற்கு அவ்வாசிரியன்மாரின் பெயர் அப்படியே வரவில்லை. ஈறு திரிந்தே வந்திருக்கிறது. ஆனால் திருக்குறளுக்குத் திருவள்ளுவம் என்ற பெயரில்லை. ஆசிரியர் பெயர் திரியாமல் நூலுக்கு வந்துள்ளது. திருவள்ளுவம் வள்ளுவம் என்பன நேற்றுத் தோன்றின. திருவள்ளுவர் என்ற பெயரின் பொருட் சிறப்பையறியாதார் இட்டன அவை. கடல் மீனுக்கு நுளையனிட்டது பெயர் என்பது பழமொழி. பெருநூல்களின் பெயர்களெல்லாம் அப்படித்தான் வந்தனவென அவர் எண்ணிக் கொண்டனர் போலும். இல்லாவிட்டால் திருவள்ளுவரெனப் பெயரிக்கும்போது அப்பெயர்கள் இடவும் துணிந்திருப்பாரா அவர்? அவர் கிடக்க, திருவள்ளுவரென்ற பெயரிட்ட பெரும் புலவருக்குக் கருத்து யாதாயிருக்கலாம். வேதத்துக்குச் சுயம்பு என்பது இன்னொரு பெயர். அப்பெயர் வரக் காரணத்தை ஆராய்ந்தனர் வேத பண்டிதர் பலர். சுயம்பு என்றால் தானே உண்டானது என்று அர்த்தம். வேதம் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே யுண்டானது. அதனால் சுயம்பு எனப்பட்டது என்றனர் ஒரு சாரார். சுயம்பு எனபது சிவபெருமானுக்குப் பெயர், வேதம் அவரால் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் பெயர் நூலுக்காய் வேதமும் சுயம்பு எனப்பட்டது என்றனர் பிறிதொரு சாரார். அப்புலவருக்கு முற்கருத்துச் சம்மதமன்று, பிற்கருத்தே உடன்பாடு, அதை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சுயம்புவென்னும் சிவபெருமானாற் செய்யப்பட்ட வேதம் சுயம்பு எனப்படும் என்ற கொள்கையை அங்கீகரிக்கும் பிற்கால சந்ததியார்க்குத் திருட்டாந்தமொன்றுந் தேவை. திருவள்ளுவர் என்ற ஆசிரியர் பெயரைத் திரிவு செய்யாமல் திருக்குறளுக்கும் இட்டுவைத்து அவ்விரண்டையும் பூர்த்தி செய்தார் அப்புலவர். வேதத்துக்குச் செய்யாமொழி யெனவும் பெயருண்டு. செய்யாமொழியென்பது மனிதராற் செய்யப்படாத நூல் என்ற பொருளுடையது. வேதம் அபெளருஷேயம் என்றதன் பொருளும் அதுவே.</div><div><br></div><div>வேதம் கடவுளாற் செய்யப்பட்டதென்பது திருக்குறளிலுங் கண்டவுண்மை.</div><div><br></div><div>'பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க</div><div><br></div><div>நெறிநின்றார் நீடுவாழ் வார்' (6)</div><div><br></div><div>என்றது நூல். 'அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி – அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண்' என்பது உரை. ஒழுக்க நெறி ஐந்துவித்தானாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருவு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு என்பது போல' என்பது குறிப்பு.</div><div><br></div><div>'நல்லாற்றா னாடி—' (242)</div><div><br></div><div>என்றது நூல். 'நல்லாற்றான் – அளவைகளானும் பொருந்துமாற்றானும் நன்றான நெறியி§லே நின்று' என்பது உரை. அளவைகளாவன —-காட்சியும், —-அனுமானமும் கருத்தா மொழியாககிய ஆகமுமென மூன்று என்பது குறிப்பு.</div><div><br></div><div>'யாமெய்யா —–' (300)</div><div><br></div><div>என்றது நூல். 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் – யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்' என்பது உரை. 'மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை யுள்ளவாறுணரவல்லராய்க் காமவெகுளிகளின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர். அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய வாகமங்கள்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>'பற்றுக பற்றற்றான் பற்றினை—' (350)</div><div><br></div><div>என்றது நூல். 'பற்று அற்றான் பற்றினைப் பற்றுக – எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்பது மனத்துக் கொள்க' என்பது உரை. 'பற்றற்றான் பற்றென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது' என்பது குறிப்பு. இப்பிரமாணங்கள் அவ்வுண்மையைப் புலப்படுத்தும்.</div><div><br></div><div>உத்தர வேதம்</div><div><br></div><div> உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் – இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.</div><div><br></div><div>இக்காலத்தில் அவ்வேதத்தை நிந்திக்கச் சிலர் தலைப்பட்டனர். வேதம் என்பது காரணப் பெயர், அறிவு நூலென்பது அதற்கருத்தம். ஆகலின் அறிவு நூல்களெல்லாம் வேதமே என்பரவர். அவர் காரண இடுகுறிப் பெயரென்னும் இலக்கணப்பகுதிக்கு உலைவைக்கும் இலக்கணக் கொலைஞராவர். அவருள் சாத்தனென்பானொருவன். ஒரு நாள் அவன் அமர்வதற்கு நாற்காலியொன்று வேண்டியிருந்தது. அதனை யெடுத்துவரச்சொல்லி தன் பிரதம மாணாக்கனை ஏவினானவன். அவனிடம் வேதமென்னுஞ் சொற்பொருளைக் கேட்டிருந்த அறிவோடு அம்மாணாக்கன் நாற்காலியைக் கொண்டுவரச் சென்றான். கழுதையொன்று எதிர்ப்பட்டது. அதுவும் நாற்காலிதானேயென்பது அவனுடைய எண்ணம். அவன் அதைக் கொண்டுபோய்த் தனக்கு இலக்கணஞ் சொல்லிக் கொடுத்த குருவாகிய அச்சாத்தன் முன் நிறுத்தி அக்குருவை அதன்மேல் அமரும்படி வேண்டினான். அக்குரு கோபிக்கலாமா? காரண இடுகுறிப் பெயரைக் காரணப் பெயரளவில் வைத்துப் பொருள் கூறித் திரிவதற்கு அப்பதவியே தகும். வேதம் இருக்காதிகளுக்குக் காரண இடுகுறிப் பெயராயிருந்துவருவது சித்தம். திருக்குறள் உத்தரவேதமாயின், இருக்கு முதலிய நான்கும் பூர்வவேதமாகும். உத்தரம் – பின்னர் வந்தது. பூர்வம் – முன்னருள்ளது. பூர்வவேதமில்லையாயின் திருக்குறளுக்கு உத்தரவேதமெனப் பெயர் கொடுக்கப்பட்டிராது. பூர்வத்தை உத்திரம் எதிர்த்துச் சொல்வதில்லை. அநுசரித்தே செல்லும். எதிர்த்துச் செல்வது உத்தரமெனப்படாது. அப்பெயரிட்ட புலவர் இருமொழியிலும் வல்லவராய் அவ்வேத பண்டிதராயுமிருந்திருப்பரென</div><div><br></div><div>பல கடவுளர்</div><div><br></div><div>'இந்திரன்' (25), 'செய்யபவள்' (167), 'தவ்வை' (167), 'அடியளந்தான்' (610), 'கூற்று' (765)</div><div><br></div><div>முதலிய பல கடவுளரின் பிரஸ்தாபம் திருக்குறளிலுண்டு. அவரும் இருபாலாராயிருக்கின்றனர்.</div><div><br></div><div>'வானோர்க்கும்' (18), 'அகல் விசும்புளார்' (25), 'தேவரனையர்' (1073)</div><div><br></div><div>என்ற பிரயோகங்களால் எண்ணிறந்த கடவுளருண்மை அதிற் சம்மதிக்கப் பட்டது புலனாம். 'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவரும்' என்ற திருவாசகத்தோடு அவற்றையியைத்துக் காண்க. ஆனால் ஒரே கடவுள் தானுண்டு என்கிற சமயங்களும் பலவே. தோட்டியின் குடில்போல்வன அவை. அக்குடிலில் தோட்டி தலைவன் தான். ஆனால் அடிமைகள் கிடையா. திருவள்ளுவர் கொண்ட சமயமோ அரசமாளிகை போல்வது. அங்குத் தோட்டி முதல் மந்திரி வரை ஆயிரக் கணக்கான ஊழியர் இருப்பர். அரசன் அத்தனை பேருக்கும் ஆண்டவன், அதிகாரி, தலைவன், அச்சமயத்திலும் மாணிக்கவாசகர் அருளியது போல் கணக்கிலடங்காக் கடவுளரிருப்பர். அவரெல்லாந் தொண்டர்கள். அச்சமயத்து இறைவன் ஒருவனே. அவனே தலைவன், அக்கடவுளரடங்கலும் அவனுக்கு உடைமையே. அங்ஙனமாகத், தோட்டிக் குடில்கள் போன்ற மதங்கள் திருக்குறளைத் தமக்கும் உரியதாக எப்படிச் சொல்லலாம்? மேலும் அந்நூலில் வருகிற கடவுளர் அம்மதங்களுக்கு உடன்பாடுமல்ல.</div><div><br></div><div>பொய்ச் சமயங்களும் மெய்ச் சமயமும்</div><div><br></div><div> பொய்வந்துழலுஞ் சமயங்கள் பலவாயிருக்கலாம். ஆனால் மெய்ச் சமயம் ஒன்றே தான் இருக்க முடியும் என்பது ஆசிரியரின் அழுத்தமான கொள்கை.</div><div><br></div><div>'இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்</div><div><br></div><div>பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5)</div><div><br></div><div>என்றது நூல். இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து' என்பது உரை.</div><div><br></div><div>'இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா வாகலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது' என்பது குறிப்பு.</div><div><br></div><div>வேதசிவாகமங்களிற் பிரஸ்தாபிக்கப்படும் இறைவன் ஒருவனுளன், அவனே முழுமுதற் பொருள், அவ்விறைவன்பாலுள்ள குணங்கள் அவனுக்கேயுரியன. அவையே இறைமைக் குணங்கள். அவனைக் கண்டு அக்குணங்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ வேண்டும். அவனைக் காண்டலாலது வேதாகமங்கள் கூறும் அவனுண்மையை அளவைகளால் துணிதல். அங்ஙனம் கண்டு அக்குணங்களாற் புகழ்வது அவன் விஷயத்தில் பொருள்சேர் புகழாகும். அதற்கு ஒரே சமயந்தான் இருக்க முடியும். இரண்டு மூன்று இருக்கலாமென்பது அறியாமை. மற்றைச் சமயங்கள் எத்தகையன? அவ்விறைவனல்லாத பிற சேதனங்கனைத்தும் உயிர்கள். அவற்றுள் தத்தமக்கு இஷ்டமான ஒவ்வொருயிரை அச்சமயங்கள் எடுத்துக் கொண்டு அதன்மேல் அவ்விறைமைக் குணங்களையேற்றி அந்தந்தவுயிரையே தந்தம் இறைவனெனப் புகழும். அப்புகழ்களெல்லாம் பொருள் சேராப் புகழ்கள். அங்ஙனம் புகழ்பவர் அறிவிலார். ஒருவனைப் புகழ் விரும்பினால் முதலில் அவனையும் அவனிடமுள்ள குணங்களையும் ஆராய்ந்து கண்டுகொள்ளவேண்டும். பிறகு அக்குணங்களே கொண்டு அவனை புகழ வேண்டும். அவனைத் தெரியாமல் பிறனுக்குரிய குணங்களை அவனிடம் ஆரோபித்துப் புகழ்வது மடமை. இவ்வுண்மை கடைப்பிடிக்கற்பாலது. மெய்யான இறைவனை வணங்குஞ்சமயம் ஒன்றேயுண்டு. மற்றவையெல்லாம் போலியிறைவரை வணங்குஞ் சமயங்களே யென்ற வுண்மையைப் 'பொருள்சேர் புகழ்' என்ற தொடரால் ஆசிரியர் சூசிப்பித்தனர். அழகர் அதைப் பலருமறியப் பகிரங்கப்படுத்தினர். பொய்ச் சமயங்களில்லையானால் அத்தொடர் தோற்றற் கவசியமேயில்லை. அச்சமயங்கள் திருக்குறளிற் பாத்தியதை கொண்டாடலாமா?</div><div><br></div><div>இறைமைக் குணங்களும் இறைவனும்</div><div><br></div><div> 'ஆதிபகவன்' (1) 'வாலறிவன்' (2) 'மலர்மிசையேகினான்' (3) 'வேண்டுதல் வேண்டாமையிலான்' (4) 'இறைவன்' (5) 'பொறிவாயிலைந்தவித்தான்' (6) 'தனக்குவமையில்லாதான்' (7) 'அறவாழியந்தணன்' (8)</div><div><br></div><div>எனத் திருக்குறளில் எட்டுப் பிரயோகங்கள் வருகின்றன.</div><div><br></div><div>அவை இறைமைக் குணங்களை விளங்குவனவாகும். அக்குணங்கள் அந்த வரிசைப்படி தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் என்பன. 'எண்குணத்தான்' (9) என்பது அந்த எட்டு வகைப்பட்ட குணங்களையுடையான் என்னும் பொருளுடையதாய் அக்குணங்களின் தொகுப்புணர்த்தியவாறு. இறைமைக் குணங்களெனப் படுவனவெல்லாம் அவ்வெட்டினுள் அடங்கும். ஒன்பதாவதாக எண்ணத் தகுந்த, கருதத் தகுந்த குணம் வேறில்லை. எச்சமயத்திலுஞ் சொல்லப்பட்டிலது. ஆகலின் எண் குணத்தான் என்பதற்குத் கருதத் தகுந்த குணமுடையான் எனப் பொருள் கூறுவது பயனற்றது. அப்பொருள் கூறுவார் தம் கருத்தை அத்தொடருக்குட் புகுத்துகிறாரென்க. மனிதனது கருத்தைக் கடந்தது இறைமைக்குணம். அந்த எட்டுக் குணங்களுஞ் சைவாகமத்திற் கூறப்பட்டன என்பதை நூலோடியைந்து அழகர் தங்கருத்தாகக் கொண்டார். அவை வைணவாகமத்திற் கூறப்படாமை அவருக்குத் தெரியும். ஆகலின் அவ்வாகமந் தள்ளப்பட்டது. அணிமா முதலியன சித்திகளே. குணங்களல்ல. கடையிலா வறிவு முதலியன ஆருகத நூற் கொள்கை. ஆருகதமோ நாத்திகம். ஆகலின் குறிப்பில் அவையெல்லாம் எடுத்துக் காட்டித் தள்ளப்பட்டன.</div><div><br></div><div>உலகில் உயிர்கள் பிறக்கின்றன. பிறப்புச் சுகமுடையதா? துன்பமுடையதா?</div><div><br></div><div>'பிறவிப் பெருங்கடல் —-' (10),</div><div><br></div><div>'மாணாப் பிறப்பு' (351),</div><div><br></div><div>'பிறப்பென்னும் பேதைமை —-' (358),</div><div><br></div><div>'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை —' (362)</div><div><br></div><div>என்றது நூல். 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்'.</div><div><br></div><div>'நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉங் கூறப்பட்டன'.</div><div><br></div><div>'ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரண மாதலுடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>'வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் – பிறப்புத் துன்ப மாதலறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்' என்பது உரை.</div><div><br></div><div>இதனால் எவ்வகைப்பட்ட பிறப்புக்கும் அவிச்சையே காரணம், பிறப்புக்களெல்லாந் துன்பமே தருவன என்பது ஆசிரியர் கொள்கை. வினைகளில் தீவினை மாத்திரந்தான் பிறப்பைத் தருமென்பதில்லை. நல்வினையும் பிறப்புத் தருவதே.</div><div><br></div><div>'இருள்சே ரிருவினையுஞ் சேரா —-'</div><div><br></div><div>என்றது நூல். 'இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னுமிரண்டு வினையும் உளவாகா' என்பது உரை.</div><div><br></div><div>'நல்வினையும் பிறத்தற்கேது —' என்பது குறிப்பு. ஆகவே இறைவனாயுள்ளவனுக்கு அவிச்சையும் இருவினையுங் காரணமாக வரும் பிறப்பு இருக்கமுடியாதென்பது திண்ணம். ஆனால் கடவுள் பிறக்கலாம், அவர் பிறப்பதற்கு அவிச்சையும், இருவினையுங் காரணமாகா, அவர் சுவேச்சையாற் பிறக்கிறார் என்று கூறி மகிழுஞ் சமயங்களுமுள. அவிச்சையும், இருவினையுங் காரணமாகாத பிறப்பும் உண்டெனத் திருவள்ளுவர் யாண்டுஞ் சொன்னதில்லை. தம் கடவுள் பிறப்பதற்கு அவரது சுவேச்சையே காரணம் எனக் கூறுகிற சமயங்கள் பிறப்பின் காரணத்தில் முரண்பாட்டையேற்றி மக்களுக்குப் பிறப்புப் பற்றிய கவலையும், அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியும் உளவாகாதபடி தடுத்துவிடும்.</div><div><br></div><div>மேலும் ஆஸ்திகராயிருக்க விரும்புவாருக்கு ஒரு பொறுப்பான வேலையுண்டு. மெய்யான இறைவனாவான் எவன்? போலியிறைவராவார் எவர்? என்பதைக் கண்டு கொள்வதே அவ்வேலை. காண்டலாவது இதுவென்பதும், போலியிறைவராவார் இவரென்பதும் முன் சொல்லப்பட்டன. அவ்விருவகையாரையும் பிரித்தறிவதற்கு வாயில் ஒன்றேயுண்டு. மெய்யான இறைவன் பிறக்கமாட்டான். போலியிறைவரெல்லாம் பிறப்பர். பிறப்பின்மையும், பிறப்புண்மையுமே அவ்வாயில், சித்தியார் சூத்திரம் 2 செய்யுள் 25ல்</div><div><br></div><div>'நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பனயாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத வவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப்படுதலானும்,'… என்றருளிய சிவஞான முனிவரின் உரையைக் காண்க. 'வேதனைப்படு மிறக்கும் பிறக்கு மேல் வினையுஞ் செய்யும்' என்ற குறைபாடுடைய உயிர்களுள் ஒன்றை இறைவனெனக் கொண்ட மதம் அக்குறைகள் தன் கடவுளுக்கில்லாதது போற் காட்டிப் பிரசார வேலைகள் பல செய்யும். அவையெல்லாம் வெற்றிரைச்சல். மாதாவுதரத்துட் கருவாய்த் தங்கி யோனிசனாக வெளிப்படுதல் என்னும் பிறப்பு உயிர்களுக்கேயுண்டு. இறைவனுக்கும் அ·திருந்தால் அவன் உயிர்களின் பிறவித் துன்பத்தை யொழிப்பதெப்படி? ஓட்டை மரக்கலம் பிறிதோரோட்டை மரக்கலத்தைக் கரையேற்றுமா?</div><div><br></div><div>இனிப், பிறவாமையைக் குணமாகவுடைய அம்மெய்யான இறைவன் யார்? திருவள்ளுவர் வேத சிவாகமங்களை இறைவன் வாக்கெனக் கொண்டு விசுவசித்தவர். அவர் கூறும் விடையைக் காணாலாம். வேதம்,</div><div><br></div><div>'அஜாதோஜாத இத்யேவம் கச்சித் பீரு: ப்ரபத்யதே! ருத்யத்தே</div><div><br></div><div>தக்ஷ¢ணம் முகம் தேந மாம் பாஹிநித்யாச: !!' (சுவேதா)</div><div><br></div><div>என்றது அதற்குத் தமிழ்</div><div><br></div><div>'பெரும்பிணி யிதனைத் தீர்க்கு மருத்துவன் பிறவியில்லாப்</div><div><br></div><div>பரம்பொரு ளான முக்கட்பரமனே யென்று தேறி</div><div><br></div><div>முரண்பயில் விடையோன் றென்பான் முகத்தினைச் சரண்மெய்தி</div><div><br></div><div>விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்'</div><div><br></div><div>என்ற காஞ்சிப்புராணம். அதனால் பிறப்பில்லாத இறைவர் சிவபிரானெ யென்பதும், அவரே உயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுபவரென்பதும் பெறப்பட்டன.</div><div><br></div><div> வேதம்,</div><div><br></div><div> 'தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தைவதாநாம்</div><div><br></div><div>பரமஞ்ச தைவதம்! பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாம</div><div><br></div><div>தேவம் புவநேச மீட்யம்!! நதஸ்ய காரியம் கரணஞ்ச</div><div><br></div><div>வித்யதே நதித் ஸமாச்சாப் யதிகச்சத்ருச்யதே' (சுவேதா)</div><div><br></div><div>'பராத் பரதரம் ப்ரஹ்ம யத் பராத் பரதோ ஹரி: ! தத்</div><div><br></div><div>பராத் பரதோ ஹீசஸ் தஸ்மாத் துல்யோ திகோநஹி! ' (சரபம்)</div><div><br></div><div>என்றது. அதற்குத் தமிழ்</div><div><br></div><div>'மற்றாருந் தன்னொபா ரில்லான்' (தேவாரம்)</div><div><br></div><div>'……….கச்சிமயானத்தான்……………….</div><div><br></div><div>'சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:',</div><div><br></div><div>'மஹேசோ பகவா நாதி தேவ:' (சரபம்)</div><div><br></div><div>எனக் கூறி வலியுறுத்துகிறது. ஆதிபகவன் என்பது அவ்விறைவனுக்கு உத்தேசம். உத்தேசம் – பெயர். பெயரை முதலிற் கூறாமல் இலக்கணங்காணவும், பரி¨க்ஷ செய்யவுங் கூடாது. அ·து உத்தேசம் என்பதைக் காட்டவே 'ஆதிபகவன் – ஆதிபகவன்' என்று உரை கூறினார் அழகர்.</div><div><br></div><div>'சீர் கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்</div><div><br></div><div>சோர்விலடை யாற்றெனிந் தேஞ் சோமேசா – வோரி</div><div><br></div><div>லகரமுதல வெழுத்தெல்லா மாதி</div><div><br></div><div>பகவன் முதற்றே யுலகு'</div><div><br></div><div>என்ற சிவஞான முனிவரர் திருவாக்கு அவ்வுண்மைகளனைத்தையும் விளக்கி நிற்பதறிக.</div><div><br></div><div>திருக்குறள் புணர்ச்சி மகிழ்தல் என்னும் 111 -ஆவது அதிகாரத்தில்,</div><div><br></div><div>'தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ</div><div><br></div><div>றாமரைக் கண்ணா னுலகு' (1103)</div><div><br></div><div>என வருகிறது. அதில் செங்கண்மாலுலகம் நிரதிசயவின்பமுடையது என்றாரழகர். அங்ஙனமாயின் தாமரைக் கண்ணனாகிய திருமாலே பரம்பொருளெனக் கொண்டவராதல் வேண்டும் ஆசிரியர். அப்படியா? அன்று. ஏன்? ஊடலுவகை என்னும் 133-ஆவது அதிகாரத்தில் ஆசிரியர்</div><div><br></div><div>'புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு</div><div><br></div><div>நீரியைந் தன்னா ரகத்து' (1323)</div><div><br></div><div>என்றார். அதன் குறிப்பில் 'அப்புலவி பின்னே பேரின்பம் பயவா நின்றது' என்று காணப்படுகிறது. பேரின்பமும் நிரதிசயவின்பமும் ஒன்றே. புத்தேர் நாடென்பது எது?</div><div><br></div><div>'புத்தேளுலகத்தும் – தேவருலகத்தும்' (213)</div><div><br></div><div>என்ற உரையால் தேவருலகமே அதுவாம். இவ்வுலகத்தது சிற்றின்பம். அதை நோக்கத் தேவருலகம் பேரின்பத்தது. அதிற் சிறந்தது தாமரைக் கண்ணானுலகம். அவ்வளவே. அவ்வுலகை முத்தியுலகென்பதும், அக்கண்ணானைப் பரம்பொருளென்பதும் செல்லா. தாமரைக் கண்ணான் என்ற பிரயோகமே அதனை விளக்கும். திருமால் தம் கண்ணொன்றைப் பிடுங்கித் தாமரை பூவாகக் கொண்டு சிவபிரான் திருவடியில் அர்ச்சித்து அப்பிரானிடமிருந்து சக்கரத்தைப் பரிசாகப் பெற்றார். தாமரைக் கண்ணன் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. அவ்வரலாற்றை,</div><div><br></div><div>'யோவாம பாதார்ச்சித விஷ்ணு நேதரஸ் தஸ்மை ததெள</div><div><br></div><div>சக்ரமதிவ ஹ்ருஷ்ட:! தஸ்மை ருத்ராய நமோ அஸ்து!' (சரபம்)</div><div><br></div><div>என்றது வேதம். அங்ஙனம் சிவபெருமானால் அநுக்கிரக்கிக்கப்பட்டவர் திருமால். அடுத்து,</div><div><br></div><div>'அடியளந்தான் றாஅயது' (610) என்று தொடரைக் கவனிக்கலாம்.</div><div><br></div><div>'அடியளந்தான் தாயது எல்லாம் – தன்னடியளவானே எல்லாவுலகையுமளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்' என்றது உரை. திருமால் திரிவிக்கிரமவதாரத்தில் உலகைத் தம் பாதத்தால் அளந்தார். இறுதியில் அவ்வவதாரம் சிட்சிக்கப்பட்டது. சிட்சித்தவர் சிவபெருமானே. வேதம் அச்சரிதத்தை.</div><div><br></div><div>'யோ மத்ஸ்ய கூர்ம வராஹ ஸிம்ஹாந் விஷ்ணும்</div><div><br></div><div>க்ரமந்தம் வாமந மாதிதேவ:! விவிக்லபம் பீட்யமாநம்</div><div><br></div><div>ஜகாந பஸ்கீசகார மந்மதம் யமஞ்ச! தஸ்மை ருத்ராய</div><div><br></div><div>நமோ அஸ்து!' என்று கூறி விளக்கியது.</div><div><br></div><div>'குறளா யணைந்து மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்</div><div><br></div><div>திறலா னளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை</div><div><br></div><div>யிறவே சவட்டி வெரிநெலும்பை யெழிற்கங் காளப் படையென்ன</div><div><br></div><div>வறவோர் வழுத்தக் கைக்கொண்ட வங்க ணாளன் றிருவுருவம்'</div><div><br></div><div> என்றது காஞ்சிப்புராணமும். அங்ஙனம் சிவபெருமானால் நிக்கிரகிக்கப் பட்டவர் திருமால். சிவபெருமான் செய்யும் நிக்கிரக அனுக்கிரகங்களுக்கு இலக்காயவர் திருமால். அடியளந்தான், தாமரைக்கண்ணான் என்பவற்றை அவ்வுண்மை விளக்கத்திற்காகவே ஆசிரியர் எடுத்தாண்டார். தாமரைக் கண்ணானுலகு மாயைக்குட்பட்டதொரு போகத்தானம். சிவலோகமே. மாயையைக் கடந்த முத்தித்தானம். அச் சிவபெருமானே மெய்யான இறைவனெனக் கொள்ளாத மதம் திருக்குறளுக்குப் புறம்பே.</div><div><br></div><div> கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான் முதலிய ஆண்பாற் சொற்களே வருகின்றன. அவனைப் பெண்ணெனக் கொண்டு வணங்கும் மதம் அந்நூலுக்கு அயலே.</div><div><br></div><div> </div><div><br></div><div>உயிர்</div><div><br></div><div>உயிரென்னுஞ் சொல் தனக்கெனப் பொருளில்லாதது என்கிறது ஒரு சமயம். உயிர் பிரமத்தின் விசேடணம் என்கிறது இன்னொரு சமயம். இறைவன் மனிதவுடலையுண்டாக்கி அதன் மூக்கில் தன் சுவாசத்தை ஊதி உயிரை இடையில் சிருட்டித்தான் என்கிறது மற்றொரு சமயம். இப்படிப் பட்ட சமயங்கள் இன்னும் பல. ஆனால் திருக்குறள்.</div><div><br></div><div>'மன்னுயிர்' (244), 'மன்னுயிர்க்கு' (318), 'உடம்போ டுயிரிடை நட்பு' (338) என்றது.</div><div><br></div><div>'மன்உயிர் – நிலைபேறுடைய உயிர்கள்' என்பது உரை.</div><div><br></div><div>'உயிர்களெல்லாம் நித்தமாகலின், மன்னுயிரென்றார்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>'மன்உயிர்க்கு – நிலைபேறுடைய உயிர்கட்கு' என்பது உரை.</div><div><br></div><div>'சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முண் மாறாகலின், வினை வயத்தாற் கூடிய தல்லது நட்பில் வென்ப தறிக.'</div><div><br></div><div>என்பது குறிப்பு. உயிரைப் பற்றி விபரீத புத்தி கொண்டுள்ள மேற்காட்டிய சமயங்கள் உயிர் நித்தப் பொருளென்கிற திருக்குறளைத் தமக்கும் உகந்ததென்றல் வீண்பேச்சென்க.</div><div><br></div><div>இன்னும், உயிர் மனிதனுக்கேயுண்டு, மிருக முதலிய பிற பிராணிகளுக்கில்லை. அவற்றினிடங் காணப்படுவது இயற்கையுணர்ச்சி (Instinct) யே, அவையறந்தால் அப்போதே அவ்வுணர்ச்சியும் நசித்துச் சூனியமாய்ப் போம் எனக் கூறும் சில சமயங்கள். ஆனால்</div><div><br></div><div>'தன்னுயிர் நீப்பினும் செய்ற்க தான்பிறி</div><div><br></div><div>தின்னுயிர் நீக்கும் வினை' (327)</div><div><br></div><div>என்றது நூல். அதனால், ஏனைப் பிராணிகளுக்கும் உயிருண்டு, அவற்றிற்கு அவ்வுயிர் இனியதுமாகும் என்பது தெரிகிறது. பிராணிகளை வதை செய்வதும், வதைக்கப்பட்ட பிணங்களைத் தின்பதுமாகிய பாவங்களைச் செய்யத் தூண்டும் அச்சமயங்கள் திருக்குறளில் உரிமை கொண்டாடலாமா?</div><div><br></div><div>பிறப்பு</div><div><br></div><div> மனிதன் ஒருமுறையே பிறப்பான் எனச் சில சமயங் கூறும், திருக்குறளோ,</div><div><br></div><div>'பிறவிப் பெருங்கடல்' (10)</div><div><br></div><div> 'எழுபிறப்புத் தீயவை தீண்டா' (62)</div><div><br></div><div> 'உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்</div><div><br></div><div>செல்லாத்தீ வாழ்க்கை யவர்' (330)</div><div><br></div><div> 'உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி</div><div><br></div><div>விழிப்பது போலும் பிறப்பு' (339) என்றது. 'காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>எழுபிறப்பும் தீயவை தீண்டா – 'வினை வயத்தாற் பிறக்கும் பிறப்பேழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா' என்பது உரை.</div><div><br></div><div>'செயிர் உடம்பிள் செல்லாத் தீவாழ்க்கையவர் – நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை யுடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப – இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்ற வுடம்பினின்று நீக்கினவரென்று சொல்லுவார் வினை விளைவுகளையறிந்தோர்' என்பது உரை.</div><div><br></div><div>'உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருகின்றாற்போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருமென்பது கருத்து' என்பது குறிப்பு. 'உயிருடம்பின்' என்ற திருக்குறள் உரையநுமானமுமாம். உயிர்கள் மாறி மாறிப் பிறக்கும் என்ற திருக்குறளுக்கு உயிர்கள் ஒரு முறை தான் பிறக்கும் என்ற சமயங்கள் உவப்புடையவாமா?</div><div><br></div><div>சுவர்க்க நரகம்</div><div><br></div><div> சுவர்க்க நரகம் என வேறுலகங்களில்லை என்கின்றன சில சமயங்கள்.</div><div><br></div><div> 'புத்தே ளுலகத்தும் —-' (213)</div><div><br></div><div>'தேவ ரனையர் கயவ ரவருந்தா</div><div><br></div><div>மேவன செய்தொழுக லான்' (1073)</div><div><br></div><div> 'அண்ணாத்தல் செய்யா தளறு' (255)</div><div><br></div><div> என்றது நூல். 'ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மைய ராதலின், புத்தே ளுலகத் தரிதாயிற்று' என்பது குறிப்பு.</div><div><br></div><div>அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் – அ·தியாதனானெனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்' என்பது உரை.</div><div><br></div><div> 'நெடுங்காலம் நிரயத்து ளழுந்தும்' என்பது குறிப்பு. அவற்றில் சுவர்க்கம் அங்குள்ள தேவர்களின் ஒழுகலாற்றோடு வர்ணிக்கப்படுவது காண்க. இவ்வுலகத்தில்லாத் நீண்ட கொடிய துன்பங்கள் நிறைந்தது நரகம் எனத் தெரிகிறது. அவற்றை மறுக்கும் மதங்கள் அந்நூலைத் தொடலாமா?</div><div><br></div><div>இறைவன் நிமித்த காரணம்</div><div><br></div><div>இறைவன் வேதாகமங்களை யியற்றினானென்ற விஷயம் முன் விளக்கப்பட்டது. 'கற்றீண்டு' (356) என்றதன் குறிப்பில் 'வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை' என்பதும் 'பிறப்பென்னும்' (358) என்றதன் உரையில் 'வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளை' என்பதும் காணப்படுகின்றன. 'உலகியற்றியான்' (1062) என்ற நூற்றொடருக்கு 'இவ்வுலகத்தைப் படைத்தவன்' என்பது உரை. அவனுக்குத் தனித்த உபாதான காரணத்தன்மையாவது, நிமித்தோபதான காரணத்தன்மை யாவது உண்டெனத் தொனிக்கும்படி தானும் ஒரு பாக்கூடச் செய்தாரிலர் ஆசிரியர். ஆகலின் அவன் உலகிற்கு நிமித்த காரணமேயாவானென்கிற திருக்குறளுக்கு நிமித்தோ பாதான காரணமாவா னென்கிற சமயங்கள் முற்றிலும் புறகே.</div><div><br></div><div>விச்சை</div><div><br></div><div>'இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள்' என்றது 5இன் குறிப்பு. 'ஒரு பொருளுங் காட்டா திருவளுருவங்காட்டு மிரு பொருளுங் காட்டாதிது' என்பது திருவருட்பயன். இருள் பொருளைக் காட்டாது, தன்னை காட்டும்; ஆணவமலம் தன்னையுங் காட்டாது என்பது கருத்து. அங்ஙனமாய அவிச்சையை (ஆணவத்தை) இன்ன தன்மைத்தென யாராற் கூற முடியும்? ஒருவராலுமாகாது. 'காமம், வெகுளி' (360) என்றதன் குறிப்பு 'அநாதியாய அவிச்சை' யென்கின்றது. ஆணவம் அநாதியாய தொரு மலமென்பது கொள்ளப்பட்டது. அம் மலம் இல்லையென்ற சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?</div><div><br></div><div> வினை</div><div><br></div><div>வினை அல்லது கருமமலம் என்பதொன்றில்லையென்பர் சில சமயிகள். 'இருள்சே ரிவினையும்' (5) என்ற தொடருக்கு 'மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும்' என்பது உரை. 'அளவின்கண்' (2860) என்றதன் உரைக் குறிப்பில் 'அதற்கு (உயிர்ப் பொருளுக்கு) அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்குற்ற விளைவுகள்' என வருகின்றது. 338 – இன் குறிப்பு முன்னர்க் காட்டப்பட்டது. கருமமலம், உயிர்க்கு அநாதியாய் வருவதென்பது காண்க. அம்மலத்தை யில்லையென்பவர்க்குத் திருக்குறளிலுந் தொடர்பில்லையென்பது.</div><div><br></div><div>மாயை</div><div><br></div><div> தத்துவ வுணர்வு, தத்துவ ஞானம், மெய்யுணர்தல் என்பன ஒன்று அ·தாவதென்னை?</div><div><br></div><div>'சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்</div><div><br></div><div>வகைதெரிவான் கட்டே யுலகு' (27)</div><div><br></div><div>என்றது நூல். தத்துவம் இருபத்தைந்து. அவற்றையறிந்தவனே உலகை யறிந்தவன். அவ்விருபத்தைந்தும் பிரகிருதி பிரகிருதியின்பாற்பட்டவை. சாங்கிய நூல் அவ்வளவே சொல்லும். புருடதத்துவமாவது பஞ்ச கஞ்சுகத்தோடு கூடியது. பஞ்ச கஞ்சுகங்களாவன காலம், நியதி, கலை, வித்தை அராகம் என்பன. அவை அசுத்த மாயா காரியங்கள். சுத்தமாயா காரியங்கள் வேறு. சைவ சமயத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மாயேயாம். தோன்றி நின்று மறைவன. அவற்றிற்கு உபாதாநம் மாயை. அது நித்தம். அதனை உடன்படாத சமயிகளுக்குத் திருக்குறள் அயலாகும்.</div><div><br></div><div>உயிர் சேதனமாய் அருவாய் நித்தமாயுள்ள பொருள் என்பது முன்காட்டப்பட்டது. 'புருடன் தானொன்றிற் றோன்றாமையானும்' தன்கட்டோன்றுவனவின்மையானும் இரண்டுமல்லன்' என்றது 27- இன் உரைக்குறிப்பு. புருடன் – உயிர், 422 – இன் குறிப்பில் 'அ·து (அறிவு) உயிர்க்குணம்' என்றிருக்கிறது. அதனால் உயிர் குணியென்பது சித்தம். அத்தகைய உயிரைச் சத்துப்போலி, சிதாபாசன் என்பவெல்லாம் திருக்குறளுக்கு மாறானவை.</div><div><br></div><div>'பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்</div><div><br></div><div>செம்பொருள் காண்ப தறிவு' (358)</div><div><br></div><div>என்றது நூல். 'பிறப்பு என்னும் பேதமை நீங்க – பிறப்பிறகு முதற் காரண மாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு – வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது' என்பது உரை. 352- இன் உரைக்குறிப்பில் 'வீடாவது நிரதிசய வின்பமென்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருளென்பதூஉம், கூறப்பட்டன' என வருகிறது. பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெடப் பெறுதலும், நிரதிசய வின்பம் அடையப் பெறுதலுமே உயிர்க்கு முத்தியாகும். உயிர் அருவுடம்பு உருவுடம்பு என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதன் சேதனத் தன்மை விளங்கும் அதிற் சிவஞானம் பிரகாசிக்கும். அவ்வுயிர் அதனைக் கண்டு கொண்டிருப்பது நிரதிசய 'வின்பத்தாய் நிற்ற' (370 இன் குறிப்பு)லாம். 'அவ்வுயிர்க்கு உடம்பு மிகை' (345) யே 'எற்றைக்கும் எச்சீர் வாய்ந்த காயமும் பகைமையன்றோ' என்றது தணிக்கைப் புராணமும், காயம் – உடம்பு. ஆகவே முத்தியிலும் உயிர்க்குத் தேகமுண்டெனக் கொள்ளுஞ் சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?</div><div><br></div><div>கேவலப் பொருள்</div><div><br></div><div>358இல் செம்பொருள் என்ற சொல் வருகிறது. 'தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையாற் றன்னை யொன்றுங் கலத்தலின்மையிற் றூய்தாய்த், தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருளென்றார்' என்றது அதன் குறிப்பு. அப்பொருளைக் காணகையாவதென்னை? 'உயிர் தன்னவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்' இதுவும் அக்குறிப்பு. அப்பாவனைக் கவசியமென்னை? 'உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அ·து அதுவாய்த் தோன்றுமென்பது எல்லாவாகமங்கட்குந் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற் பொருட்டுக் கேவலப் பொருளையே பாவி' த்தல் வேண்டும். இதுவும் அக்குறிப்பு. செம்பொருள், 'மெய்ப்பொருள்' (356), 'உள்ளது' (357) என்பனவெல்லாம் அக்கேவலப்பொருளே. கேவலப்பொருளென்றாலும் அப்பொருளின் சிறப்புப் பெயர் வெளிப்படக் கூறப்பட்டதாகாது. திருக்குறள் தனக்குப் பூர்வமாகிய வேதத்திற்போய் ஆராயும் படி நம்மைச் செலுத்துகிறது. வேதம்,</div><div><br></div><div>'யநா தமஸ்தந் நதிவா ந ராத்ரிர் ந ஸந்த சாஸச்</div><div><br></div><div>சிவ ஏவ கேவலா: !' (சுவேதா) என்றது. அதற்குத் தமிழ்</div><div><br></div><div>'பகலிர விலதுள தெனும்ப குப்பிலா</div><div><br></div><div>வகலரு மிருள்பொதி யநாதி காலையி</div><div><br></div><div>லுகலரும் பரசிவ னொருவ னேயுளன்</div><div><br></div><div>மிகுபொரு ளவனிடை வெளிப்பட் டோங்குமால்' என்றது காஞ்சிப்புராணம். ஆகவே அக்கேவலப் பொருள் அல்லது செம்பொருளாவார் சிவபிரானேயென்பது திருக்குறட் கருத்தாதல் ஓர்க. கேவலம்- தனி. கேவலவுணர்வு அல்லது 'மாசறு காட்சி' (352) என்பதுஞ் சிவஞானமே. எல்லைவுயிர்களுக்கும் 'வீடாகிய ஈறிலின்பன்' (328 இன் குறிப்பு) ஈயவல்ல பிரான் சிவபெருமானேயென்பதைச் சம்மதியாத சமயங்கள் திருக்குறளைச் சம்மதிப்பது நாடகமே.</div><div><br></div><div>வேள்வி</div><div><br></div><div> திருக்குறள் வேள்வியைக் கண்டிக்கிறதாவென்பதைப் பார்க்க வேண்டும்.</div><div><br></div><div>'விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்' (88)</div><div><br></div><div>என்றது நூல். 'விருந்தினரை யோம்பி வேள்விப் பயனை யெய்தும் பொறியிலாதார்' என்பது உரை. அவ்வேள்விக்கு மானுடயாகம் என்று பெயர்.</div><div><br></div><div>'அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற</div><div><br></div><div>னுயிர்செகுத் துண்ணாமை நன்று' (259) என்றது நூல். 'அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>பாவத்தைவிடப் புண்ணியஞ் சிறந்தது என்று சொல்வது அர்த்தமற்றது. ஒரு பாவத்தைவிட இன்னொரு பாவங் கொடியது எனச் சொல்லலாம். புண்ணியங்களுக்குட் பசு புண்ணியத்தைவிடச் சிவபுண்ணியஞ் சிறந்ததெனச் சொல்வது பொருந்தும். இங்கும் வேள்வியும் அறம், கொல்லாமையும் அறம். ஆயினும் முன்னையதைவிடப் பின்னையது மேல். அங்ஙனம் கொள்வதே நியாயம். திருவள்ளுவருக்கும் அதுவே கருத்து. இல்லாவிட்டால் அவ்விரண்டையும் அவர் ஓப்பு நோக்கியாராயமாட்டார். அவர் வேள்வியைப் பாவக் கூட்டத்திற் சேர்த்தாரென்பது மடமை.</div><div><br></div><div>'செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி</div><div><br></div><div>னான்றாரோ டொப்பர் நிலத்து' (413) என்றது நூல். 'அவியாகிய வுணவு தேவர்க்கு வேள்வித் தீயிற் கொடுப்பன. அறிவானிறைந்தமையான் ஆன்றா ரென்றும் துன்பமறியாமையாற்றேவரோ டொப்ப ரென்றுங் கூறினார்' என்பது குறிப்பு.</div><div><br></div><div>வேள்வியைச் சிறப்பித்தார் திருவள்ளுவர் என்பதை அதனாலுந் தெரிக. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவரைத் திருக்குறள் மதிக்குமோ?</div><div><br></div><div> உலகம் அழிவது</div><div><br></div><div> உலகம் அழியாது, நித்தம்: உலகிலுள்ள பொருள்களே அழியும் என்கின்றன சில மதங்கள்,</div><div><br></div><div>'ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்</div><div><br></div><div>பொன்றுந் துணையும் புகழ்' (156)</div><div><br></div><div>என்றது நூல். 'பொன்றுந்துணையும் – உலக மழியு மளவும்' என்பது உரை. ; உலகிற் கழிவுண்டென்பது அதனால் தெரிகிறது. உலகம் அழியாதென்ற சமயங்கள் அந்நூலுக்கு விலக்கன்றோ?</div><div><br></div><div>புராணங்கள்</div><div><br></div><div>'ஐந்தவித்தான்' (25), 'அன்பிலார்' (72), 'கூற்றங் குதித்தலும்' (269), 'மடியிலா' (610), 'ஏந்திய கொள்கையார்'(899) என்ற பாக்களில் முறையே கெளதமர், ததீசி, மார்க்கண்டேயர், திரிவிக்கிரமன், நகுஷன் என்பவரின் சரித்திரங்கள் வருகின்றன. அவையெல்லாம் புராணங்களே. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' (1146) என்ற புராணப் பகுதியைக் கண் திறந்து நோக்குக. திருக்குறள் முழுவதிலும் இலெளகிகர் சிலரால் இப்போது மதிக்கப்பட்டு வருகிற வரலாற்றுக் கதைகளிலிருந்து ஒன்றேனும் எடுத்தாளப்படவில்லை. அதையுங் கருதுக. அங்ஙனமாகப் புராண நிந்தை கூறுஞ் சமயிகள் திருக்குறளிற் செல்லாமா?</div><div><br></div><div>சாதி</div><div><br></div><div> பாரத தேசத்தில் சாதிபேதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இத்தேசத்தை யாண்ட முந்திய வேற்றரசுகள் அதையழிக்கக் கடும் பிரயாசையெடுத்தன. இன்றைய அரசுக்கும் அப்பிரயாசையுண்டு. சதாசார அனுஷ்டானங்களைப் பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்த சாதிகள் சில. அங்ஙனம் வாழ மற்றைச் சாதிகள் இடங்கொடுத்தன. போதுமான அளவு சகாயமும் புரிந்தன. அவற்றிடம் அப் பழக்க வழக்கங்கள் இல்லாமற் போனாலும் மதிப்புப் பெற்றிருந்ததிற் குறைவில்லை. சாதி பேத மிகுந்த நாட்டில் வரவரச் சாதித் துவேஷங் கிளம்பலாயிற்று. எல்லாருக்கும் லக்ஷியம் ஒன்றானால் பேதத்தால் துவேஷ முண்டாகாது. லக்ஷியம்பிளந்தது. துவேஷமும் புறப்பட்டது. நல்ல பழக்க வழக்கங்கள் மதிக்கப்படவில்லை. அவற்றையுடைய சாதிகள் அவற்றைக் கைவிடுமளவுக்குப் பரிகசிக்கப் படுகின்றன. அச்சுறுத்தப்படுகின்றன. கலவைகளால் அவ்வொழுக்கங்கள் மறைகின்றனவே யன்றித் தாமில்லாத சாதிகளிற் பரவுவதாகத் தெரியவில்லை. புலாலுணவு கொள்ளாமை நல்ல பழக்கம். புலாலுண்ணாத சாதிகளிலும் இப்போது அவ்வுணவு புகுவது போலிருக்கிறது. பல்லாயிர வருடங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்த வொழுக்கம் அது. எவ்வளவு நெருக்கடியில் எவ்வளவு சிரமத்தோடு அது பரிபாலிக்கப்பட்டிருக்கும்! எவ்வளவு சிறந்த பாக்கியம் அது! அதனை யறியமாட்டாத, பொறுப்பற்ற சில விருதாக்கள் அச்சாதிகளில் தோன்றின. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளாயின அவை. அவை சகவாச தோஷத்தால் 'புலால்மறுத்த'லை விட்டன. 'சாதி வித்தியாசந் தொலைக' என்ற கூச்சலே அதற்குக் காரணம். அதற்குமுன் 'புலாலுணவு தொலைக' என்றன்றோ கூவ வேண்டும். அ·துண்டா? உண்மையில் உலக சுகானுபவத்துக்குச் சாதி வித்தியாசம் வேண்டாம். சாதி வித்தியாசமென்ன, முறை வித்தியாசமும் அநாவசியம். மிருக முதலிய பிற வர்க்கங்களில் அவ்விரண்டுமில்லை. அவையடையுஞ் சுகமும் அதிகம். ஆனால் உலக சுகத்தையுத்தேசித்ததல்ல அவ்விருவகை வித்தியாசங்களும். அதை நினைவிற் கொள்வது நலம். நல்ல பழக்க வழக்கமுள்ள சாதிகளின் இன்றைய நிலையைக் கவனித்தால் கந்தபுராணம், அசுரகாண்டம், தேவரையேவல் கொள்படலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் பட்ட துயரத்தை அவையும் எய்த நேர்ந்திடுமோவென அஞ்சவேண்டியதிருக்கிறது.</div><div><br></div><div>சாதிபேதம் வேண்டுமா? வேண்டாமா? அது பற்றிய பேச்சு இங்கில்லை. அதனை வேண்டாமென்பவர் தம் கொள்கைக்கு சாதகமாக அறிஞர் பலரின் வாக்கியங்களையெடுத்துக் காட்டுகின்றனர். மேலை நாட்டார் எழுதியவற்றிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாம். அக்கொள்கையில் ஊறிப் போன இந்நாட்டவரெழுத்துக்களும் அவருக்கு உதவுக. ஆனால் சாதிவித்தியாசத்தைக் கண்டிக்கத் திருக்குறளிலும் ஆதார மிருக்கிறதாமே, அதைத்தான் யோசிக்க வேண்டும். பிறப்பால் சாதிப்பேதமில்லை. உயர்வு தாழ்வில்லையென்பதைப்</div><div><br></div><div>'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா</div><div><br></div><div>செய்தொழில் வேற்றுமை யால்' (972) என்றமையால் தெரிகவென்கிறாரவர். இச்செய்யுள் 'பெருமை' என்னும் அதிகாரத்தில் வருகிறது. அதற்கேற்ப அழகர் உரை வகுத்தார். 'செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா' என்ற பகுதிக்கு உரையு முண்டு. குறிப்பு முண்டு, 'சிறப்பொவ்வா' மைக்குக் காரணம் 'செய்தொழில் வேற்றுமை' யென நூலே கூறிற்று. 'பிறப்பொக்கும்' என்பதற்கு நூலிற் காரணமுண்டா? இல்லை, உரையிலுங் குறிப்பிலும் அழகர் சொல்லியுள்ளார். சாதிபேதம் வேண்டாதார் அதையேற்க வேண்டும். ஏற்பாராயின் சாதிபேதம் அவசியம் என்பது அந்நூலுக்குச் சம்மதமென அவர் கொண்டவராயினர். ஏற்க மறுத்தால் அவர் காரணமொன்று கண்டு வெளியிடுக. பிறகு அதனை ஆராயலாம். அவர் ஓருரை கூறத் துணியும் போது நானும் ஒன்று கூறினாலென்ன? அவருக்காக நானும் ஓருரை கூறுகிறேன். எல்லா உயிர்க்கும் – மனிதன், நாய், பன்றி, கழுதை முதலிய சகல உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும் – தாய் வயிற்றிலிருந்து வெளியாவதே பிறப்பாதலால், அப்பிறப்புச் சமமாகவேயிருக்கும். செய்தொழில் வேற்றுமையால் – ஆனால் அவை செய்து, செய்கின்ற செய்யுந் தொழிற்பாடுகளின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வா – பெருமை சிறுமையென சிறப்பியல்புகள் சமமாகா என்பது. இவ்வுரையை அவர் சம்மதித்தால் மனிதன் தன் பிறப்பால் உயர்வடைய முடியாது. உலகில் மற்றைச் சீவவர்க்கங்களை விலக்கித் தனக்கேயுரிமை யுண்டெனக் கூற நியாயமுமில்லை.</div><div><br></div><div>சாதி பற்றிய உயர்வு தாழ்வுகளைத் திருவள்ளுவர் உடன்பட்டுள்ளரென்பதை இன்னுங் காண்க.</div><div><br></div><div>'ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க</div><div><br></div><div>மிழிந்த பிறப்பாய் விடும்' (133) என்றது நூல். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையராக உயர்குலத்தவராவராகலின் குடிமையா மென்றும் உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற் றவறத் தாழ்ந்த வருணத்தராவராகலின் இழிந்த பிறப்பாய் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத்திலும் இல்வழிப்படுங் குற்றம் பெரிதென்றவாறு' என்பது குறிப்பு. இதில் குடிமை, இழிந்த பிறப்பு என்றவற்றின் வேற்றுமை நயம் புலப்படுத்தப்பட்டது. பிறப்பில் இழிவு உண்டென்பதனால் உயர்வுண்டென்பதும் பெறப்படும்.</div><div><br></div><div>'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்</div><div><br></div><div>கற்றா ரனைத்திலர் பாடு' (409) என்றது நூல். 'மேற்பிறந்தார் – உயர்ந்த சாதிக்கட் பிறந்தார். கீழ்ப் பிறறந்தும் – தாழ்ந்த சாதிக்கட் பிறந்து வைத்தும்' என்பது உரை.</div><div><br></div><div>'உடலோடொழியுஞ் சாதி யுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம்' என்பது குறிப்பு. உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி என்பது போல் உடலோடு செல்வது சாதியுயர்ச்சி யென்பது சரியே. ஆயினும் உடல் பற்றிய, சாதியின் உயர்ச்சி தாழ்ச்சிகள் உடலுக்குரியவாய்த் திருக்குறளாற் சம்மதிக்கப்பட்டனதானே.</div><div><br></div><div>'விளங்கொடு மக்களனைய ரிலங்குநூல்</div><div><br></div><div>கற்றாரோ டேனை யவர்' (410)</div><div><br></div><div>என்றது அடுத்த பாட்டு. 'விலங்கின் மக்கட் கேற்றமாய் உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினரல்ல ரென்பதாம்' என்பது குறிப்பு. அங்ஙனம் கல்லாதார் பிறப்பும் சுற்றார் பிறப்பும் ஒவ்வா என்றதால் கல்லாதாரை விலங்குக் பிறப்பினரெனச் சொல்லிவிடலாமா? விலங்கைப் போன்று அவரை நடத்தலாமா? நடத்தினால் நடத்துபவரை அவர் சும்மா விடுவாரா? கல்லாதவரைக் கற்றவராக்கி மனிதப் பிறப்பின் உயர்வை அவர் காப்பாற்றிக் கொள்ளும்படி செய்வதே முறை. அப்படியே அந்தந்த வருணத்தாரிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை நீக்கித் தந்தம் வருணத்துக்குரிய மதிப்பை அவரவர் காத்துக் கொள்ளுமாறு செய்யவேண்டும். திருவள்ளுவர் கருத்து அதுவே.</div><div><br></div><div>இனிப் 'பார்ப்பான் பிறப்பு' (134), 'அந்தணர்' (543), 'அறுதொழிலார்' (560) என வருகின்றன. அவை வந்துள்ள இடம் பற்றி நடு நிலைப் புத்தியோடு அவற்றை நோக்குக. அவை பார்ப்பனச் சாதிக்குரிய பெயர்களேயென்பது புலப்படும். அச்சாதி ஆண்டுப் போற்றப்பட்டிருப்பதும் உண்மை.</div><div><br></div><div>இன்னொரு முக்கிய விஷயம். உத்தமி வயிற்றிற் பிறந்தாரும் விபசாரி பயிற்றிற் பிறந்தாருமுளர். அவ்விருவகைப் பிறப்புக்களும் சமான கெளரவமுடையனவா? உயர்வு இழிவுகள் அவற்றிற் கிடையாவா? கிடையாவென்பவர் உத்தமி வயிற்றுப் பிறப்பையே யிகழ்பவர்ல்லரா? உத்தமிகளையே யிகழ்பவரல்லவா? அல்லது அதனையும் அவரையும் உதாசீனமேனுஞ் செய்பவரல்லவா? கற்பு வரம்பழிந்தவளது வயிற்றுப் பிறப்பைத் திருக்குறள் இகழ்ந்தது. அப்பிறப்புடையார் நல்ல செயல்களில் நாட்டம் வையார். அவர் போன்றார் பல்கிப் பெருகுவது நாட்டின் தரத்தையே கீழ்ப்படுத்திவிடும் என்றும் அது கூறியது.</div><div><br></div><div>'நலத்தின்க ணாரின்மை தோன்றி னவவைக்</div><div><br></div><div>குலத்தின்க ணையப் படும்' (958) என்றது அது. ஆகவே சாதி, குலம் பற்றிய உயர்வு தாழ்வுகள் உளவென்பது திருக்குறளுக்கு முழுக்க அங்கீகாரமேயென்க. அதனை மறுக்குஞ் சமயங்கள் அந்நூலுக்கு அருகில் வரத்தானும் தகுதியுடையவாமா?</div><div><br></div><div>முடிப்புரை</div><div><br></div><div>இப்படியே எழுதிக் கொண்டு போகலாம். 'ஒரு பானைச் சோற்றுக்குப் ஒரு சோறு பதம்' என்றபடி இவ்வளவில் இதனை நிறுத்துகிறேன். இதுவரை இங்குச் சொல்லப்பட்டதென்னை? மெய்யான சமயமாயிருந்து வருவது ஒன்றேயொன்றுதான். அது சித்தாந்த சைவமே. திருக்குறள் அச்சமயத்தையே அதன் சநாதன வுண்மை கெடாதபடி தன்பாற் கொண்டு போற்றுவது, அதனால் அச்சமயத்துக்கே உரியநூல், மற்றைச் சமயங்களெல்லாம் போலியே என்பதாம். திருக்குறள் சைவ சமய நூலேயென முன்னும் பலர் பேசியிருக்கின்றனர். எழுதியுமிருக்கின்றனர். ஆயினுமென்? அக்குறள் தமக்கும் பொதுவெனச் சொல்லிக்கொண்டு தம் ஆபாசக் கடையை விரிப்பதற்கு அந்நூலைப் பயன்படுத்திக் கொள்பவரும் இல்லாமற் போகவில்லை. என் செய்வது? அவருட் பலர் திருக்குறளாற் கடியப்பட்ட ஒழுகலாறுகளைத் தம் கொள்கைகளாகவுடையவர்.</div><div><br></div><div>'காட்சியே அளவை யாவதென்றும், நிலம், நீர், தீ, வளி யெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தாற் றோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்பு போல வெளிப்பட்டழியு மென்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும், பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன வென்றுஞ் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கேற்ப ஒழுகு' (281) வாரும்.</div><div><br></div><div>'மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளுமில்லையெனவும், மற்றுமித்தன்மையவுஞ் சொல்லும் மயக்கநூல் வாக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணி' (351) வாருமாயிருப்பா ரவர். அவர் திருக்குறளையும் அப்படிப்பட்ட தொரு நூலென உலகிற்குக் காட்டவே அதனைப் பற்றிக் கொண்டு திரிகின்றனர். நாடு கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதென அரசியலார் பலரே இன்றுங் கூறி வருந்துவது பத்திரிகைகளிற் பிரசித்தம். அதற்கேற்பத் தொன்னூல்களையுஞ் சிதைத்துத் திரித்துப் பொருள் கூறி யலைந்தால் அவை இன்றையவுலகைக் கரையேற்றுமா?</div><div><br></div><div>போலிச் சமயங்களுக்கும் தம் கொள்கைகளுட் சில பலவற்றிற்கு அந்நூலிலும் பிரமாண வாக்கியங்கள் அகப்படக்கூடும். அவை அவற்றையெடுத்துக் காட்டலாம். 'அந்நிய நூலின் விதியவிரோதமே லுன்னேல் பழுதென் றுளத்து' என்றது சைவ சமய நெறி, அவ்விதிபற்றியது அவ்வெடுத்துக் காட்டு.</div><div><br></div><div> பலவூர்களிலும், பாடசாலை முதலிய பலவிடங்களில் திருவள்ளுவரின் பெயராலும், திருக்குறளின் பெயராலும் கழகங்களும், படிப்பகங்களும், நூல் நிலையங்களும் மலிந்துள்ளன. சைவ மக்கள் அது பற்றி மகிழ வழியில்லை. ஏன்? அங்குச் சைவ சமய சேவைக்கு இடங் கிடைப்பது வெகு சிரமம். திருவள்ளுவ நாயனார் திருநீறுங் கண்டிகையும் அணிந்திருப்பவராகப் பெரிய படங்கள் எழுதிப் பல பொது நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். இப்போது அச் சின்னங்கள் அழிக்கப்பட்டுப் போன படங்களே அக்கழக மாதியவற்றில் சாத்திவைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டுமிருக்கின்ற காடுகளில் மான் முயல் முதலிய் ஏழைப்பிராணிகள் பல திரிகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்புடையார் அங்கு யாருமிலர். அவற்றை அன்பாலுரிமைகொண்டு பாலிருப்பா ரிருந்தாலும் அவற்றிற்கு அவ்வுணர்ச்சியுங் கிடையாது. நின்றவரை நெடுஞ் சுவர் விழுந்தபிறகு குட்டிச்சுவர் என்ற முதுமொழிக்கேற்ப அவை வாழ்ந்து வருகின்றன. அதனால் அவற்றுட் சில சிங்கங்களுக்கு இரை, சில புலிகளுக்கிரை, சில வேடர்களுக்கிரை, சில பிடிபட்டுக் கூண்டுச் சிறைகளிற் கிடக்கின்றன, சில பிடித்தவரது குற்றேவல்களைச் செய்து வயிறு வளர்க்கின்றன. அதை நினைத்துப் பார்க்க. சைவ சமூகத்தின் இன்றைய நிலையையும் எண்ணுக. அச் சமூகத்தவருட் சிலரை இசுலாமியர் கொண்டு போகின்றனர், சிலரைக் கிறிஸ்தவர் கொண்டு போகின்றனர், சிலரைச் சமணர், பெளத்தர் தட்டிக்கொண்டு போகின்றனர், சிலர் கறுப்புச் சட்டைக்குட் புகுத்தப்படுகின்றனர், சிலரை இந்துக்கள், கலவை சமயிகள் அடித்துக் கொண்டு போகின்றனர், சிலரைச் சில தனித்தமிழ் வெறியர் தமிழ்ச் சமயம் அல்லது தமிழர் சமயம் என்றொரு புதுமுக சினிமா நக்ஷத்திரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டு போகின்றனர். ஆகச் சைவ சமூகம் தன் சமயம் இன்னதென்றே தெரியாமல் தட்டுண்டு தடுமாறிச் சைவ சமயத்தின் விரோதிகளின் மடியில் வீழ்ந்து உறங்கிவிடுகின்றனர். சைவ மக்களுக்கு அது பெருமையா? இலாபமா? வாழ்வா?</div><div><br></div><div>சைவ சமயப் பெருமக்களே, நாடு சுதந்திரம் பெற்றது. நீங்களும் இந்நாட்டு மக்களே. உங்களுக்கென உயிர்நிலை இங்கொன்றுமில்லையா? உங்களுக்கெனச் சமயம், பிரமாண சாத்திரம், ஆசாரியர், சின்னங்கள், ஆதீனங்கள், கோயில்கள், வழிபடுமுறை, ஆசார அனுட்டான வகைகள் எல்லாப் பாக்கியமுண்டு. அவற்றை நீங்களே அறிந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாத நிலையில் இப்போது பிறர் கைவசப்பட்டுத் திருக்குறள் படுவது பாருங்கள். அதனாசிரியர் அசைவராக விளம்பரஞ் செய்யப்படுவது பாருங்கள். உங்களுக்காக வேறு யாருங் கைகொடுக்கமாட்டார். மற்றைச் சமயத்தார் உங்களிடம் வருவார், திருக்குறளைக் காட்டுவார், சமய சமரசம் பேசுவார். பணம் முதலிய சகாயங்களை உங்களிடமிருந்து பெற்றுப்போவார். அங்குப் போய்த் தம் சமயங்களின், கொள்கைகளின் வளர்ச்சிக்கே அவற்றைப் பயன்படுத்துவார். உங்களில் இரக்கமும் செல்வமுடையார் பலரிருப்பது தெரிந்ததே, யார் வந்தாலும் அவருக்கு நீங்கள் உதவி செய்யலாம். அதைத் தடுப்பாரிலர். ஆனால் அவரது சமயப் பிரசாரத்துக்கு மாத்திரம் நீங்கள் உதவுவது சரியன்று, சரியன்று. உதவினால் அது உங்கள் கண்ணான சைவ சமயத்துக்குத் துரோகஞ் செய்வதாய் முடியும். 'பழைய வைதிக சைவம் பரக்கவே' என்றருளினார் உமாபதி சிவனார். அதைக் கருத்திற் கொண்டு ஒருமுகப்படுங்கள், ஒதுங்காதீர்கள், பதுங்காதீர்கள், பராக்காக இராதீர்கள். மறைந்து கிடக்கும் ஆண்மையையும், அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சைவ சபை, சைவ சித்தாந்த சபை, சித்தாந்த சைவ சபையெனச் சமயப் பெயர்களாலேயே சபைகள் வைத்துச் சேவை புரியுங்கள். சிவ பரத்துவம், சைவாசிரியன்மார் பெருமை, சைவ சாத்திரங்களின் நுண்பொருள், சைவ ஆசார அனுட்டானங்களின் இன்றியமையாமை தமிழ் வடமொழிப் பயிற்சி, சிவங் கலந்த இன்னிசை, இலெளகிகத்தில் உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் முதலிய அனைத்தும் எடுத்துப் பேசப்படுவதற்கு அங்குத்தான் இடமுண்டு. சமய வரம்பு அழிந்தால் சமயமே அழிந்துபோம். அவ்வழிவு உங்கள் சமயதிற்றான் தலை காட்டுகிறது. அதற்கு அன்னிய சமயத்தா ரளவுக்கு உங்களிலும் பலர் காரணமாயிருந்து வருகிறார்கள். அவரிடமிருந்து சைவ சமூகம் விடுபட வேண்டும். அதனைச் செய்தற்கு நீங்கள் துணிந்து முன்னுக்கு வருவீர்களாக. ஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீபரசிவனார் உங்களுக்குத் துணை புரிவாரென்பது சத்தியம்.</div><div><br></div><div>பெருமழுவர் தொண்டல்லாற் பிறிதிசையோம்</div><div><br></div><div>பழைய வைதிக சைவம் பரக்கவே</div><div><br></div><div>மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்</div><div><br></div><div>'திருக்குறள் பொது நூலா?' என்னும் இந்நூல் முற்றிற்று</div><div><br><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-66138531440722331562023-12-23T16:02:00.000+05:302023-12-23T16:26:50.858+05:30காதலுக்கு மரியாதை<div>என்னைத் தாலாட்ட வருவாளோ பாடலில்.... </div><div><br /></div><div>விஜய் நிற்கும் மரத்தில் சிலந்தி வலை பின்னி உள்ளது.... </div><div><br /></div><div>லவ் & லவ் ஒன்லி புத்தகம்... </div><div><br /></div><div>அதற்கு காந்தக் கண் அழகி ஷாலினி முத்தம்.... </div><div><br /></div><div>வருடும்... பூ... போன்ற... மென்மையான பாடல்.... இளையராஜா... தெய்வம்..... </div><div><br /></div><div>வருடும்... பூ... போன்ற.... காதல்.... மென்மையான காதல்..... கிறிஸ்தவ டைரக்டர் பாசில் ன் நேர்த்தியான மரியாதையான மனித உரிமைகள் நிறைய உள்ள படங்கள்.... </div><div><br /></div><div>பூ விழி வாசலிலே.... </div><div>என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு... </div><div>வருஷம் 16...</div><div>காதலுக்கு மரியாதை... </div><div><br /></div><div>கிறிஸ்தவ மதம்... </div><div><br /></div><div>கிறிஸ்தவ டைரக்டர்... </div><div><br /></div><div>பாசில் க்கு இணையாக... </div><div><br /></div><div>மென்மையான காதல்... </div><div><br /></div><div>மென்மையான மனித உரிமைகள்.... </div><div><br /></div><div>பேசிய படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு.... </div><div><br /></div><div>பைபிள்... </div><div>கிறிஸ்தவ மதம்... </div><div><br /></div><div>இன்னொரு கருத்து... </div><div><br /></div><div>இன்னொரு வகையான வாழ்க்கை முறை... </div><div><br /></div><div>இவை எல்லாம்... </div><div><br /></div><div>எவ்வளவு முக்கியம்... </div><div><br /></div><div>எவ்வளவு புரிதல்.... </div><div><br /></div><div>எவ்வளவு உணர்வு மாற்றங்கள் இந்தியாவுக்கு... </div><div><br /></div><div>இந்தியர்களுக்கு... </div><div><br /></div><div>கிறிஸ்தவ மதம் தர முடியும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டால் போதும்.... </div><div><br /></div><div>மனித நேயம் வாழும்... </div><div><br /></div><div>மனிதாபிமானம் சிறக்கும்.... </div><div><br /></div><div>மனித உரிமைகள் வெற்றி பெறும்.... </div><div><br /></div><div>டைரக்டர் பாசில் ஐ நான் ஒரு மென்மையான கிறிஸ்தவ மதம் தந்த... </div><div><br /></div><div>மென்மையான பைபிள் தந்த.... </div><div><br /></div><div>மென்மையான கிறிஸ்தவ சர்ச் தந்த.... </div><div><br /></div><div>மனிதநேய காதல் படம் ஆகவே பார்க்கிறேன்.... </div><div><br /></div><div>வாழ்க உண்மையான காதல்.... </div><div><br /></div><div>வளர்க உண்மை காதல்...</div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTS4d3CnhzWAdvVJpD9dG0YgQX7WCs21AAiNg-zle5hz_tUSXbxN6RmfvAJQOjUyonVIThBdrImFmWA3tYHEVjh5ElnIO6BA6Uhha1t4YwtAp5i2TUgRfq8v7-ZuVOrSy6mCqpOifUR-GqQEmTmtyfh9ptB-08dTHRo2JNttfYMuowrzC4vvfU0mjFxxow/s1274/Screenshot_2023-12-23-15-31-53-173_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="538" data-original-width="1274" height="135" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTS4d3CnhzWAdvVJpD9dG0YgQX7WCs21AAiNg-zle5hz_tUSXbxN6RmfvAJQOjUyonVIThBdrImFmWA3tYHEVjh5ElnIO6BA6Uhha1t4YwtAp5i2TUgRfq8v7-ZuVOrSy6mCqpOifUR-GqQEmTmtyfh9ptB-08dTHRo2JNttfYMuowrzC4vvfU0mjFxxow/s320/Screenshot_2023-12-23-15-31-53-173_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Q1uThT9diHkgo0E9E45Vr_uU56AuHvYdILjjIInGA_aBeUUbIh37kWmiqaeas3DgpEqsx-F7oxF6H1ZKkSU3TWF2w70PShbvmzQu1K47WKz_V2jWPY-7n8jPNn837GJLMucXfiKI2Mr79-ddPWOI9YSYhhqB0FyckmAr6FJyeAGAYgybvLWkCOHLeQYK/s1279/Screenshot_2023-12-23-15-32-10-422_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="1279" height="136" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2Q1uThT9diHkgo0E9E45Vr_uU56AuHvYdILjjIInGA_aBeUUbIh37kWmiqaeas3DgpEqsx-F7oxF6H1ZKkSU3TWF2w70PShbvmzQu1K47WKz_V2jWPY-7n8jPNn837GJLMucXfiKI2Mr79-ddPWOI9YSYhhqB0FyckmAr6FJyeAGAYgybvLWkCOHLeQYK/s320/Screenshot_2023-12-23-15-32-10-422_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5P77eEWkq7WjCnW_rKjw9DcmGWmRvlfWUZk5apz2o-faggXWklzk9hqJVsZaipF6UWUDnVFPkJUHaYouKJAXSQfOVknvkgFvG08gthszw_RyZehoLgZ97lznh5bUAUVLrA9N6J8dDxEvBx46RD6N64FHBOHbJNDbm8g9XiSuXcQ8B5M26mUgCsBRcliqb/s1286/Screenshot_2023-12-23-15-32-48-694_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="553" data-original-width="1286" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5P77eEWkq7WjCnW_rKjw9DcmGWmRvlfWUZk5apz2o-faggXWklzk9hqJVsZaipF6UWUDnVFPkJUHaYouKJAXSQfOVknvkgFvG08gthszw_RyZehoLgZ97lznh5bUAUVLrA9N6J8dDxEvBx46RD6N64FHBOHbJNDbm8g9XiSuXcQ8B5M26mUgCsBRcliqb/s320/Screenshot_2023-12-23-15-32-48-694_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9zOIqg6WKa-z85PPZh5-WXFiQF7Ig99PQq7-CIuvMywwUhq6VvEvBpgU3fMwBM9TN1vq9X7K4_hPZ5LYiBkhDtrwFfb-P-c_yBUGSdw1oI16hQVj7LdigTXkhgCRKe0VHNG4pbP2Giy-Z9KV1j4Ao4N73yp-_xvHuvaQLK8214Labcm1QgiHERop-GrZp/s1285/Screenshot_2023-12-23-15-32-59-863_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="554" data-original-width="1285" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9zOIqg6WKa-z85PPZh5-WXFiQF7Ig99PQq7-CIuvMywwUhq6VvEvBpgU3fMwBM9TN1vq9X7K4_hPZ5LYiBkhDtrwFfb-P-c_yBUGSdw1oI16hQVj7LdigTXkhgCRKe0VHNG4pbP2Giy-Z9KV1j4Ao4N73yp-_xvHuvaQLK8214Labcm1QgiHERop-GrZp/s320/Screenshot_2023-12-23-15-32-59-863_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioRnLx1SvIMx3PhCUdga_rDi_1jeDT5HvqIBOzJTlMR-SZj9C5f9K21N784pRBJvFBl_NVGwJOEDZi5T8Har0QBANm6vJ90qk2VwK07LYp0eg-TRPW41qDJdMm1pzrEDJvv5cmenZfP0DHoSDSQnFParBmaOENZy0vfH8pPXzEiR9OqCH5fpw97cGkNgvS/s1251/Screenshot_2023-12-23-15-33-04-999_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="559" data-original-width="1251" height="143" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioRnLx1SvIMx3PhCUdga_rDi_1jeDT5HvqIBOzJTlMR-SZj9C5f9K21N784pRBJvFBl_NVGwJOEDZi5T8Har0QBANm6vJ90qk2VwK07LYp0eg-TRPW41qDJdMm1pzrEDJvv5cmenZfP0DHoSDSQnFParBmaOENZy0vfH8pPXzEiR9OqCH5fpw97cGkNgvS/s320/Screenshot_2023-12-23-15-33-04-999_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipojL26HNcl56sUDqi8ujyat3X3Wi9qDUW6jS6WcuJWON6oov_nTmmP6T0qU0EPw__XwVfzRjFCM8qu1X5o_MdmR2qjItNgKAV2b-SUzSioHKIoTAYFFs7NLDp901Px2eDaUIKneSuTlrfyOKN9dYdgtPOU65bD2d9zlCNR3G1YXrqaA_lh-0ZDDdLFRBx/s1301/Screenshot_2023-12-23-15-33-29-683_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="547" data-original-width="1301" height="135" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipojL26HNcl56sUDqi8ujyat3X3Wi9qDUW6jS6WcuJWON6oov_nTmmP6T0qU0EPw__XwVfzRjFCM8qu1X5o_MdmR2qjItNgKAV2b-SUzSioHKIoTAYFFs7NLDp901Px2eDaUIKneSuTlrfyOKN9dYdgtPOU65bD2d9zlCNR3G1YXrqaA_lh-0ZDDdLFRBx/s320/Screenshot_2023-12-23-15-33-29-683_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipNNbf1iQ2Xk4_v8WecAz55e9V0im-fbj68lTBkU9940hfRKHpOR3z-jKacDRo4ba_noyor_aS_8kHcRvV7fDP_egc-3IOwXV_5uNHov_UKpISeJyW_lsDfmTvdxIT76tAaknbqA7Xuv0811I-wSQWz_IKR17NiGDMUR17cGB3rjmpCX1rB7lsuGp7cDV4/s1301/Screenshot_2023-12-23-15-34-29-985_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="539" data-original-width="1301" height="133" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipNNbf1iQ2Xk4_v8WecAz55e9V0im-fbj68lTBkU9940hfRKHpOR3z-jKacDRo4ba_noyor_aS_8kHcRvV7fDP_egc-3IOwXV_5uNHov_UKpISeJyW_lsDfmTvdxIT76tAaknbqA7Xuv0811I-wSQWz_IKR17NiGDMUR17cGB3rjmpCX1rB7lsuGp7cDV4/s320/Screenshot_2023-12-23-15-34-29-985_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOCYnNDt5ojlz6Bm-MOn1nohJjKHv5tlFe0_QeflG8e3uuXmg0D8T2u3IxKQncG05ksxp39Ck0vjG0dWVLXHGhCWvPOSDO-qAQNtUKRRVe7pvDuoyERX7raI4kL-Raou1b2rbCZkxTbziSiqysMkkWZYfzDUu4i9HE1R4HYA0kpCQFeB1iwuNynTmtp_6T/s1267/Screenshot_2023-12-23-15-35-03-283_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="592" data-original-width="1267" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOCYnNDt5ojlz6Bm-MOn1nohJjKHv5tlFe0_QeflG8e3uuXmg0D8T2u3IxKQncG05ksxp39Ck0vjG0dWVLXHGhCWvPOSDO-qAQNtUKRRVe7pvDuoyERX7raI4kL-Raou1b2rbCZkxTbziSiqysMkkWZYfzDUu4i9HE1R4HYA0kpCQFeB1iwuNynTmtp_6T/s320/Screenshot_2023-12-23-15-35-03-283_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsv4mNpsUdYwL45KFSYHk8edbIvFonlN6H6bjIPBN7vAIT1izts_Lt38bNUX7otnI10jN6LXHR81hBOUNpZdKFkYrKDVX46aViFd_9eskrM_xcTK0dWo73OAVwKEPRlArB2a-xntfHjK6bhnCI-hcgiccd-UvXgbMzKVX_ZW8Of4Hw59Q2G8IWHa39My9S/s1228/Screenshot_2023-12-23-15-44-07-531_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="542" data-original-width="1228" height="141" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsv4mNpsUdYwL45KFSYHk8edbIvFonlN6H6bjIPBN7vAIT1izts_Lt38bNUX7otnI10jN6LXHR81hBOUNpZdKFkYrKDVX46aViFd_9eskrM_xcTK0dWo73OAVwKEPRlArB2a-xntfHjK6bhnCI-hcgiccd-UvXgbMzKVX_ZW8Of4Hw59Q2G8IWHa39My9S/s320/Screenshot_2023-12-23-15-44-07-531_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbSTn3Lx2eKYLrKmGnjTTWTSFirKinezZQsnYTmvyN_Jq5WjPvzUuca7YF4LEes1pL3maqmqQubxHznriBbfoC95zYx7m1BLi3yiQ5UhTp8Pm0CZzxP9XRBF2T-yKgBQBpyeVayN-iYaQgq0RNfpttCIDbL6udJHE2CyHaVfBacW0cTjLIpoFazq_hqZ-6/s1202/Screenshot_2023-12-23-15-44-10-383_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="547" data-original-width="1202" height="146" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbSTn3Lx2eKYLrKmGnjTTWTSFirKinezZQsnYTmvyN_Jq5WjPvzUuca7YF4LEes1pL3maqmqQubxHznriBbfoC95zYx7m1BLi3yiQ5UhTp8Pm0CZzxP9XRBF2T-yKgBQBpyeVayN-iYaQgq0RNfpttCIDbL6udJHE2CyHaVfBacW0cTjLIpoFazq_hqZ-6/s320/Screenshot_2023-12-23-15-44-10-383_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Kx3g1_gS7jZqRFyUWW3DQOKIEY6J-21ZDcoaHxGkWmZRgECS7PS0a-8TDPK_xr0Jrc42m7rlhaXbbmfzASbpjzsRIC0OZCodOtqA90lEJ4LoBKf6fQVbhs5HjKregddOVD546AyGPT79sYlw0SHfp3KRvnvWm6QjStZ4eZ-EbwMCbmrMr6KKAcgHgqK4/s1267/Screenshot_2023-12-23-15-44-20-545_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="546" data-original-width="1267" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Kx3g1_gS7jZqRFyUWW3DQOKIEY6J-21ZDcoaHxGkWmZRgECS7PS0a-8TDPK_xr0Jrc42m7rlhaXbbmfzASbpjzsRIC0OZCodOtqA90lEJ4LoBKf6fQVbhs5HjKregddOVD546AyGPT79sYlw0SHfp3KRvnvWm6QjStZ4eZ-EbwMCbmrMr6KKAcgHgqK4/s320/Screenshot_2023-12-23-15-44-20-545_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCpjxWoRHTq1a6pFKmoQOKajm-CEEI4Hc0EoXD-hW30uLM0aqCsSeXSZMgeyYxXu5aHB2Pnc1IUtiWIUBSdEFW4XMt8H957oT-W5UWHCaWySZh3Z1P2Nk0O-PaBJERWot7Pt9q5HCecstRyD2sry_slWuJ3O0FwYQluQGtk42L12wCxxg2bghusjudbcuO/s1261/Screenshot_2023-12-23-15-44-34-593_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="547" data-original-width="1261" height="139" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCpjxWoRHTq1a6pFKmoQOKajm-CEEI4Hc0EoXD-hW30uLM0aqCsSeXSZMgeyYxXu5aHB2Pnc1IUtiWIUBSdEFW4XMt8H957oT-W5UWHCaWySZh3Z1P2Nk0O-PaBJERWot7Pt9q5HCecstRyD2sry_slWuJ3O0FwYQluQGtk42L12wCxxg2bghusjudbcuO/s320/Screenshot_2023-12-23-15-44-34-593_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnIqw6maTyM-9Ceb8qOklShgh-LGVmQncyr2sqjUJZRTPw5bG2jMsxJ1h-ohytRg13x7PWojckAED5FO5bFbHpCD289c_qVmrxZegzWT_R4mh8TIrhQvzNCV_oqlS-nCqibwfZqXqs-OIl1GlAFxmD66W3tYOOeHPVJtdf1_sD-pYrP8zy8ToWKIghLCoK/s1285/Screenshot_2023-12-23-15-44-45-585_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="544" data-original-width="1285" height="135" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnIqw6maTyM-9Ceb8qOklShgh-LGVmQncyr2sqjUJZRTPw5bG2jMsxJ1h-ohytRg13x7PWojckAED5FO5bFbHpCD289c_qVmrxZegzWT_R4mh8TIrhQvzNCV_oqlS-nCqibwfZqXqs-OIl1GlAFxmD66W3tYOOeHPVJtdf1_sD-pYrP8zy8ToWKIghLCoK/s320/Screenshot_2023-12-23-15-44-45-585_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlylEewpjgAQTSzEpmSjz-SywmYD8RdhHp9Hz4_wMSxpb_Xva050SG91ku5lYBSRPFKyk0HT58KXAi0HMBpvRSUT10J4HEE63WOhhmdx_UD-6f8Ij9HUBeQM7UlLr629fKJVtjRXI00r_JR_e9Oie9ec_37BwRMOgKcuUovrlIHY-9FQdP2eQLPvjGhGbL/s1275/Screenshot_2023-12-23-15-45-13-140_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="1275" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlylEewpjgAQTSzEpmSjz-SywmYD8RdhHp9Hz4_wMSxpb_Xva050SG91ku5lYBSRPFKyk0HT58KXAi0HMBpvRSUT10J4HEE63WOhhmdx_UD-6f8Ij9HUBeQM7UlLr629fKJVtjRXI00r_JR_e9Oie9ec_37BwRMOgKcuUovrlIHY-9FQdP2eQLPvjGhGbL/s320/Screenshot_2023-12-23-15-45-13-140_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9i9q0YYxzLXk5D-zrsWn8sGfOI435U8bM2k8hWfXvLO33bmaaPgILGKc6ttwIQJa3DAr5ee5lXoNHHkt2ScsQ6wvjD6IFc-B18hLaZGhn9OFKwv9dwX_DdP9pcA5plYw6UElX251Vql0Ql6zJBE-nOCc2Hf3_qLFSD5JklJ75rbk6Y7-_oujDx69hA-7/s1246/Screenshot_2023-12-23-15-45-43-415_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="551" data-original-width="1246" height="142" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9i9q0YYxzLXk5D-zrsWn8sGfOI435U8bM2k8hWfXvLO33bmaaPgILGKc6ttwIQJa3DAr5ee5lXoNHHkt2ScsQ6wvjD6IFc-B18hLaZGhn9OFKwv9dwX_DdP9pcA5plYw6UElX251Vql0Ql6zJBE-nOCc2Hf3_qLFSD5JklJ75rbk6Y7-_oujDx69hA-7/s320/Screenshot_2023-12-23-15-45-43-415_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL3MJbz2-K6dWepNId-7D1jsUYrrAbQFJiB7wrdqflhk60TTGBV2M8_99TOiT_sriHKy2d1HFi_mTzVUbG-17FMnMqQbUA7JvxW4faTxf9vM30DiOOFZ75FIAH1xNLyFWL3Jf8mUudSHH7RSxCX4vc5kJlpSHrew7EqBsrWP7bDlIkc6MWLvNvGoeFuOr8/s1236/Screenshot_2023-12-23-15-28-50-587_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="549" data-original-width="1236" height="142" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL3MJbz2-K6dWepNId-7D1jsUYrrAbQFJiB7wrdqflhk60TTGBV2M8_99TOiT_sriHKy2d1HFi_mTzVUbG-17FMnMqQbUA7JvxW4faTxf9vM30DiOOFZ75FIAH1xNLyFWL3Jf8mUudSHH7RSxCX4vc5kJlpSHrew7EqBsrWP7bDlIkc6MWLvNvGoeFuOr8/s320/Screenshot_2023-12-23-15-28-50-587_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuwTxfaGvXSMbZMtKExEOVy8uOufpei1rKuoejMYCy4Fv_CPlymoe2d-ukTRJQfNdcIJ08sB3HJbWrU_qHE_C32x7lqobOkWCyqoKa5hlDGlWi_0mpLf3xo-8bY54T49NKHIljQol4B8mG8Z6ei0LD2OxPXLtiyEEgdK4y7PXKniw6tonKslGbjSLrb-OL/s1289/Screenshot_2023-12-23-15-29-42-088_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="546" data-original-width="1289" height="136" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuwTxfaGvXSMbZMtKExEOVy8uOufpei1rKuoejMYCy4Fv_CPlymoe2d-ukTRJQfNdcIJ08sB3HJbWrU_qHE_C32x7lqobOkWCyqoKa5hlDGlWi_0mpLf3xo-8bY54T49NKHIljQol4B8mG8Z6ei0LD2OxPXLtiyEEgdK4y7PXKniw6tonKslGbjSLrb-OL/s320/Screenshot_2023-12-23-15-29-42-088_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD-1YPdhGnsDBMgRTpMs7kX9qeCi3pdj1K9kfhnqiN4xuc5V5FERSMyUSrgJ5COVoI_oY4amlccCRkOmmAfZXRb5RPSTkIL-LdZuoa7KFxlqNRoQRJPkP16D4ckjsx5xOoVJIxa02nmASLj857M85nb5wR_MYNxEcQ99FaDTdHLmIvL8h-ZelNu2-FPmZ8/s1309/Screenshot_2023-12-23-15-30-26-287_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="1309" height="134" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD-1YPdhGnsDBMgRTpMs7kX9qeCi3pdj1K9kfhnqiN4xuc5V5FERSMyUSrgJ5COVoI_oY4amlccCRkOmmAfZXRb5RPSTkIL-LdZuoa7KFxlqNRoQRJPkP16D4ckjsx5xOoVJIxa02nmASLj857M85nb5wR_MYNxEcQ99FaDTdHLmIvL8h-ZelNu2-FPmZ8/s320/Screenshot_2023-12-23-15-30-26-287_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpTr7BCakTNk5QLOqk3DOAOQfYBR95v16jUnEB7Cs9N_-W1V6tDm4XHEz2cmJSKkSIy_3umQHBESBm_Fepq6CaqcY8JmQuRLd8Yt6C1qK8cEqaH4vRIa6x34l-BkeN8EJXt3q5FJtDHrdea9fuVsb9LuYD9WMXJbSN7HiiylYPv3xDTWsqp2kkkZqNM42w/s1262/Screenshot_2023-12-23-15-30-47-813_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="544" data-original-width="1262" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpTr7BCakTNk5QLOqk3DOAOQfYBR95v16jUnEB7Cs9N_-W1V6tDm4XHEz2cmJSKkSIy_3umQHBESBm_Fepq6CaqcY8JmQuRLd8Yt6C1qK8cEqaH4vRIa6x34l-BkeN8EJXt3q5FJtDHrdea9fuVsb9LuYD9WMXJbSN7HiiylYPv3xDTWsqp2kkkZqNM42w/s320/Screenshot_2023-12-23-15-30-47-813_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzA6ez81iGRHLF6BUrFdvV2ubIW-8rBzGIh52lYb04nJhFyntwVFb7yOOzBtURTOuZkf-G-OxAe7ZGE_oG01mRZQyXnLoUTBHilYsJxrM8IA2pZsih-K7ozcuZjZV5amRWs3t38RwGEKYx1E7JAAU0PsetfJOS8WQMdbobVYfFNog5TsJDaYI4kgNlip3Z/s1275/Screenshot_2023-12-23-15-31-36-850_com.google.android.youtube.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="554" data-original-width="1275" height="139" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzA6ez81iGRHLF6BUrFdvV2ubIW-8rBzGIh52lYb04nJhFyntwVFb7yOOzBtURTOuZkf-G-OxAe7ZGE_oG01mRZQyXnLoUTBHilYsJxrM8IA2pZsih-K7ozcuZjZV5amRWs3t38RwGEKYx1E7JAAU0PsetfJOS8WQMdbobVYfFNog5TsJDaYI4kgNlip3Z/s320/Screenshot_2023-12-23-15-31-36-850_com.google.android.youtube.jpg" width="320" /></a></div><div><br /></div><br /><div id="ymail_android_signature"><a href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_" id="ymail_android_signature_link">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-91238345207956127712023-09-26T14:50:00.001+05:302023-09-26T14:50:12.869+05:30வாஸ்து சாஸ்திரம் படி 12 தமிழ் மாதங்களிலும் நமது வீட்டின் கிழக்கு தலை வாசல் மெயின் டோர் முன்பு நடு சென்டர் ஆக செங்குத்து ஆக காட்சி அளிக்கும் சூரியன். <p class="mobile-photo"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgdYUnSz91rri3Mih3cfklE_c5vv_REsYAUAxp_5TvhBDqFmqiD-rMG4UL14Z_Bp07LR-7VSewgy-Z4edJXbvR0SZQbev675yeigV9SV4YTwfIk1J4EYWzNKLeOOcW8Rj_SfTNbXTL4_Cm7qkNyHl7A3PIZjH5-Fgu31_nEZyskRswfll3kaQIZPUUFWtS-"><img src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgdYUnSz91rri3Mih3cfklE_c5vv_REsYAUAxp_5TvhBDqFmqiD-rMG4UL14Z_Bp07LR-7VSewgy-Z4edJXbvR0SZQbev675yeigV9SV4YTwfIk1J4EYWzNKLeOOcW8Rj_SfTNbXTL4_Cm7qkNyHl7A3PIZjH5-Fgu31_nEZyskRswfll3kaQIZPUUFWtS-=s320" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_7283062027089902610" /></a></p><div style="overflow-wrap: break-word;">K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">Research</div><div style="overflow-wrap: break-word;">Trade Mark</div><div style="overflow-wrap: break-word;">Copy Rights</div><div style="overflow-wrap: break-word;">All Rights Reserved.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">மேற்கண்ட சூரியன் உதயம் போட்டோக்கள் 12 மாதங்களை கவனித்துப் பாருங்கள். சரியாக 9 மாதங்களுக்கு பிறகு சூரியன் U வளைவு ஆக உத்தராயணம் தட்சிணாயனம் என்ற இரு அயனங்கள். பயணங்கள். திருப்பி தோன்றிய புள்ளியான சித்திரை 1 க்கே செல்லும் அதிசயமான இயற்கை நிகழ்வை காணுங்கள். இதை ஆதாரமாக வைத்துத் தான் 60 தமிழ் சம்ஸ்கிருதம் வருடங்கள் தமிழ் ஆரியர் பஞ்சாங்கம் சொல்லி பயன்படுத்தி வருகிறது. அதாவது History Repeats. அதாவது நடந்த சம்பவங்கள் தான் திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் நடக்கும். குழந்தை பிறப்பு பெரியவன் ஆதல் கல்யாணம் உடல் உறவு குழந்தை பேரன் பேத்தி தாத்தா பாட்டி சாவு திரும்ப குழந்தை கல்யாணம் என்று ஆயிரம் காலத்து பயிர் ஆக மனித வாழ்வு. மிருகங்கள் வாழ்வும் திரும்ப திரும்ப நடைபெறும் சம்பவங்கள் தான். சாவா மூவா பேராடு என்று சொல்லி நிறைய ஆண் ஆடுகள் பெண் ஆடுகள் ராஜராஜன் சோழன் காலத்தில் கோவிலுக்கு நேர்ந்து நேர்த்திக்கடன் ஆக தானம் அளிக்கப்பட்டன. இந்த சாவா மூவா பேராடு என்றால் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்ட ஆடுகள் உடல் உறவு செய்து குட்டி போடும். அந்த கோவில்கள் உள்ளவரை ஆட்டை மாட்டை வைத்து ஆதீனங்கள் கோவில்கள் அதன் பால் விற்று இறைச்சி விற்று பணம் ஈட்டிக் கொள்ளலாம். அது மட்டுமல்ல பூசாரி குடும்பம் வயிறு நிறையும். சேமித்து பணம் சேர்த்து தங்கம் வெள்ளி வாங்கி பூசாரி மகன் மகள் கல்யாணம் நடக்கும்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆகவே U வடிவில் அயனம் பயணம் செல்லும் சூரியன் சந்திரன் அடிப்படையாக வைத்துத்தான் தமிழ் சமஸ்கிருதம் ஆரியர் பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. இதனால் இது பாம்பு பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. பாம்பு போல வானத்தில் சூரியன் சந்திரன் பயணம் அயனம் செய்கிறார்கள்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">சோலார் அனெலெம்மா என்று அழைக்கப்படும் இந்த ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட சூரியன் போட்டோக்கள் சொல்வது காட்டுவது நமக்கு படிப்பினை சொல்லித்தருவது என்ன என்றால் சூரியன் சந்திரன் வானத்தில் பாம்பு போல தான் பயணம் செய்கிறார்கள். இதனால் வந்த பாம்பு பஞ்சாங்கம் 60 தமிழ் சமஸ்கிருதம் வருடங்கள் சொல்வது என்ன என்றால் History Repeats. வரலாறு தன்னைத் தானே திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரே பழைய விஷயங்கள் தான் செய்யும். நடக்கும். போர். பசி. பட்டினி. பஞ்சம். நிறைய உணவு. ஷேர் மார்க்கெட் ஏற்றம் இறக்கம். பிறப்பு இறப்பு என்று உலகின் அனைத்து விஷயங்களும் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நடப்பவை தான்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இதைத்தான் பகவத்கீதை ல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது</div><div style="overflow-wrap: break-word;">எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது</div><div style="overflow-wrap: break-word;">எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.</div><div style="overflow-wrap: break-word;">உன்னுடையதை எதை இழந்தாய்,</div><div style="overflow-wrap: break-word;">எதற்காக நீ அழுகிறாய்?</div><div style="overflow-wrap: break-word;">எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?</div><div style="overflow-wrap: break-word;">எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?</div><div style="overflow-wrap: break-word;">எதை நீ எடுத்துக் கொண்டாயோ,</div><div style="overflow-wrap: break-word;">அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.</div><div style="overflow-wrap: break-word;">எதை கொடுத்தாயோ,</div><div style="overflow-wrap: break-word;">அது இங்கேயே கொடுக்கப்பட்டது.</div><div style="overflow-wrap: break-word;">எது இன்று உன்னுடையதோ</div><div style="overflow-wrap: break-word;">அது நாளை மற்றோருவருடையதாகிறது</div><div style="overflow-wrap: break-word;">மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.</div><div style="overflow-wrap: break-word;">இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆகவே மேற்கண்ட யூ டர்ன் மாதிரி வளையும் 12 மாதங்கள் சூரியன் போட்டோ சொல்வது கீதா சாரம். பகவத்கீதை. கடவுள் வாக்கு தான் படம் போல 8 வடிவில் யூ வடிவில் வாழ்வில் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நடக்கும் சம்பவங்கள் பற்றி அருமையான விளக்கமாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதை ல் கீதா சாரம் ஆக சொல்லி அசத்தி உள்ளார்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">கிருஷ்ணார்ப்பணம்.</div><div style="overflow-wrap: break-word;">ஓம் நமோ நாராயணாய.</div><div style="overflow-wrap: break-word;">ஓம் சிவாய நம.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">K Pasupathi Research Work Done on date 26.09.2023 regarding Appearance of Sun Sooryan at the Center of East Facing House Main Door on all 12 months. Comparison between all 12 Tamil Sanskrit Months of Panchangam with the 9 divisions of the Vasthu Diagram for viewing Sun from the Main Entrance Gate Main Door of East Facing House. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">Research</div><div style="overflow-wrap: break-word;">Trade Mark</div><div style="overflow-wrap: break-word;">Copy Rights</div><div style="overflow-wrap: break-word;">All Rights Reserved.</div><div style="overflow-wrap: break-word;"><br></div><div style="overflow-wrap: break-word;"><div class="yahoo-compose-assist-image-card ymail-android-inline-img-container ymail-card" contenteditable="false"><img id="ymail_attachmentIdb0d8fb49-ce96-4d2f-aef6-1fa6ac94478f" class="inline-image-global inlined-image-cid-b0d8fb49-ce96-4d2f-aef6-1fa6ac94478f" src="cid:b0d8fb49-ce96-4d2f-aef6-1fa6ac94478f" style="width:100%;max-width:800px;"><br></div><br><br></div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-58454995260542983852023-09-04T14:53:00.001+05:302023-09-04T14:53:13.519+05:30ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் 1. Sree Vidhya சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் சிவன் உள்ளான் .<div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">அதாவது சிவன் ஆரியன் பாதி தமிழன் பாதி ஆனவன். இந்த ஆரியன் என்ற டிஎன்ஏ குரோமோசோம் மூலக்கூறுகள் தமிழன் ஐரோப்பியர் யவனர் கிரேக்கர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் மக்கள் உடன் கலந்ததால் ஆனது. ஆகவே சிவன் ஈசன் என்றால் அவர் பாதி ஆரியன் பாதி தமிழன் ஆவார். பிரித்து பார்த்து சண்டை போட வேண்டாம்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">நான் அறிந்த வரையில் = </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">சன் = தீபம்</div><div style="overflow-wrap: break-word;">தன் = தூபம். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">தீபங்கள் தூபங்கள் </div><div style="overflow-wrap: break-word;">என்ன விளக்கு ஒளி மற்றும்</div><div style="overflow-wrap: break-word;">நறுமணம் தரும் ஊதுவத்தி </div><div style="overflow-wrap: break-word;">சாம்பிராணி போன்ற இரண்டு </div><div style="overflow-wrap: break-word;">பொருள்களை பயன்படுத்தி கடவுளை வழிபடும் மதம் தான் சன்தன் இனம் = சனாதனம். இந்த சொல்லாடல் சன்</div><div style="overflow-wrap: break-word;">தன் என்ற சொல் சொற்கள் எகிப்து வீரக்கல் எழுத்துக்களில் கிமு 3000 முதல் கிமு 1500 வரை காணப்படுகின்றன. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">சிவன் தனது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகமங்கள் இவற்றை கற்றுக் கொடுத்த நான்கு வெள்ளைத் தோல் பிராம்மணர் குழந்தைகள் </div><div style="overflow-wrap: break-word;">சனகர்</div><div style="overflow-wrap: break-word;">சனாதனர்</div><div style="overflow-wrap: break-word;">சதானந்தர்</div><div style="overflow-wrap: break-word;">சனத்குமாரர். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இந்த நான்கு வெள்ளைத் தோல் பிராம்மணர் குழந்தைகள் தமிழர்கள் அல்ல. திராவிடர்கள் அல்ல. தென் இந்தியர் அல்ல. இவர்கள் நான்கு குழந்தைகள் பிராம்மணர் பெர்சியன் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் ஆரியர் வம்சம் ஆகும். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இவர்களுடன் கலந்த தமிழர்கள் தென் இந்தியர்கள் திராவிடர்கள் கலவையாக உருவாக்கினர் இந்து மதம் ஹிந்து மதம் ஹிந்துஸ்தான். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆகவே சனாதனம் என்பதில் ஆரியர் மதம் தான் அதிகம் உள்ளதே தவிர திராவிடர்கள் எண்ணங்கள் கருத்துக்கள் கோட்பாடுகள் அதிகம் இல்லை.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">2. Sree Vidhya சனகர் சனாதனர் சதானந்தர் சனத்குமாரர் தமிழர்களா? பதில் சொல். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">தமிழன் கண்டாய். </div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் கண்டாய். </div><div style="overflow-wrap: break-word;">என்று ஆறாம் திருமுறை தேவாரம் பதிகம் ல் திருநாவுக்கரசர் என்ற அப்பர் மற்றும் வேறு இடங்களில் மனோன்மணியம் சுந்தரனாரும் எழுதி உள்ளார். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">தமிழன் வேறு. </div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் வேறு. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் என்பவன் தமிழன் + ஐரோப்பியர் பார்சி பாரசீகம் பெர்சியன் காகேசியன் ருஷ்யன் கலப்பு இனம்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இந்த கலப்பு இனம் ஆரியர்கள் தான் ஜாதி முறைப்படி எகிப்து ஆண்டவர்கள். அங்கு பிரமிடுகள் கட்டியவர்கள். பைபிளில் வரும் பரோ ராஜாக்களும் இந்த கருப்பு தமிழர் + கிரேக்கர் யவனர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் கலப்பு இனம் தான்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இந்த கலப்பு இனம் சிவன்</div><div style="overflow-wrap: break-word;">பார்வதி நந்தி போன்றோர் தான் இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் சைவ சித்தாந்தம் பரவ காரணம் ஆனவர்கள். இவர்களுக்கு மிகுந்த தலைவலியாக தொந்தரவாக இருந்தவர்கள் அதே ஆரியர் இனத்தின் சகோதரர்கள் புத்தம் சமணம் மதம் பின்பற்றியவர்கள்.<br style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;">3. Sree Vidhya மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;"> முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;">ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;"> இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;"> அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;">வாரி மதகளிறே போல்வான் கண்டாய்</div><div style="overflow-wrap: break-word;"> மறைக்காட் டுறையும் மணாளன் தானே</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆறாம் திருமுறை. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">023 திருமறைக்காடு.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">3. Sree Vidhya சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் , ஆரியனாய்த் தமிழனாய் , அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய் , வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் சிவன் உள்ளான் .</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">அதாவது சிவன் ஆரியன் பாதி தமிழன் பாதி ஆனவன். இந்த ஆரியன் என்ற டிஎன்ஏ குரோமோசோம் மூலக்கூறுகள் தமிழன் ஐரோப்பியர் யவனர் கிரேக்கர் பார்சி பாரசீகம் காகேசியன் ருஷ்யன் பெர்சியன் மக்கள் உடன் கலந்ததால் ஆனது. ஆகவே சிவன் ஈசன் என்றால் அவர் பாதி ஆரியன் பாதி தமிழன் ஆவார். பிரித்து பார்த்து சண்டை போட வேண்டாம்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன் . தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன் . சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால் , இவைகளையே ஒதியருளினார் ; ` சத்தப் பிரபஞ்சம் ` எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">4. Sree Vidhya ஆரியன் வேறு தான். </div><div style="overflow-wrap: break-word;">தமிழன் வேறு தான். </div><div style="overflow-wrap: break-word;">தமிழ் வேறு. </div><div style="overflow-wrap: break-word;">சமஸ்கிருதம் வேறு. </div><div style="overflow-wrap: break-word;">ஆனால் இரண்டும் இந்தியாவின் இரு கண்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">சமஸ்கிருதம் கலப்பு இன்றி தூய தமிழ் என்று பிரித்து பார்த்து எழுத பேச முற்பட்டார்கள். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆனால் தமிழன் + ஐரோப்பியர் = ஆரியர் என்பதால் சமஸ்கிருதம் ஏராளமான தமிழ் சொற்களை கொண்டு இருப்பதால் அது முடியாமல் இயலாமல் போய் விட்டது. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஓரளவுக்கு சமஸ்கிருதம் வட மொழி கலப்பின்றி எழுத பேச முயற்சி செய்யலாமே தவிர முழுவதும் தூய தமிழ் என்று ஒன்று இல்லை. இயலாது. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">தமிழன் உலகம் ஆள நினைத்த எம்பயர்டாம் வல்லரசு எண்ணத்தால் உருவான மொழி சமஸ்கிருதம். வட மொழி. இது அவேஸ்தன் மொழி. பார்சி. பாரசீகம் மொழி தொடர்பு அதிகம் உடையது.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">கிமு 1500 காலத்தில் எகிப்து (தாமரை காமத் ஏடு கோவில் கருநாகம் கோவில் தண்ணி தோணி கழுகு கொம்பன் கோவில் போன்ற நாடுகள் சேர்ந்த தமிழர் கூட்டணி).....</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஊர் ஊருக் சிப்பார் எல்கி ஏலம் ஏரிடு சுல்கி மாரி அக்காடு போன்ற சுமேரியா மெசபடோமியா நாடுகள் ஆண்ட தமிழர்கள்..... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">பாக்தாத் பேட்டரி.... </div><div style="overflow-wrap: break-word;">அகத்தியர்.... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இவர்கள் அனைவரும் தான் ஆரியர்கள் ஆக ஆரியர் ஆக ஆரியன் ஆக தங்களுடைய தாய் நாடு இந்தியா தமிழகம் க்கு திரும்பி வருகிறார்கள்.... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">கிமு 5000 காலம் ராமாயணம் நமக்கு எல்லாம் தெரியும். ராமர் பாலம் என்ற தமிழன் அரசன் நளன் கட்டிய நளன் பாலம் கார்பன் டேட்டிங் முறைப்படி கிமு 5000 க்கு முற்பட்டது. ஆகவே ராமாயணம் காலத்தில் கூட ஆரியன் ஆரியர் இருந்தனர் இந்தியாவில். எதனால் ? கலப்பு இனம் ஆனதால்..... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆகவே ராமன் கிருஷ்ணன் ஐ கொண்டாடும் தமிழர்கள் அவர்கள் வட மொழி பேசிய சமஸ்கிருதம் பேசிய கடவுள்கள் ஆரியர் ரத்தம் என்பதை தெளிவாக உணர்ந்தே உள்ளனர்.... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">அதே சமயத்தில் ராமன் கிருஷ்ணன் காலத்தில் தமிழ் இருந்தது. தமிழும் பேசப்பட்டது. தமிழ் பேசியவர்கள் எழுதியவர்கள் யார்? கைகேயி. பரதன். பரதவன். பரவன். பரவோன். பார்வோன். Pharoah. இந்த பரதவர்கள் தான் எகிப்து ஆண்ட மன்னர்கள் என்பது பைபிள் ஆதியாகமம் புதிய ஏற்பாடு இரண்டிலும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.....</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">ஆகவே தசரதன் என்பவன் ஆரியன். அவன் மனைவிகள் 400 பேரில் பல தமிழச்சிகள் தெலுங்கு மலையாளி கன்னடம் பெண்கள் இருந்தனர். இதுவே திராவிடர் ஆரியர் கலப்பு..... </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">கச்சியப்ப சிவாச்சாரியார் ஆரியர். அவருடைய 13 மனைவிகளில் பலர் தமிழர். யவனர். கிரேக்கர். பார்சி பாரசீகம் பெர்சியன் கலப்பு உண்டு. </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">இந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பெயரில் தான் இன்றைய காஷ்மீர் மாநிலம் உள்ளது. கஷ்யப் காஷ்யப் கஷ்யபர் என்ற ஜாதி வட நாட்டில் பிராம்மணருக்கு அடுத்த கயஸ்தா காயஸ்தா ஜாதியாக உள்ளனர். எழுத்தர். பத்திர எழுத்தர். கிராமணி. கணக்கு பிள்ளை. கர்ணம். கர்ணீகர்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">5. Sree Vidhya பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே = சிவபுராணம். மாணிக்கவாசகர். திருவாசகம். </div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;">சிவன் ஆரியன். ஓரியன். ஓரையன். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். உதித்தவர். அந்த விண்மீன் குழாமில் இருந்து ராக்கெட் மூலம் பூமிக்கு வந்தவர் சிவன். ஏலியன். மூன்று கண் உடையவர். முக்கண்ணன். நெற்றிக்கண் திறந்து மன்மதனை தகனம் காமதகனம் செய்தவர்.</div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"></div><div style="overflow-wrap: break-word;"><br style="overflow-wrap: break-word;"><div id="yiv6887044721ymail_android_signature" style="overflow-wrap: break-word;"><a rel="nofollow noopener noreferrer" id="yiv6887044721ymail_android_signature_link" target="_blank" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_" style="overflow-wrap: break-word; word-break: break-word;">Sent from Yahoo Mail on Android</a></div></div><br><div id="ymail_android_signature"><a id="ymail_android_signature_link" href="https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_">Sent from Yahoo Mail on Android</a></div>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-78284553617446651692023-01-05T21:05:00.001+05:302023-01-06T18:17:59.067+05:30தமிழர்கள் எப்போதும் வரிசை வரிசையாக சிற்பங்கள் வடிக்கின்றனர் ஏன்? Why Tamils repeat Elephant, Lion, Goat, Bull, Snake, Peacock sculptures outside their Temples?<div dir="auto"><div dir="auto"><br /></div><div dir="auto">நாடக மணி என்ற தமிழ் அரசன் கட்டிய எகிப்து நூபியா கோவில். </div><div dir="auto"><br /></div><div dir="auto">தமிழர்கள் எப்போதும் வரிசை வரிசையாக சிற்பங்கள் வடிக்கின்றனர் ஏன்? </div><div dir="auto"><br /></div><div dir="auto">திரும்ப திரும்ப ஆடு, பாம்பு, சிங்கம், யானை, காளை சிற்பங்கள் வரிசையாக நிற்பது தமிழர் பண்பாடு மற்றும் கலை.</div><div dir="auto"><br /></div><div dir="auto">தமிழர்கள் அணியும் காஞ்சிபுரம் பட்டுச் சேலை பார்டர் பள்ளு புட்டா கூட திரும்ப திரும்ப யானை மயில் அன்னம் பூக்கள் தாமரை கிளி போன்று Repetition உள்ளது. </div><div dir="auto"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcz4HIIGUGR7KI4btEhZI4CxvLvtRRSzcOPp7RseZoZepAF56WlaZPLTBKd1FC_wH1RilXtqsi4aE0oiDW8FO6CddcfgxdPrQiui8bH3EjTlStd67M2AOqU04wvftbAkmywCY4kh3fjyqUwcaQ9lEWVMRLAjt0ZSaJ-_edryI1okRk9sH5YNuydJi2vw/s1422/323425547_850055359655259_187652257901084498_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1422" data-original-width="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcz4HIIGUGR7KI4btEhZI4CxvLvtRRSzcOPp7RseZoZepAF56WlaZPLTBKd1FC_wH1RilXtqsi4aE0oiDW8FO6CddcfgxdPrQiui8bH3EjTlStd67M2AOqU04wvftbAkmywCY4kh3fjyqUwcaQ9lEWVMRLAjt0ZSaJ-_edryI1okRk9sH5YNuydJi2vw/s16000/323425547_850055359655259_187652257901084498_n.jpg" /></a></div><br /><div dir="auto"><br /></div><div dir="auto"><br /></div><div dir="auto">Repetition is Life itself. </div><div dir="auto"><br /></div><div dir="auto">In Horoscope Jothida Sashtram we call it Saram Rashikal. Saram Rashi are Mesham</div><div dir="auto">Simham Dhanusu. They represent fire. </div><div dir="auto">Fire is a repetitive heat. Repetitive burning. </div><div dir="auto">In fact all 5 elements are Saram. </div><div dir="auto">Water Rain River Ocean are Saram. </div><div dir="auto">Repetitive water drops form rain. </div><div dir="auto">Repetitive water flow we call as River. </div><div dir="auto">Repetitive waves we call as Ocean. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus Nilam, Neer, Thee, Vali, Aakasam all 5 elements basic to Life are Saram. Repetitive action. Repetitive events. Repetitive happenings. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Earth, Water, Fire, Air, Ether (Aakaasam/Space) all the 5 elements are repetitive. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus Tamils understood the Value of repetitive events, repetitive happenings, repetitive actions, repetitive habits. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Repetitive habits form Character. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Repetitive words form Mantra. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Repetition is the foundation of Life. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Cell replication builds Life forms. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Sperm and Egg becomes a Zygote and Cell Replication inside the womb container uterus creates a Human Body in 9 months. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus repetition is needed to create and sustain anything. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Even after birth everyday Trillions of our body cells die and they are replenished by repetitive action of new cells being born. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Maaya whole world, whole universe is a Maaya. This Maaya Maayam is created by constant birth and death cycles. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Constant birth and death are caused by repetitive action of cells inside body. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Knowing the power of repetition, Tamils constructed Temples with lines of elephants, goats, bulls, peacocks, snakes, flowers, horses sculptures. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Same Tamils also woven their Silk Sarees Pallu Border Butta with repetitive weavings of elephants, Annam, birds, flowers, Mango, peacock design. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Repetitive words become Mantra. </div><div dir="auto">Repetitive words create Miracles. </div><div dir="auto">Repetitive words creates Action. </div><div dir="auto">Repetitive words create Magic. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus Tamils formed Mantrams such as Om Nama Shivaya</div><div dir="auto">Om Namo Naryanaya</div><div dir="auto">Etc. </div><div dir="auto"><br /></div><div dir="auto">These Mantrams too are powerful. </div><div dir="auto">They can make or break a thing. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So the following photos will explain how Tamils ruled the World as Oraiyans Orion Aryan people with repetitive designs of motifs in Temple Sculptures. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Every House built all around the world is a repetition of bricks. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Series of Bricks can make Rooms, Roof, liveable space. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Compare the line of statues at Egypt with same kind of line of statues in all Tamilnadu temples. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Mostly the line of statues have elephant, lion, bull, snake sculptures.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Kindly compare the Egyptian row of Rams (goat) statue with Mahabalipuram row of Bulls and Ankor Vat row of snakes statue and Orissa Konark Temple row of lions statue and row of elephants, lions statue at Halebidu Karnataka. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Photos are added below for your information. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Tamils know the power of repetition. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Mantrams if repeated, gains power. </div><div dir="auto">Habits if repeated, gains character. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Whole universe is repetition.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Samuel Manickam I may be wrong about the use of the word Selfishness. </div><div dir="auto"><br /></div><div dir="auto">I agree we can't compare Siddhar MGR Lenin Samadhi with Mummification. </div><div dir="auto"><br /></div><div dir="auto">At the same time, my point of argument is to put forward the Notion that Mummification started as a Ritual to protect the Royal Family. </div><div dir="auto">Kingdom. </div><div dir="auto">Dynasty. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Poor people followed Kings. Royals. </div><div dir="auto">They were buried separately. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Kings Queens Royals had high expense Cemetery. Tomb. Mummification process. </div><div dir="auto"><br /></div><div dir="auto">It was not Democratic. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Royals Kings Queens Royal Family Tombs had lot of Gold, Silver, Marble collections. </div><div dir="auto"><br /></div><div dir="auto">During 2800 BC they were not sure about what happened to a Dead Man? What happened when we die? </div><div dir="auto"><br /></div><div dir="auto">They asked questions to themselves. </div><div dir="auto"><br /></div><div dir="auto">They also asked the God. </div><div dir="auto"><br /></div><div dir="auto">They couldn't get proper reply. </div><div dir="auto"><br /></div><div dir="auto">God suggested them various rituals. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So whatever voices they heard inside their minds they started to follow it. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Even today Egypt and India are the only few countries which insist to give Food to Crow. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Egyptians and Indians even today think after death Soul resides in a Crow for </div><div dir="auto">some time. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Feeding to Crow is seen as giving food to our forefathers. Dead elders. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So, what is after death is a Major Philosophical Question from 5000 BC to 2800 BC to till today. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Persians Parsis put their dead bodies in open well. They allow Vultures to eat their dead body. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So it's kind of Philosophical question. </div><div dir="auto"><br /></div><div dir="auto">How much a Religion, Culture, Ethnicity progressed is measured by what Philosophy they have about Death. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Some are burying. </div><div dir="auto">Some are cremating. </div><div dir="auto"><br /></div><div dir="auto">What is Correct? Right? </div><div dir="auto"><br /></div><div dir="auto">Burial or Cremation? </div><div dir="auto"><br /></div><div dir="auto">This question was also raised by Hindus of India. </div><div dir="auto"><br /></div><div dir="auto">India was an Urban City Center with so many small towns all over India. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Indians know the Value of Real Estate. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Indians know the Value of fertile land. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So they decided to burn the dead. </div><div dir="auto"><br /></div><div dir="auto">They explained burning a dead human reduces spread of his bacteria, virus after his death. </div><div dir="auto"><br /></div><div dir="auto">They explained burning of dead humans actually help in saving Prime Real Estate. High Value Properties in Cities, Capitals, Towns. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Japanese, Europeans, Americans now complain about less and less space available for Cemetery. Tombs. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So, even Burial is not a best Philosophical Answer. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Slowly Western World, Japanese, Chinese agree to the view point of Hinduism that it may be a best Policy to cremate the dead. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Electric Crematoriums are a fashion now. </div><div dir="auto">LPG Crematoriums also. </div><div dir="auto"><br /></div><div dir="auto">The above modern facilities help in reduction of unnecessary rituals. </div><div dir="auto"><br /></div><div dir="auto">People now quickly mourn the dead. </div><div dir="auto"><br /></div><div dir="auto">16 days mourning are reduced to 5 days mourning now in most of Tamilnadu. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Even if Father, Mother close blood relations die now a days only 5 days mourning is observed. </div><div dir="auto"><br /></div><div dir="auto">People don't have leave, free time to keep 16 days mourning. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Also fooding and lodging expenses for 16 days families are not ready to bear it. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus what we see is just 5 days mourning. </div><div dir="auto"><br /></div><div dir="auto">And they quickly move on with office work. Mundane activities. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Even this 5 days mourning may be reduced in the future. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So when Humanity progresses we see lot of Philosophical changes happen. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Policies change. </div><div dir="auto">Programs altered.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Samuel Manickam Why i say Selfishness? </div><div dir="auto"><br /></div><div dir="auto">It is not shown outwardly. </div><div dir="auto">But actual fact is selfishness. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Protection of Royal Family. </div><div dir="auto">Protection of Property. </div><div dir="auto">Protection of Dynasty. </div><div dir="auto">Protection of Political Power. </div><div dir="auto">Protection of Gold, Silver, Valuables. </div><div dir="auto">Protection of Family History. </div><div dir="auto">Protection of Family Genealogy. </div><div dir="auto">Protection of Family Valuables. </div><div dir="auto"><br /></div><div dir="auto">That's why in India we see many Private Caste Based Temples. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Family Temples. </div><div dir="auto"><br /></div><div dir="auto">It's written on Top of the Temple. </div><div dir="auto">"Sengunthar Mudaliyar Samooham Paththiyadhaippatta Kovil".</div><div dir="auto">No one else other than that particular caste people can become Thakkar of that Temple. </div><div dir="auto">No one else other than that particular caste families can enjoy all properties, Undiyal collection, revenues of the Tomb Cemetery Temple. </div><div dir="auto"><br /></div><div dir="auto">I remember Palani Temple Keys once famously resided with Siddhar Paramparai Pillai caste people of Palani. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Slowly Palani Temple taken over by Tamilnadu Government. It's no more a selfish private property. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Same case applies to Chidambaram Natarajar Kovil. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Earlier it was a Private Property of Kshatriyars. Particularly Pichchavaram Jameen Pannaiyars. Vanniyar Padaiyatchis. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Now Kshatriyars don't enjoy it. </div><div dir="auto">Brahmins, Deekshidhars enjoy it. </div><div dir="auto"><br /></div><div dir="auto">So death rituals, mummification too attains Selfish property motives even in Egypt. </div><div dir="auto"><br /></div><div dir="auto">That's why they kept Guards at Temples. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Without Guards the Pyramids were looted for Gold Silver Valuables. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Unknowingly Selfishness enters Temples, Pyramids because it is a revenue making property. </div><div dir="auto"><br /></div><div dir="auto">This is the motive behind my use of word Selfishness at Egyptian Pyramids and it's comparison to Indian Rich Agamam Based Temples.</div><div dir="auto"><br /></div><div dir="auto">We all famously know how the Owners of Kerala Iyyappan Kovil were Pandhalam Royal Family. Pandiyan Tamil links they have. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Now they can't enjoy all revenues of Iyyappan Kovil. Kerala Government enjoys more.</div><div dir="auto"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFkuWoWgTRT9SHUw3n40ptWttsVs6WulHjrmnMWt-vtP3-6ujBIK3tczhD6SowPSPzxMgKuVmL8FsbiXbAjJIgTHt88iP0X1VY06NmwPcGuU4hAs1KgBXiE95tUZSw8hjL5dRmDuJe1MRPTbP3SsVLtL56_vHIPI7OBvs_1btjcrSF_utInTjVA-Bgtw/s500/321057265_722273505779164_8090382563898552947_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFkuWoWgTRT9SHUw3n40ptWttsVs6WulHjrmnMWt-vtP3-6ujBIK3tczhD6SowPSPzxMgKuVmL8FsbiXbAjJIgTHt88iP0X1VY06NmwPcGuU4hAs1KgBXiE95tUZSw8hjL5dRmDuJe1MRPTbP3SsVLtL56_vHIPI7OBvs_1btjcrSF_utInTjVA-Bgtw/s16000/321057265_722273505779164_8090382563898552947_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiCezM0BMRcJZEB2Wu6IUNpVvVCSyCR0gb3Pe-VHP9GN_agkmW7fkxJsk89lXI56OPDHCaX-HzQdinl7itzkqTeJNI4oXMnW1FqhoZACPv7mz8gTlde3MpruPH3BmrVdnTw_I_LJQGcn179uCG8P4-I8FDFKGn5CU2OBz0QX68qmDe7bNc4fjPtE9hvw/s896/321508632_581821843760156_1331634522463250195_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="896" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiCezM0BMRcJZEB2Wu6IUNpVvVCSyCR0gb3Pe-VHP9GN_agkmW7fkxJsk89lXI56OPDHCaX-HzQdinl7itzkqTeJNI4oXMnW1FqhoZACPv7mz8gTlde3MpruPH3BmrVdnTw_I_LJQGcn179uCG8P4-I8FDFKGn5CU2OBz0QX68qmDe7bNc4fjPtE9hvw/s16000/321508632_581821843760156_1331634522463250195_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQZ4YxnV7zzW1UdID5BV7HiiBes_KKBdVDc80mS0Lsq_6Kg8WSDEcjPbyD3wqrazLSP4TneepZ63Dn15XDLM-TOqGatf0FyYuxvn_tnVbwImq9AaMhwhADbjzWuTaKWwCuENpsfIBWcZDk6ISpbofBx-EoQ0XN8OJYQ6QchPaF9Qpi6b4bLxKCgVuxg/s500/321843641_533371992162476_1201973188873388513_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="375" data-original-width="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQZ4YxnV7zzW1UdID5BV7HiiBes_KKBdVDc80mS0Lsq_6Kg8WSDEcjPbyD3wqrazLSP4TneepZ63Dn15XDLM-TOqGatf0FyYuxvn_tnVbwImq9AaMhwhADbjzWuTaKWwCuENpsfIBWcZDk6ISpbofBx-EoQ0XN8OJYQ6QchPaF9Qpi6b4bLxKCgVuxg/s16000/321843641_533371992162476_1201973188873388513_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwsT2UdM5UNrWQTYt6QIY1OEEDZUob6a28ItNptBuwbRLNqQWc-a8BG6Gy_RmL8yEnSYIH-Gy53cqAnWyCSGF37UNSeaQtO9Yg-CJ_DaQIAI2y2PhN0NocbirHq2H3BjHuMQm19Lzs-C5CwqyWuH9uYg8cs9OQA10rjYJ4U-g930xfVuPODWZNF3cwPg/s1341/323416053_1629803204121462_3779350820136877183_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1341" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwsT2UdM5UNrWQTYt6QIY1OEEDZUob6a28ItNptBuwbRLNqQWc-a8BG6Gy_RmL8yEnSYIH-Gy53cqAnWyCSGF37UNSeaQtO9Yg-CJ_DaQIAI2y2PhN0NocbirHq2H3BjHuMQm19Lzs-C5CwqyWuH9uYg8cs9OQA10rjYJ4U-g930xfVuPODWZNF3cwPg/s16000/323416053_1629803204121462_3779350820136877183_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUmbDJxIpga58ABYzAXgTb6b20bck2x5OTkvq9y-hQr4kjT_0xP7ArTCa4ZeGHNPtVb6oSEqX0U4qEbRGZj6yL8T2LyO5AQdTkUjHzGMN6FxMb1I25PfXAYq3Tok8c33HUu8UwqHuWnXAi1spomO6R3htPXdxFKR81aLlb9YFRKvJucwwnYh1B3ERcZg/s1222/323454349_3564248587183518_974801602235111691_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1222" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUmbDJxIpga58ABYzAXgTb6b20bck2x5OTkvq9y-hQr4kjT_0xP7ArTCa4ZeGHNPtVb6oSEqX0U4qEbRGZj6yL8T2LyO5AQdTkUjHzGMN6FxMb1I25PfXAYq3Tok8c33HUu8UwqHuWnXAi1spomO6R3htPXdxFKR81aLlb9YFRKvJucwwnYh1B3ERcZg/s16000/323454349_3564248587183518_974801602235111691_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXfQQqE0m-0OWCLrUq98eKSFriiKxqa3dKoKGIyrl_ijnhu3JGTmAu42Biu9NFj8YannvkLKx9pnFUaAotTV7p5suXbYqO_42maesyODKdT4npM54JYixM_F-OAagj_3ju3Mn5EHiVyHgwjrjD4EUOwmb9mF9a2pUdiiG_I8Al1Efua7-Nmar5jaLfLQ/s1006/323692714_677292157442235_1801187129828465694_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1006" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXfQQqE0m-0OWCLrUq98eKSFriiKxqa3dKoKGIyrl_ijnhu3JGTmAu42Biu9NFj8YannvkLKx9pnFUaAotTV7p5suXbYqO_42maesyODKdT4npM54JYixM_F-OAagj_3ju3Mn5EHiVyHgwjrjD4EUOwmb9mF9a2pUdiiG_I8Al1Efua7-Nmar5jaLfLQ/s16000/323692714_677292157442235_1801187129828465694_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwdnHbNSG2qGUAYuo1hjWckKtwwzBKzoEFhtYPEOMY6ON41JtwfTP_aUbnzQXPBXdLTKm6TaT051Z78V502PYdMG34DUS28iO6P0cnOSf24m4kK4_uqVmtnu2hNAY_q7RzHax_XLfqfFbp8WySZ97dubj9LUDgaFBR4ThisXdFDB1BQlq4wGaLribZ-Q/s1215/323730529_538126878346235_5923712718006215928_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1215" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwdnHbNSG2qGUAYuo1hjWckKtwwzBKzoEFhtYPEOMY6ON41JtwfTP_aUbnzQXPBXdLTKm6TaT051Z78V502PYdMG34DUS28iO6P0cnOSf24m4kK4_uqVmtnu2hNAY_q7RzHax_XLfqfFbp8WySZ97dubj9LUDgaFBR4ThisXdFDB1BQlq4wGaLribZ-Q/s16000/323730529_538126878346235_5923712718006215928_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCFCeoemWfGFXhsw6oo2wPnUA65PAAX8_ngbfdbN3DkTNK8ccstZNvdbo7TuzFNKTpAXMTYAQbyon90hkbUihBTp2rTVI3s7NLlblc9_X0A5ej05a4yQSt2PrEFOqeZl4OJPBA4JJqttA60kCm4WsZ-Ej5r_qPkUDfLWlnp6vvmMd5qgdZhQ58b-zFHg/s1197/323817090_562380662092366_2601946957225025973_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1197" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCFCeoemWfGFXhsw6oo2wPnUA65PAAX8_ngbfdbN3DkTNK8ccstZNvdbo7TuzFNKTpAXMTYAQbyon90hkbUihBTp2rTVI3s7NLlblc9_X0A5ej05a4yQSt2PrEFOqeZl4OJPBA4JJqttA60kCm4WsZ-Ej5r_qPkUDfLWlnp6vvmMd5qgdZhQ58b-zFHg/s16000/323817090_562380662092366_2601946957225025973_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_EBId6XORjCocpsDiQISSH_QI_qOazUq7ntuL8G0BR8KgDCc5crTrKemEKTjV9CwpeTgkFSQSsGN2P3ogyd3uzFkg-lHq7VdH9LWRsUIZKMWPh5JFcEVeVDfW8W5xYZPI0elBpfqwxTIZgxLFiEyCIGhO_zscmafoNitrO4C9-oB6Tzbtzy3p3vY_kQ/s1334/323866314_889409502311835_8837323555106904771_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1334" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_EBId6XORjCocpsDiQISSH_QI_qOazUq7ntuL8G0BR8KgDCc5crTrKemEKTjV9CwpeTgkFSQSsGN2P3ogyd3uzFkg-lHq7VdH9LWRsUIZKMWPh5JFcEVeVDfW8W5xYZPI0elBpfqwxTIZgxLFiEyCIGhO_zscmafoNitrO4C9-oB6Tzbtzy3p3vY_kQ/s16000/323866314_889409502311835_8837323555106904771_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfYdTlq0R7vBjLH_4rnEDqUI-fQC3prfDP7eIw7VnfyZyLgTjRVnxYf-lKu1k8jwqjXeOW4WR9lkcXEQ1fqt1kM-Vujxf_diENupc8Sopg0ZWiYfbbg-mfrOvWdqvcuLg6NbczpUKiWlBb6bd-hJ2V2U0qk6v-_DwoyzMqrU8cxgks5VQxgftx71T0Hg/s1600/323887532_1219304858667274_1426847006933349459_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfYdTlq0R7vBjLH_4rnEDqUI-fQC3prfDP7eIw7VnfyZyLgTjRVnxYf-lKu1k8jwqjXeOW4WR9lkcXEQ1fqt1kM-Vujxf_diENupc8Sopg0ZWiYfbbg-mfrOvWdqvcuLg6NbczpUKiWlBb6bd-hJ2V2U0qk6v-_DwoyzMqrU8cxgks5VQxgftx71T0Hg/s16000/323887532_1219304858667274_1426847006933349459_n.jpg" /></a></div><br /><div dir="auto"><br /></div><div dir="auto"><br /></div><div dir="auto">Samuel Manickam சிறு துளி பெரு வெள்ளம் என்ற தமிழ் பழமொழி</div><div dir="auto">மற்றும் சிறு சேமிப்பு என்ற பழக்கம் கூட எவ்வாறு சிறுகச் சிறுகச் சேமித்தால் அது பெரிய தொகை ஆகிறது மற்றும் </div><div dir="auto"> மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்</div><div dir="auto"> என்ற பைபிள் வசனம் இவை எல்லாம் சிறிது சிறிதாக சேர்ந்து பெரியதை அடையும் அறிவியல் உண்மையை கூறும். மேலும் இது நடைமுறை நிதர்சனம் ஆகும். </div><div dir="auto"><br /></div><div dir="auto">பல அறிவியல் உண்மைகள்</div><div dir="auto">இயற்கை நியதிகள் </div><div dir="auto">இயற்கை விதிகள் </div><div dir="auto">இயற்பியல் </div><div dir="auto">கணித இயல்</div><div dir="auto">மானுட இயல் </div><div dir="auto">வேதியியல்</div><div dir="auto">மனோ தத்துவ இயல்</div><div dir="auto">தத்துவங்கள் உண்மைகள்</div><div dir="auto">தமிழர் ஆகமம் கோவில்களில் சொல்லப்பட்டு</div><div dir="auto">உள்ளன.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Samuel Manickam புத்தர் ஐம்பூதங்கள் என்ற 5 எலமண்டஸ் ஐ ஏற்றுக் கொள்ள வில்லை. ஆகாசம் என்பது உண்டு அதுவே இறைவன் உடுத்தும் உடை என்கிறது இந்து மதம் மற்றும் சமணர் மதம். </div><div dir="auto"><br /></div><div dir="auto">திகம்பரர் = ஆகாயத்தை உடுத்தி உள்ள அம்மணர் குரு. </div><div dir="auto">ஸ்வேதாம்பரர் = </div><div dir="auto">சமணர் பிரிவுகள். </div><div dir="auto"><br /></div><div dir="auto">எது உண்மை என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. </div><div dir="auto"><br /></div><div dir="auto">எனினும் தமிழர் கொள்கைகள் பல ஆச்சரியம் ஊட்டுபவை.</div><div dir="auto"><br /></div><div dir="auto">எண் குணத்தான் இறைவன். </div><div dir="auto">நெற்றிக்கண் சிவன். </div><div dir="auto">ஐம்பூதங்கள். </div><div dir="auto"><br /></div><div dir="auto">இப்படி பல பல தமிழர் கருத்துக்கள் காலத்தால் முற்பட்டவை. மற்றும் பிற மனித இனங்கள் சொல்லவோ நினைக்கவோ எழுதவோ இயலாத உயர்நிலை கொள்கைகள் தமிழர் சிந்தனை. </div><div dir="auto"><br /></div><div dir="auto">ஆகவே வரிசையாக திரும்ப திரும்ப ஆடு, மாடு, பாம்பு, சிங்கம், யானை, பூக்கள் சிற்பங்கள் அமைத்து, கோவில்கள் கட்டி.....உலகின் அடிப்படை ஆதாரம் ரிப்பெட்டிஷன்</div><div dir="auto">என்ற திரும்ப திரும்ப செய்யும் பழக்க வழக்கங்கள் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி இந்து மதத்தை தமிழர் மதத்தை தமிழர் கொள்கையை இயற்கையோடு இணைந்த மாந்திரீகம் மந்திரம் தந்திரம் யந்திரம் சேர்ந்த மனவியல் சாஸ்திரம் சைக்காலஜி அறிவியலாக இந்து மதத்தை தமிழர் சமயத்தை உயர்த்தி வைத்து உள்ளது தமிழ். </div><div dir="auto"><br /></div><div dir="auto">இதில் திருஞானசம்பந்தர் </div><div dir="auto">மாணிக்கவாசகர்</div><div dir="auto">சுந்தரர்</div><div dir="auto">திருநாவுக்கரசர்</div><div dir="auto">என்ற சமயக்குரவர் நால்வர் பாடிய</div><div dir="auto">அற்புதத் தேவாரம் திருப்பதிகங்கள் பல..... </div><div dir="auto">முதலை உண்ட பாலகனை மீட்டுக் கொடுத்தமை</div><div dir="auto">ஆண் பனையை பெண் பனை ஆக்கி அதை கன்று ஈனச் செய்தது</div><div dir="auto">ஏட்டு சுவடிகள் ஆற்றை எதிர்த்து மிதந்தது </div><div dir="auto">நீற்றரை குளிர்ந்தது என்ற சுண்ணாம்பு காளவாசலில் உடல் கொதிக்க கிடந்த மாணிக்கவாசகர் தப்பித்த பதிகம். </div><div dir="auto">இறந்து போன பெண் உயிர் பெற்றது... </div><div dir="auto">இடது கண் பெற்றது</div><div dir="auto">வலது கண் பெற்றது </div><div dir="auto">தங்க காசுகள் பெற்றது </div><div dir="auto"><br /></div><div dir="auto">இவ்வாறு பல அற்புதங்கள் செய்தவர் தமிழர். தமிழ் தேவாரம் திருப்பதிகங்கள். </div><div dir="auto"><br /></div><div dir="auto">மேலும் ராவணன், அகத்தியர் போட்டியில் மலை பாறை உருகச் செய்தார்கள் வீணை இசையால். </div><div dir="auto"><br /></div><div dir="auto">நாதஸ்வர சக்ரவர்த்தி சினிமா படத்தில் சிவாஜி கணேசன் பீப்பி ஊதி </div><div dir="auto">வாழைப்பழம் தார் மொத்தமாக பழுக்க வைப்பார். </div><div dir="auto">இன்று அறிவியல் அதை மைக்ரோ வேவ் குக்கர் ஆக கொண்டு வந்து உள்ளது. </div><div dir="auto"><br /></div><div dir="auto">ஆகவே எண்ணில் அடங்கா அற்புதம் செய்தவர் தமிழர். தமிழ்.</div><div dir="auto"><br /></div><div dir="auto"><br /></div><div dir="auto"><br /></div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-85670953951995239762023-01-05T21:03:00.001+05:302023-01-06T18:27:33.303+05:30Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு துரட்டி கொக்கி இலை தழை பறிக்க மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......<div dir="auto"><div dir="auto"><br /></div><div dir="auto">Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......</div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த கொக்கி துரட்டி முத்திரை பாண்டியர் மீன்கள் இடையே உண்டு. செண்டு என்று பெயர். எகிப்து ஆண்ட தமிழர் எழுதிய ஆதி தமிழ் + சமஸ்கிருதம் என்ற கிரேக்கம் ரோமன் மொழியில் உண்டு.</div><div dir="auto"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpghSXDZmMkfi9AIyw7NnptCUhsIDczJZ-moKik8PN3DiECvGWc03MRuIgpnThPXjuSDZvRNS_wGydniTeTfPBjRxfiopLk2SuXJnRQAgfWwlMt6ulNRyXFoHiiU2LC6sHRQ5Oz0wysK4iXry_7sRHijlTIVkRp5Ysezz0ZICcFaaZszFnvRTPFQCaDg/s622/320812298_908487513482674_7916196597231369958_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="493" data-original-width="622" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpghSXDZmMkfi9AIyw7NnptCUhsIDczJZ-moKik8PN3DiECvGWc03MRuIgpnThPXjuSDZvRNS_wGydniTeTfPBjRxfiopLk2SuXJnRQAgfWwlMt6ulNRyXFoHiiU2LC6sHRQ5Oz0wysK4iXry_7sRHijlTIVkRp5Ysezz0ZICcFaaZszFnvRTPFQCaDg/s16000/320812298_908487513482674_7916196597231369958_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTBtnl_HqA6rzN_dEevGLNFEwQKVfOmFQuK6oDE9EhCfSGHoa6Zy4PZ_Qlk-GsJPnY8XYyaLhEYOI8XNWI9WzYWWH3FN1pQXULrLUM6cCCZhwDeMYVjnHxuLzZRGveNuusdnoBEA12gs6LjLaXE3RPCopcsgMEO3_d4UKJfON9702ZHnlgLyCh9tTjcA/s701/320976031_565016725642178_1071478108168674820_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="701" data-original-width="526" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTBtnl_HqA6rzN_dEevGLNFEwQKVfOmFQuK6oDE9EhCfSGHoa6Zy4PZ_Qlk-GsJPnY8XYyaLhEYOI8XNWI9WzYWWH3FN1pQXULrLUM6cCCZhwDeMYVjnHxuLzZRGveNuusdnoBEA12gs6LjLaXE3RPCopcsgMEO3_d4UKJfON9702ZHnlgLyCh9tTjcA/s16000/320976031_565016725642178_1071478108168674820_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxObzZFS7k2mLGi_vyMBS3_M13I9STe2dXZYSKrSVpUBszaZBvYYxNDaFJlE3L5bpncxKzBVT_7m2dCsb4vrMvWCblkwFov97q6MGM6GWfFS73pILpwfb4Y-zWpcaCMOEb7vzlI0Nz5E8RRhRvg9OFS2eJV2ou9-FNAwDaWUE5PdX3N4-z9FCGARRPrg/s639/322129706_677963140699721_2027739024467141306_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="639" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxObzZFS7k2mLGi_vyMBS3_M13I9STe2dXZYSKrSVpUBszaZBvYYxNDaFJlE3L5bpncxKzBVT_7m2dCsb4vrMvWCblkwFov97q6MGM6GWfFS73pILpwfb4Y-zWpcaCMOEb7vzlI0Nz5E8RRhRvg9OFS2eJV2ou9-FNAwDaWUE5PdX3N4-z9FCGARRPrg/s16000/322129706_677963140699721_2027739024467141306_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGPp_nRmbfygmdEhQlzSlYY8s0Ik9QNPt1yFQCqBmbqEA0y0L8oKDjr0MvlMG1KY8inoyAJ3Ldq8w7hfPzSWH7kii9lVjBr4SK9DX3pNbe-pxoSrG7fZNXWVTKt16USIZiLmRJbwqU9ZgTT8eWVRKgmnKIIMlz2vi68gOjgu-tHthNTdVfEWQDbda5jA/s226/322575986_678634917236664_4480451164391296129_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="226" data-original-width="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGPp_nRmbfygmdEhQlzSlYY8s0Ik9QNPt1yFQCqBmbqEA0y0L8oKDjr0MvlMG1KY8inoyAJ3Ldq8w7hfPzSWH7kii9lVjBr4SK9DX3pNbe-pxoSrG7fZNXWVTKt16USIZiLmRJbwqU9ZgTT8eWVRKgmnKIIMlz2vi68gOjgu-tHthNTdVfEWQDbda5jA/s16000/322575986_678634917236664_4480451164391296129_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWLgAhKjQPBBb4KA0bKEh-fcAdgG1unh1WFObv4UmG2p9ca_JqPlTI2MXWmaURvfC3iJWzqXgiNtv25H2_s0YEm-IYcIvuI0wCo9ftoanDmQ6DKx4OFo1g5i7tjczun-O8TOlIYeNTHOhGcPWqqCAGVQClfqZtSNokqkZqh_6rlEZaEufJ3gHEe3QPJg/s720/322599928_1292539938260862_1361753543139062216_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="683" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWLgAhKjQPBBb4KA0bKEh-fcAdgG1unh1WFObv4UmG2p9ca_JqPlTI2MXWmaURvfC3iJWzqXgiNtv25H2_s0YEm-IYcIvuI0wCo9ftoanDmQ6DKx4OFo1g5i7tjczun-O8TOlIYeNTHOhGcPWqqCAGVQClfqZtSNokqkZqh_6rlEZaEufJ3gHEe3QPJg/s16000/322599928_1292539938260862_1361753543139062216_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1kMuCLYeYoRQwdw1iG-mZu0qcmuJl_uRPbcHRrYk8m_Ww8YJKT_kv1vUaYcs4iju-EuQQSWOuGwB34eA8njYfj4x9zl6nr-Zi206zyyVbC4LmxBFSlewFJjyhP_PaajbFcoCExcK_e2vDpxyw5ndOltbOh2WPQggV_LNIjBbrMw3zIxbchh0vkg0LVw/s259/323409117_656758452800558_6815414655275017058_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1kMuCLYeYoRQwdw1iG-mZu0qcmuJl_uRPbcHRrYk8m_Ww8YJKT_kv1vUaYcs4iju-EuQQSWOuGwB34eA8njYfj4x9zl6nr-Zi206zyyVbC4LmxBFSlewFJjyhP_PaajbFcoCExcK_e2vDpxyw5ndOltbOh2WPQggV_LNIjBbrMw3zIxbchh0vkg0LVw/s16000/323409117_656758452800558_6815414655275017058_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfF_XCWo2n9icuHQ_pnLAnNgNxrYsXfWJ9EEJIuVwUbrPSHOqRcPedwJWNXPXDD06aOoaq6yawIObq3uNFOsTpRFLX_Y7r5W_6SD-c-2T6ICvtARllefpZkGMz8eidtTQfAByJm90gVgWZj3guaq5Pd8C4BgsxcAQdsy0m6MVe4UNeFlRMhsPUt5K6RA/s268/323423140_691423005865094_3278964597358069294_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="178" data-original-width="268" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfF_XCWo2n9icuHQ_pnLAnNgNxrYsXfWJ9EEJIuVwUbrPSHOqRcPedwJWNXPXDD06aOoaq6yawIObq3uNFOsTpRFLX_Y7r5W_6SD-c-2T6ICvtARllefpZkGMz8eidtTQfAByJm90gVgWZj3guaq5Pd8C4BgsxcAQdsy0m6MVe4UNeFlRMhsPUt5K6RA/s16000/323423140_691423005865094_3278964597358069294_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0orNVG87n7H-29dnuBgMI9NtraK7i9ZC5xvN-hu2EKSXlkHeMfgAz1kZDqoZ2hJZ1mhWy8Ma3On3537NHBncNlT-jxek3sQupRbjNUXYVrXhbZZCO51r4i_mRZHN124EPkSfYGik_XGKyPFimSLBZe3QKAaJAiCGBArAcDkBAPXIlaUHy9CDPIoRM5Q/s278/323437138_1112087262815321_5012924584412334181_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="278" data-original-width="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0orNVG87n7H-29dnuBgMI9NtraK7i9ZC5xvN-hu2EKSXlkHeMfgAz1kZDqoZ2hJZ1mhWy8Ma3On3537NHBncNlT-jxek3sQupRbjNUXYVrXhbZZCO51r4i_mRZHN124EPkSfYGik_XGKyPFimSLBZe3QKAaJAiCGBArAcDkBAPXIlaUHy9CDPIoRM5Q/s16000/323437138_1112087262815321_5012924584412334181_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUw4DYvCrKAwwBEYvAxbDR_SFfjwVoWmSmrczGjVWQf2MBtHYgP8pFpfFO7c4z_AB2hV-RGqx2MCOH6NMBVYtphmExnAyRAfUZm-40V1GsGFdEPpEqa9VqYDVIlV8z7oF64EYCc56ASmQXtyPb6nIhBxElPukO8dU_nyUspHy0C_6o8bdiIza3fygoEQ/s960/323624934_697272461888243_8486541144847121539_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUw4DYvCrKAwwBEYvAxbDR_SFfjwVoWmSmrczGjVWQf2MBtHYgP8pFpfFO7c4z_AB2hV-RGqx2MCOH6NMBVYtphmExnAyRAfUZm-40V1GsGFdEPpEqa9VqYDVIlV8z7oF64EYCc56ASmQXtyPb6nIhBxElPukO8dU_nyUspHy0C_6o8bdiIza3fygoEQ/s16000/323624934_697272461888243_8486541144847121539_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLuyZO4vDY-or-RNdmW5CRgEEIEiY94i6g8zd_Q6GUDKKcTvIXVkmWdENEdpXsr0TwI-w7WMeXJQ-0b01n7CHPMPo2JCPD3lhfV4D2Byo2Tc9QZuZwbeFJn-aONecr9QUiH7E5s0z2lZ2H4K-vRysIKc4GOV_ucvMubBHcPdFO4iXCJeCRQdCf4M0Ew/s474/323640339_715440843261927_7229866006163151817_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="474" data-original-width="430" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLuyZO4vDY-or-RNdmW5CRgEEIEiY94i6g8zd_Q6GUDKKcTvIXVkmWdENEdpXsr0TwI-w7WMeXJQ-0b01n7CHPMPo2JCPD3lhfV4D2Byo2Tc9QZuZwbeFJn-aONecr9QUiH7E5s0z2lZ2H4K-vRysIKc4GOV_ucvMubBHcPdFO4iXCJeCRQdCf4M0Ew/s16000/323640339_715440843261927_7229866006163151817_n.jpg" /></a></div><br /><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த செண்டு / துரட்டி வைத்து இடையர் கோனார் யாதவர் பாலர் ஆயர் கோபாலர் மக்கள் ஆடு மாடு களுக்கு இலை தழைகளை பறித்து போடுவார்கள். உயரமான மரங்களில் இருந்து ஆடு மாடுகள் இலை தழைகளை சாப்பிட இயலாது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த செண்டு / துரட்டி அடையாளம் தான் பின்னர் ஏசு கையில் இப்போது போப் ஆண்டவர் கையிலும் உள்ளது. இது யாதவர் இடையர் கோனார் தமிழர் அரசர் வேள் வேளிர் மன்னர் அடையாளம்.</div><div dir="auto"><br /></div><div dir="auto">சிகப்பு புள்ளிகள் மூலம் கொக்கி துரட்டி என்ற பாண்டியர் அரசர் அடையாளம் முத்திரை இந்த படத்தில் சுட்டி காட்ட பட்டு உள்ளது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Sri Nagalakshmi Nagasamy heqa என்று வாசிக்கிறார்கள் இந்த செண்டு குறியை எகிப்து மக்கள். Heqa என்றால் எக்கா. ஏகம். ஏகா. ஏகாதசி. ஏகாம்பரம். ஏகாம்பரம் என்றால் ஒரே ஒரு மாம்பழம். ஏக இறைவன். ஏக அரசன். ஒரே குடைக் கீழ் ஆண்ட மிக பெரிய ராஜன். ஏகாம்பேஸ்வரர் கோவில் .</div><div dir="auto"><br /></div><div dir="auto">Ekadasi is a Sanskrit word derived from the words, Eka means "one" and dasi means "ten," therefore Ekadasi. Ekadasi occurs twice in a month one of the 11th day of shukla paksha and another one on the 11th day of krishna paksha.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இணை கயலும் செண்டும் அமைந்த பாண்டியர் முத்திரையை இலச்சினையாகக் கொண்ட பாண்டியர் செப்பேடு. </div><div dir="auto"><br /></div><div dir="auto">வேள்விக்குடி செப்பேடு.</div><div dir="auto">வட்டெழுத்து. நெடுஞ்சடையப் பராந்தகப் பாண்டியன் வழங்கியது.</div><div dir="auto">காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு. தற்போது இச்செப்பேடு இலண்டன் பிரிட்டிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">காலத்தால் மூத்த பாண்டியர்களின் செப்பேடு தொல்லியல் ஆவணம் இது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">அன்புடன்..</div><div dir="auto">மா.மாரிராஜன்.</div><div dir="auto"><br /></div><div dir="auto">( Ref..</div><div dir="auto">பாண்டியர் வரலாறு.</div><div dir="auto">கே.வி.ராமன்.</div><div dir="auto"><br /></div><div dir="auto">நன்றி..</div><div dir="auto">திரு.பொன்.கார்த்தி.)</div><div dir="auto"><br /></div><div dir="auto">செண்டு என்பது எகிப்து பரோ மன்னர்கள் உபயோகம் செய்த மரம் கிளைகள் கொப்பு ஒடித்து போடும் துரட்டி. கொக்கி. இதன் காரணம் ஆயர்கள் ஆடு மாடு மேய்க்கும் போது மரம் கிளைகள் ஒடித்து போட்டு ஆடு மாடு அந்த மரம் கிளைகள் உண்ண உதவி செய்வார்கள்..... </div><div dir="auto"><br /></div><div dir="auto">நானே நல்ல மேய்ப்பன் என்பது இயேசு கிறிஸ்து வாக்கு. </div><div dir="auto"><br /></div><div dir="auto">ஆயர் ஆயி ஆய்க்குடி இடையர் கோனார் யாதவர் மற்றும் மீனவர் வலையர் முக்குவர் பரதவர் இணைந்து ஏற்படுத்திய அரசு பாண்டியர் அரசு. </div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த பாண்டியர் அரசு சோழர் சேரர் பல்லவர் ஆல் வீழ்த்தப்படவே வேறு வழியின்றி எகிப்து மெசபடோமியா ஓடிப்போய் அங்கு புதிய பாண்டியர் அரசு உருவாக்கினர் தமிழர். </div><div dir="auto"><br /></div><div dir="auto">எகிப்து ராஜாக்கள் பரோ ரமீசிஸ் என்ற பரமேஸ்வரன் கையிலும்</div><div dir="auto">துத்தன் காமன் என்ற பரோ மன்னர் கையிலும்.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">மேலும் பல எகிப்து பரோ மன்னர்கள் கையிலும் இந்த பாண்டியர் அரசு கொக்கி துரட்டி மரம் கிளைகள் கொப்பு ஒடித்து போடும் கருவி காணலாம்.....</div><div dir="auto"><br /></div><div dir="auto">மேரு மலையை செண்டால் அடித்த திருவிளையாடல் புராணம் கூட பாண்டியர் அரசு சின்னம் முத்திரை லச்சினை இந்த கொக்கி துரட்டி யைத்தான் பேசுகிறது......</div><div dir="auto"><br /></div><div dir="auto">Heqa என்ற Egyptian hieroglyphics மற்றும் பாண்டியர் செண்டு மற்றும் தமிழ் ஏகம் ஏகன் ஏகாதசி தொடர்பு.......</div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த கொக்கி துரட்டி முத்திரை பாண்டியர் மீன்கள் இடையே உண்டு. செண்டு என்று பெயர். எகிப்து ஆண்ட தமிழர் எழுதிய ஆதி தமிழ் + சமஸ்கிருதம் என்ற கிரேக்கம் ரோமன் மொழியில் உண்டு.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த செண்டு / துரட்டி வைத்து இடையர் கோனார் யாதவர் பாலர் ஆயர் கோபாலர் மக்கள் ஆடு மாடு களுக்கு இலை தழைகளை பறித்து போடுவார்கள். உயரமான மரங்களில் இருந்து ஆடு மாடுகள் இலை தழைகளை சாப்பிட இயலாது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இந்த செண்டு / துரட்டி அடையாளம் தான் பின்னர் ஏசு கையில் இப்போது போப் ஆண்டவர் கையிலும் உள்ளது. இது யாதவர் இடையர் கோனார் தமிழர் அரசர் வேள் வேளிர் மன்னர் அடையாளம்.</div><div dir="auto"><br /></div><div dir="auto">சிகப்பு புள்ளிகள் மூலம் கொக்கி துரட்டி என்ற பாண்டியர் அரசர் அடையாளம் முத்திரை இந்த படத்தில் சுட்டி காட்ட பட்டு உள்ளது.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Sri Nagalakshmi Nagasamy heqa என்று வாசிக்கிறார்கள் இந்த செண்டு குறியை எகிப்து மக்கள். Heqa என்றால் எக்கா. ஏகம். ஏகா. ஏகாதசி. ஏகாம்பரம். ஏகாம்பரம் என்றால் ஒரே ஒரு மாம்பழம். ஏக இறைவன். ஏக அரசன். ஒரே குடைக் கீழ் ஆண்ட மிக பெரிய ராஜன். ஏகாம்பேஸ்வரர் கோவில் .</div><div dir="auto"><br /></div><div dir="auto">Ekadasi is a Sanskrit word derived from the words, Eka means "one" and dasi means "ten," therefore Ekadasi. Ekadasi occurs twice in a month one of the 11th day of shukla paksha and another one on the 11th day of krishna paksha.</div><div dir="auto"><br /></div><div dir="auto"><br /></div><div dir="auto">Muthu Rajesh Kumar Nallaiah செண்டு என்று தமிழில் சொல்வார்கள். </div><div dir="auto"><br /></div><div dir="auto">எகிப்து நாட்டில் Pharoah என்ற பரதவர் குல மீனவர் தமிழர் கையிலும் அதுவே.</div><div dir="auto"><br /></div><div dir="auto"> Shepherd's crook என்ற இயேசுவின் கையிலும் அதுவே. ரோமன் கத்தோலிக்க போப் ஆண்டவர் கையிலும் அதுவே.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இலை தழைகளை பறித்து போட....ஆடு மாடு சாப்பிட....எளிய கருவி.... துரட்டி....</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-86797917481805401222022-10-12T09:24:00.001+05:302022-10-12T09:24:53.223+05:30Ponniyin Selvan = Subdued Selvan. Subdued Cash Collections. Subdued Box Office. Not Grandiose.<div dir="auto"><div dir="auto">Ponniyin Selvan = Subdued Selvan. </div><div dir="auto">Subdued Cash Collections. </div><div dir="auto">Subdued Box Office. </div><div dir="auto">Not Grandiose. </div><div dir="auto"><br></div><div dir="auto">Advice to Producer Lyca Subashkaran = </div><div dir="auto">Make Payment to Rajamouli instead of ManiRatnam to</div><div dir="auto">Show (imagined) Grandeur of Chozha Dynasty. </div><div dir="auto"><br></div><div dir="auto">Went to see Ponniyin Selvan at Galaxy Theater Katpady Vellore. </div><div dir="auto">Rs130/- ticket. </div><div dir="auto"><br></div><div dir="auto">Near Vellore Institute of Technology VIT there is INOX. They ask Rs190 for same movie. </div><div dir="auto"><br></div><div dir="auto">INOX Mall didn't have Ponniyin Selvan poster. </div><div dir="auto"><br></div><div dir="auto">I asked them, they said they can't keep the wall poster of Ponniyin Selvan. </div><div dir="auto"><br></div><div dir="auto">Something fishy. </div><div dir="auto"><br></div><div dir="auto">So i moved to Galaxy Theater. </div><div dir="auto">Dolby Atmos. </div><div dir="auto">Cube Sound. </div><div dir="auto">Somewhat ok. </div><div dir="auto">Not the best like PVR Cinemas Katpadi Silkmill Vellore. </div><div dir="auto"><br></div><div dir="auto">ManiRatnam wanted to show Authentic 800AD to 1100AD.</div><div dir="auto"><br></div><div dir="auto">Movie Making, Movie Watching doesn't believe in Authentic Picturisation. </div><div dir="auto"><br></div><div dir="auto">Movie Goers love Grandiosity. </div><div dir="auto">Grandeur. </div><div dir="auto"><br></div><div dir="auto">If ManiRatnam believes Authentic Movie can win Audience, why he went to Rajasthan to show Aryan Forts, Citadels? to tell subdued Dravidian Tamil Empiredom? </div><div dir="auto"><br></div><div dir="auto">Dravidian Tamil Kingdoms were never Grandiose. </div><div dir="auto"><br></div><div dir="auto">Dravidian Tamil Kings never built big Forts, Palaces, Citadels like Aryans. </div><div dir="auto"><br></div><div dir="auto">Most of the Dravidian Tamil Rulers lived among the people, lived very down to earth, distributed power & wealth by Panchayati Raj system. </div><div dir="auto"><br></div><div dir="auto">Whereas Aryan Supremacy even today believes in Centralisation, opulent lifestyle. </div><div dir="auto"><br></div><div dir="auto">Like EVR Periyar said, Tamils Dravidians lived close to Primate Life, Kattumirandi, Brute Force lifestyle which is totally 180 degrees opposite to Aryan Supremacy lifestyle. </div><div dir="auto"><br></div><div dir="auto">Devaraalan Aattam and Painted Body Dance of Vandhiyathdevan further fortifies EVR Periyar ultimatum on Tamils = the Blunt Force Kattumirandi koottam. </div><div dir="auto"><br></div><div dir="auto">Alwarkkadiyan, Vandhiyathdevan both are shown spies, government agents who don't even have proper dress, proper TA DA allowances, proper transportation , proper food. </div><div dir="auto"><br></div><div dir="auto">ArunMozhiThevan doesn't have proper security. At Sri Lanka he is approached by Five groups of Emissaries who want to HiJack the future Fate, future History of Chozha Dynasty to suit their needs. </div><div dir="auto"><br></div><div dir="auto">Group1 = Adiththa Karikalan sends Vandhiyathdevan who insists that ArunMozhiThevan remains at Sri Lanka. (Some vested interests of Adiththa Karikalan?) </div><div dir="auto"><br></div><div dir="auto">Group2 = Kunthavai and Vandhiyathdevan who wants ArunMozhiThevan to come to Tanjore. </div><div dir="auto"><br></div><div dir="auto">Group3 = Periya PazhuVettaraiyar who wants to Arrest ArunMozhiThevan and kill him or Jail him. </div><div dir="auto"><br></div><div dir="auto">Group4 = Same Adiththa Karikalan who sends another Emissary Parthibendra Pallavan to get ArunMozhiThevan to Tanjore or Kaanjipuram. </div><div dir="auto"><br></div><div dir="auto">Group5 = Paandiyan Aabaththu Udhavigal (Bouncers, Body Guards) who want to kill ArunMozhiThevan at Sri Lanka itself. They are paid, helped and supported by Nandhini. </div><div dir="auto"><br></div><div dir="auto">Out of all these above 5 Groups, only one Group Paandiyan Aabaththu Udhavigal has a Clear Mandate = Kill Chozha Dynasty Son ArunMozhiThevan and try to install Pandiyan Glory Kingdom. </div><div dir="auto"><br></div><div dir="auto">Rest all three Groups are nonchalant, subdued, vested interests people who are just watching the drama unfold. </div><div dir="auto"><br></div><div dir="auto">I am astonished why such a Great Chozha Dynasty doesn't have proper Body Guards Bouncers Protectors SPG Special Protection Group, Z+ Security for ArunMozhiThevan! </div><div dir="auto"><br></div><div dir="auto">Kalki Krishnamoorthy and ManiRatnam shows one Apalai Destitute Oomai Raani Dumb Old Woman and Samuthra Kumari Poonguzhali the Boat Woman again and again saves ArunMozhiThevan who is the scion of the Great Chozha Empire. </div><div dir="auto"><br></div><div dir="auto">This is the Major Weakness of Ponniyin Selvan, a weak, subdued Dravidian Tamil point of view which can never attain the Dreams of Aryan Supremacy. Global Power. One World Government. Centralisation. New World Order. Illuminati. White Supremacy. 007 James Bond, MI6, British, English Vision of the World. </div><div dir="auto"><br></div><div dir="auto">A Great Power needs Great Protection. SPG. Z+ Security. </div><div dir="auto"><br></div><div dir="auto">Which Mr. ArunMozhiThevan lacks. </div><div dir="auto"><br></div><div dir="auto">He is left to God & two Apalai Pengal (Oomai Raani and Boat Woman Samuthra Kumari Poonguzhali) to save him. </div><div dir="auto"><br></div><div dir="auto">Pathetic scenario. </div><div dir="auto"><br></div><div dir="auto">My Advice = Tamils Dravidians Indians Aryans all must forget our Bow and Arrow, Sword past. </div><div dir="auto"><br></div><div dir="auto">Indians must forget Varna System, Caste, Manu Smirthi, Ramayanam, Mahabharatam. </div><div dir="auto"><br></div><div dir="auto">Indians must see what is happening at Ukrain, Russia, China, Japan, Germany, USA. </div><div dir="auto"><br></div><div dir="auto">China, USA are better equipped, they have latest weapons. </div><div dir="auto"><br></div><div dir="auto">Indians must modernise. </div><div dir="auto"><br></div><div dir="auto">All these Bahubali, PS1, KGF, Vikram cannot keep India in ancient glory. </div><div dir="auto"><br></div><div dir="auto">Indians need Guns, Machine Guns, AK47, Aircraft, Ships, </div><div dir="auto">Rafale, SU30, Missiles, Satellites, Drones, UAVs, Submarines, Aircraft Carriers, Fighter Jets, Attack Helicopters, Nuclear Bomb, Hydrogen Bomb.... All latest state of the Art warfare. </div><div dir="auto"><br></div><div dir="auto">I am least attracted by PS1 or Bahubali. </div><div dir="auto"><br></div><div dir="auto">Both are subdued sub standard past glory of India. </div><div dir="auto"><br></div><div dir="auto">See China, USA, Russia. </div><div dir="auto"><br></div><div dir="auto">Raise to the highest Military Prowess of Super Powers. </div><div dir="auto"><br></div><div dir="auto">Then only India can progress. </div><div dir="auto"><br></div><div dir="auto">Otherwise we are doomed. </div><div dir="auto">Otherwise India may be colonized again. </div><div dir="auto"><br></div><div dir="auto">Verdict = Ponniyin Selvan. </div><div dir="auto">Pauper Selvan. </div><div dir="auto"><br></div><div dir="auto"><br></div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-70870620063400753972022-09-28T15:36:00.001+05:302022-09-28T15:36:34.399+05:30Tirupati Temple Visit. Hotel Rooms. Mutt.<div dir="auto">திருப்பதி திருமலையில் தங்குவதற்கு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். <div dir="auto">கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.நவீன ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன</div><div dir="auto"><br></div><div dir="auto">திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது. ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு நபருக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.</div><div dir="auto"><br></div><div dir="auto">Tirumala Sri Kasimath,</div><div dir="auto">Ring road, Near S.V.Meseum,</div><div dir="auto">Tirumala - 517507 (A.P)</div><div dir="auto">Ph : 0877-2277316</div><div dir="auto">.</div><div dir="auto">மூல் மட் மின்: +918772277499 0877-2277499.</div><div dir="auto">புஷ்பா மண்டபம் : 0877-2277301.</div><div dir="auto">ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.</div><div dir="auto">உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.</div><div dir="auto">ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.</div><div dir="auto">ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.</div><div dir="auto">ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை </div><div dir="auto">Ph: 0877-2277282.</div><div dir="auto">ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் </div><div dir="auto">Ph : 0877-2277370.</div><div dir="auto">ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.</div><div dir="auto">ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.</div><div dir="auto">உடுப்பி மட் Ph-0877-2277305.</div><div dir="auto">ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.</div><div dir="auto">ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.</div><div dir="auto">ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன </div><div dir="auto">ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.</div><div dir="auto">ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்</div><div dir="auto">Ph: 0877-2277269, 2279435.</div><div dir="auto">ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.</div><div dir="auto">ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316</div><div dir="auto">உடுபி மட் பி: 0877 222 77305</div><div dir="auto">ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)</div><div dir="auto">ஸ்ரீ காஞ்சி காமகோடி </div><div dir="auto">பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , </div><div dir="auto">Ph : 0877 222 77370</div><div dir="auto">ஸ்ரீ வல்லபச்சரிய மடம் </div><div dir="auto">தொலைபேசி: 222 77317</div><div dir="auto">மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302</div><div dir="auto">ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி</div><div dir="auto">Ph : 0877 222 77436</div><div dir="auto">ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி </div><div dir="auto">ஆதித்யான் ஆஷ்ரம் </div><div dir="auto">Ph : 0877 222 77826</div><div dir="auto">ஸ்ரீ வைகநாத ஆசிரமம்</div><div dir="auto">Ph : 0877 222 77282</div><div dir="auto">ஸ்ரீ அஹோபில மட் </div><div dir="auto">Ph : 0877-2279440</div><div dir="auto">ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269</div><div dir="auto">ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445</div><div dir="auto">ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784</div><div dir="auto">ஸ்ரீ சீனிவாச சொல்ரி </div><div dir="auto">Ph : 0877 222 77883</div><div dir="auto">ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் </div><div dir="auto">Ph : 0877 222 77240</div><div dir="auto">கர்நாடகா விருந்தினர் </div><div dir="auto">மாளிகை </div><div dir="auto">Ph : 0877 222 77238</div><div dir="auto">தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் </div><div dir="auto">அறநெறிகள் </div><div dir="auto">Ph : 0877 222 77245</div><div dir="auto">ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் </div><div dir="auto">Ph : 0877 222 79435</div><div dir="auto">ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015</div><div dir="auto"><br></div><div dir="auto">வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.</div><div dir="auto">65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?</div><div dir="auto">நிபந்தனைகள் :</div><div dir="auto">******</div><div dir="auto">1) ஆதார் அட்டை அவசியம்.</div><div dir="auto">2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்</div><div dir="auto">3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.</div><div dir="auto">4) காலை 10 மணி முதல் </div><div dir="auto">மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.</div><div dir="auto">5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.</div><div dir="auto">6.) உதவி செய்வதெற்கென </div><div dir="auto">உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவருக்கு ஆதார் அவசியம்.</div><div dir="auto">7) காலை உணவு பால் இலவசம்.</div><div dir="auto">8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.</div><div dir="auto">9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.</div><div dir="auto">10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ! </div><div dir="auto"><br></div><div dir="auto">நன்றி .. முத்தழகப்பன் ராமசாமி</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-8909877541310278732022-09-26T11:47:00.001+05:302022-09-26T12:06:29.193+05:30Va Vaa Vi Vee Vae Vaey Vai Vo Vao Vow Vak the Soul Root of all V words which can call Gods Devatas Aliens Angels to do our work. Give Food Clothes to God who did your work.<div dir="auto"><div dir="auto">Bageswari Raju </div><div dir="auto">BK Kana Gopal </div><div dir="auto"><br /></div><div dir="auto">Vyaktam and Avyaktam = Bagawat Gita greatly explains all manifest things Vyaktam on Earth which we can touch, see, interact are born from unmanifest things Avyaktam. </div><div dir="auto"><br /></div><div dir="auto">After death all living things on Earth too reaches the Avyaktam Maaya State. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus Vedham Vithai Viththu Vithi Vithyai Vidya Vidhyai all came from one source. </div><div dir="auto"><br /></div><div dir="auto">In fact Bagawat Gita is known as Vedha Saaram. Juice of all four Vedhas are found in condensed form in Bagawat Gita. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Saaramsam of Four Vedhams is Bagawat Gita.</div><div dir="auto"><br /></div><div dir="auto">The Tamil Word </div><div dir="auto">Va</div><div dir="auto">Vaa</div><div dir="auto">Vi</div><div dir="auto">Vee</div><div dir="auto">Vae</div><div dir="auto">Vaey</div><div dir="auto">Vu</div><div dir="auto">Voo</div><div dir="auto">Vow</div><div dir="auto">Vak</div><div dir="auto">All are inter related. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Soul of this word is Va. Vaa. </div><div dir="auto"><br /></div><div dir="auto">From this Root Soul word all other pronunciations are born. </div><div dir="auto"><br /></div><div dir="auto">By knowing, understanding Four Vedhas we can call Devars Gods Angels by Command. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Vaa Vaa... This is humans calling Extra Terrestrial Angels Aliens Gods by our pronunciation of four Vedhas Mantrams Arputha Thevara Thiruppathikangal. </div><div dir="auto"><br /></div><div dir="auto">We can call the Gods. </div><div dir="auto">We can Demand and Command the Gods to do our desired work. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Of course we must satisfy Gods Devatas after they have done our desired work. This satisfaction to Gods Devatas are given by food, yagnya, yagam, Vezhvi etc.</div><div dir="auto"><br /></div><div dir="auto">சப்தாகர்ஷிணி மந்திரம்:</div><div dir="auto">ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய</div><div dir="auto">சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய</div><div dir="auto">வா வா ஸ்வாஹா</div><div dir="auto"><br /></div><div dir="auto">Va Vaa Vi Vee Vu Voo Ve Vae all these words also linked with A, Aa, e, ee, u, uu, ae, ae, o, ow, ak. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Means all body words Meyyezhuthu gets Aatma Life from Soul Uyir Ezuthu..... </div><div dir="auto"><br /></div><div dir="auto">You are discussing only Body Words Meyyezhuthu. </div><div dir="auto"><br /></div><div dir="auto">You must also add the Uyirezhuthu Soul Aatma to the body words then only whole concept will be known.</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-84446172778051051272022-09-26T11:20:00.000+05:302022-09-26T20:51:44.622+05:30Vedham Vithai Viththu Vithi Vithyai Vidya<div dir="auto">Bageswari Raju <div dir="auto">BK Kana Gopal </div><div dir="auto"><br /></div><div dir="auto">Viththu = seed. </div><div dir="auto">Any thought is a seed. </div><div dir="auto">From consciousness all what we see and touch are born. </div><div dir="auto">A building is first visualised on mind and drawn as a plan on a paper called layout, elevation and finally made as a physical structure entity by working class. </div><div dir="auto"><br /></div><div dir="auto">The Chief Architect Or Sthapathi Or Vishwakarma Or Maayan Mayan Ashuran were all Mind Workers. They visualise many building temple concepts on their mind, draw it on paper, execute it on stone wood metal sand on Earth which lives for 1000s of years. </div><div dir="auto"><br /></div><div dir="auto">That's why four vedhas and bagavat gita insisted on varna system. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Viththu, Vithi are root words for Vedh Vedham. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Viththu seed concept conceptualization of mind already explained. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Vithi means law. If we observe Nature we see so many events happen by Natural Law. </div><div dir="auto"><br /></div><div dir="auto">For example if we care for a Coconut Tree that will give us good produce. </div><div dir="auto"><br /></div><div dir="auto">If we care our sons, daughters they will look after us during our old age. </div><div dir="auto"><br /></div><div dir="auto">These are all Natural Laws. Vithis. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus, Viththu and Vithis are explained in philosophical literature the 4 Vedhas. </div><div dir="auto"><br /></div><div dir="auto">It's needed to educate the evolution of humanity. Otherwise lawless land will destroy culture, state, peaceful society. </div><div dir="auto"><br /></div><div dir="auto">We can boldly conclude four vedhas, Ramayanam, Mahabharatam and so many other books of India were all suggested Law Books, Constitutional scriptures, Dharma Shastrams. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Without these above Humanity cannot evolve as a Humane Society. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Bible too is a Law Book. </div><div dir="auto">Bible gives importance to forgiveness. </div><div dir="auto">Repentence of Sin.</div><div dir="auto"><br /></div><div dir="auto">Viththu, Vithi, Vidhyai, Vedham are all related words. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Vidya Vidhyai education comes from seed of concepts. Vedham. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus, Vedham is also Vidhyai. </div><div dir="auto">Vidya. </div><div dir="auto">Viththai. </div><div dir="auto">Kan Kattu Viththai. </div><div dir="auto">MaayaJaalam. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Any Human Being, if he is well versed in Scriptures, he can become a magician. He can create Miracles by reciting Holy Mantrams. Chants. </div><div dir="auto"><br /></div><div dir="auto">This is proved one. </div><div dir="auto">Saint ThiruGyanaSambandar</div><div dir="auto">Saint ThiruNavukkarasarAppar</div><div dir="auto">Saint SundaraMoorthyNaayanaar</div><div dir="auto">Saint MaanikkaVasagar</div><div dir="auto"><br /></div><div dir="auto">Were all able to Cause Miracles</div><div dir="auto">Magics</div><div dir="auto">During their lifetime by extreme devotion to God Shiva. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Arputha Thevara Thiruppathikangal even today creates Magics Miracles if we believe in them, recite them with full devotion. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Thus, Viththai, Vithya, Viththu, Vithai are all root words for Vedham. </div><div dir="auto"><br /></div><div dir="auto">Without Vedham, Vithai, Viththu, Vithya even the whole universe cannot exist.</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-16031785114825950112022-09-24T17:19:00.000+05:302022-09-24T17:20:11.529+05:30LHC Large Hadron Collider is a Military Machine. It can cause Quake, Tsunami, Volcano Eruption, Landslides, Cloudbursts, Arctic Ice Galcier Breakages... National Calamities. NATO can kill Tens of Thousands of people without evidence.<div dir="auto">From year 2014 I am writing about Large Hadron Collider Particle Accelerator at CERN Europe. LHC is a Military Machine. Capable of causing Quake, Volcanoe Eruptions, Tsunami, Cloud Burst, Landslides, Arctic Ice Glacier Breakages etc. <div dir="auto"><br></div><div dir="auto">LHC caused Nepal Earth Quake in year 2015.</div><div dir="auto"><br></div><div dir="auto">LHC caused Bangalore Cloud Burst recently. </div><div dir="auto"><br></div><div dir="auto">LHC caused Kerala Cloud Bursts past 2 years. </div><div dir="auto"><br></div><div dir="auto">Large Hadron Collider Particle Accelerator sends Trillions of Neutrinos on to the lattitude, longitude of Tectonic Plates where Fault Lines were already present. Quake Prone zones of Earth can be easily targetted by LHC Machine to create Man Made Quakes. </div><div dir="auto"><br></div><div dir="auto">It is a Military Machine where European NATO countries can kill thousands of people or Lakhs of people without evidence. </div><div dir="auto"><br></div><div dir="auto">Third World War already going on all over the World in the form of Corona Virus, Quakes, Volcano Eruptions, Landslides, Cloudbursts. </div><div dir="auto"><br></div><div dir="auto">Ignorant Nations other than NATO....are targets of all these atrocities. </div><div dir="auto"><br></div><div dir="auto">Nations other than NATO should co-relate the events of LHC operation and National Calamities. </div><div dir="auto"><br></div><div dir="auto">Nations other than the NATO should send Complaint Petition at United Nations, UNICEF, WWF etc to Stop the nonsense work of LHC. </div><div dir="auto"><br></div><div dir="auto">Then only NATO and it's deadly weapons like Corona Virus, LHC machine will stop. </div><div dir="auto"><br></div><div dir="auto">Otherwise we are all Third Word Developing Countries people...Sitting Ducks, Zombies. NATO will simply enjoy killing for their Business Motives.</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-55253472805449207002022-09-24T15:44:00.001+05:302022-09-24T15:44:43.450+05:30Vahanams Vahans Vehicles of Hindu Gods = A Study of Oraiyan Orion Aryan Devars imposition of Sanatana Dharma on Enemy Nations.<p>இந்திய கடவுள்களின் உருவப்படம் மற்றும் அவர்களின் வாகனங்கள் (வாகனம்).</p><p><br /></p><p>2012 ஆம் ஆண்டிலிருந்து பசுபதி, இந்தியக் கடவுள்களின் உருவப்படம், குறிப்பாக அவர்களின் வாகனங்கள் வாகனங்கள், கொள்கைப் பிரச்சாரம், மதப் பிரச்சாரம், பிரச்சார வாகனங்கள், மதமாற்றக் கருத்து, எதிரி தேசத்தை உருவாக்குதல், எதிரி ராஜா, எதிரி நாடு மக்கள் வெற்றி நாட்டு மன்னர்கள் மற்றும் அவர்களின் மக்களைப் பின்பற்றி வெற்றியாளர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். .</p><p><br /></p><p>கடவுள்களின் வாகனங்கள் உண்மையில் எதிரி ராஜ்யத்திற்கு ஓரியன் ஓரியன் ஆரிய வாழ்க்கை முறையை பரப்புகின்றன.</p><p><br /></p><p>குடிமல்லம் வேட்டைக்காரன் சிவன் பழங்குடி பட்டியல் பழங்குடி தலைவர்களின் தோளில் நிற்பது இந்து உருவப்படத்தின் தொடக்கமாக இருக்கலாம்.</p><p><br /></p><p>வெற்றியாளர் நாடு பொதுவாக அதன் கொள்கைகள், மொழி, நாணயம், சிந்தனை அமைப்புகள், கலாச்சாரம் ஆகியவற்றை தளர்வான நாட்டிற்கு கட்டாயப்படுத்துகிறது.</p><p><br /></p><p>இன்றும் ரஷ்யா, ஈராக், லிபியா, ஈரான், சீனா, வெனிசுலா, கியூபா போன்ற நேட்டோ நாடுகளின் நிலை இதுதான்.</p><p><br /></p><p>இவ்வாறு சிவனின் ரிஷபம் காளை நந்தி வாகனம், நந்தர் வம்சம், நந்தன் மன்னர்கள், நந்தி, நந்தினி, புத்த நந்தி, போதி நந்தி புத்த புத்த மக்கள் மீது இந்துக்களின் போர் வெற்றியை வியக்கத்தக்க வகையில் குறிக்கிறது.</p><p><br /></p><p>மணிரத்னத்தின் சமீபத்திய படம் கூட நந்தினி சோழ சைவ சைவ மன்னர்களுக்கு எதிராக சதி செய்வதைக் காட்டுகிறது. அவள் எதிரி நாடுகளிடமிருந்து போரில் பரிசு பெற்றவளாக இருக்கலாம். அவளுடைய பெற்றோர் பெயர் தெரியவில்லை. அவள் வெற்றி நாட்டு மன்னர்களால் பாலியல் அடிமையாக பயன்படுத்தப்படுகிறாள்.</p><p><br /></p><p>நந்த நந்தர் வம்சத்தினர் புத்தபெருமானின் உறவினர்கள். புத்த பகவான் இந்து குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளத்தில் இன்றும் நந்தி காயஸ்த சாதி உள்ளது. அவர்கள் முன்பு இந்துக்கள் இல்லை. அவர்கள் பலவந்தமாக இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.</p><p><br /></p><p>சனாதன தர்மம் என்றால் பிரம்மா விஷ்ணு சிவன் மும்மூர்த்திகளின் திருவுருவத்தை கேள்விக்குட்படுத்தும் எந்த ஒரு மதமும் இந்துக்களால் ஆரிய பிராமணியத்தால் பயமுறுத்தப்படும், மற்ற எதிரி மக்கள், எதிரி நாட்டு சிந்தனை அமைப்புகளை விட தர்மம் மேலோங்கும்.</p><p><br /></p><p>அதனால்தான் இந்த முறை நரேந்திர மோடிஜி, அமித்ஷாஜி, யோகி ஆதித்யநாத் ஜி, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் இந்தியா முழுவதும் தொடங்கி, உலகம் முழுவதும் சனாதன தர்மத்தை திணிக்க தெளிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.</p><p><br /></p><p><br /></p><p>Iconography of Indian Gods and their Vehicles (Vahanams). </p><p><br /></p><p>Pasupathi from year 2012 postulated that the iconography of Indian Gods especially their Vahanams Vahans Vehicles are Policy Propagation, Ism Propagation, Propaganda Vehicles, Conversion Concept, Making the Enemy Nation, Enemy King, Enemy Country People follow and accept winner country Kings and their peoples siddhantham. </p><p><br /></p><p>Vehicles of Gods are actually the propagation of Oraiyan Orion Aryan way of life on to the enemy kingdom. </p><p><br /></p><p>Gudimallam Hunter Shiva standing on the Tribal Scheduled Tribe Headmans shoulder may be the start of Hindu Iconography. </p><p><br /></p><p>Winner Country usually compels its policies, language, currency, thought systems, culture on to the looser country. </p><p><br /></p><p>Even today this is the state of affairs by NATO countries on Russia, Iraq, Libya, Iran, China, Venezuela, Cuba etc. </p><p><br /></p><p>Thus the Rishabam Bull Nandi vehicle of Shiva is astonishingly indicates War Victory of Hindus over Nandar Dynasty, Nandan Kings, Nandi, Nandhini, Buddha Nandi, Bodhi Nandhi Buddha Buddhist people by Hindu Shiva. </p><p><br /></p><p>Even the latest film by Mani Rathnam shows Nandini plotting against Chola Saivaite Saivism Kings. She may be war won prize from enemy nations. Her parents name not known. She is used as a Sex Slave by winner country Kings. </p><p><br /></p><p>Nanda Nandar Dynasty were relatives of Lord Buddha. It is interesting to note that Lord Buddha himself came from Hindu Family. Nandi Kayastha caste still available at Bengal today. They were not Hindus earlier. They were converted to Hinduism by Force. </p><p><br /></p><p>Sanatana Dharma means any ism which questions the Lordship of Brahma Vishnu Shiva Trinity Oraiyan Orion Aryan Brahminism will be subjugated by the Hindus and Dharma will prevail over the other enemy people, enemy country thought systems. </p><p><br /></p><p>That is why this time Narendra ModiJi, AmithShahJi, Yogi Aadityanath Ji, BJP, RSS have taken clear steps towards imposing Sanatana Dharma on all over world, starting with all over India first.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3BoYuxsT9Fb1HNgOXH9gwKt5-CoFbnC5wnAKxKWyfLzatKghi73PTBl-qmLETFGBzsLa_BIclGPzyD7o0wPi_XzFVsddrl64pOx0Sy0AMt0m9FMq1YJwlvq8YUASMR6Y-j7dYX2jhOk4z0u3zqYyS96gw3Xwi8MPZEXrHjpWmiwwbPcgBzd3JCx9lOQ/s680/images%20(49).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="680" data-original-width="451" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3BoYuxsT9Fb1HNgOXH9gwKt5-CoFbnC5wnAKxKWyfLzatKghi73PTBl-qmLETFGBzsLa_BIclGPzyD7o0wPi_XzFVsddrl64pOx0Sy0AMt0m9FMq1YJwlvq8YUASMR6Y-j7dYX2jhOk4z0u3zqYyS96gw3Xwi8MPZEXrHjpWmiwwbPcgBzd3JCx9lOQ/s320/images%20(49).jpeg" width="212" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZIFaDVKODZ4v7rNVusGTzt1XWqpF-rfuuzPILEU9I5bo7D1HDnSgZynQoYrGEMu2DoHJtjDKONGgB4Z8tHLNOd5Rntcd-E-moLC_zVwbZl6RIA5pMh2GMe6n2u2HCK7CfH6G-xwmLr_hlFImp_pQ5z25nc0dhnmm8Gphx3tYjybte_72jLZSyPy0FQ/s713/images%20(55).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="713" data-original-width="430" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZIFaDVKODZ4v7rNVusGTzt1XWqpF-rfuuzPILEU9I5bo7D1HDnSgZynQoYrGEMu2DoHJtjDKONGgB4Z8tHLNOd5Rntcd-E-moLC_zVwbZl6RIA5pMh2GMe6n2u2HCK7CfH6G-xwmLr_hlFImp_pQ5z25nc0dhnmm8Gphx3tYjybte_72jLZSyPy0FQ/s320/images%20(55).jpeg" width="193" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJEpF0QWfEC3yr82SzHOwUmrSMmNtBFK3XMcaIdFz3e4fDiGu_kwJ21D5muY1YAKpI4EfUMEgSD2WFz4vW0S-ad3wPO3qKecQ-_TvxoCIfxUnotK_ra2Bhywc20H74NKESvePxRdQgpv_fP4Ip9GwPppD-lRsG4DsdfV-cnKdnQYopi0qyuXZ3j6qbhQ/s693/images%20(56).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="693" data-original-width="443" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJEpF0QWfEC3yr82SzHOwUmrSMmNtBFK3XMcaIdFz3e4fDiGu_kwJ21D5muY1YAKpI4EfUMEgSD2WFz4vW0S-ad3wPO3qKecQ-_TvxoCIfxUnotK_ra2Bhywc20H74NKESvePxRdQgpv_fP4Ip9GwPppD-lRsG4DsdfV-cnKdnQYopi0qyuXZ3j6qbhQ/s320/images%20(56).jpeg" width="205" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEj0izPI2EY2nerAuqqLc6yr9vBbYtO3_0EMu9vQJxa-Wn4pFPxMlfJjWiWM6izvoAahcn0GElhS9IG0VjSWY8XktqESYSDAUfGsbV2c4FUGIS6vcvOS_YOMdqO9wwX69tDukyRHMpEqGsvpOILX7l7yfRcMW5Wc3HF6tfcAEvUHXOl8sj-Fus806lA/s1279/Screenshot_2022-09-23-19-55-16-729_com.facebook.katana.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1279" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEj0izPI2EY2nerAuqqLc6yr9vBbYtO3_0EMu9vQJxa-Wn4pFPxMlfJjWiWM6izvoAahcn0GElhS9IG0VjSWY8XktqESYSDAUfGsbV2c4FUGIS6vcvOS_YOMdqO9wwX69tDukyRHMpEqGsvpOILX7l7yfRcMW5Wc3HF6tfcAEvUHXOl8sj-Fus806lA/s320/Screenshot_2022-09-23-19-55-16-729_com.facebook.katana.jpg" width="180" /></a></div><br /><p><br /></p>Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-51772618652744245932022-09-22T18:26:00.000+05:302022-09-26T15:06:13.074+05:30Ravanan BC5000 Neptune Maandhi Son of Shani Neptune has Ring like Saturn. Call it DNA? Like Father Shani son Neptune Maandhi too has a Ring. Incredible Ramayanam Ravanan know this. Ravanan had infra red view like NASA James Webb Telescope?<p class="mobile-photo"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg3cHYwpJB50h7DFs9KX0VI-sujKpV_-wDccBKWE-YKKQTTDU5tiMG1ZO6ELu6LGqfgChivoipHFDAPnvTs-5YmWSDY2NaB1_EevKWvPTx_yIf-cct7Xua3CuIliAgnG5HFMI9tefJZ5frsrLQRjc22ZL6boPF2-TFvXxwV6OVBiyfI_cv3ozqNcdanug"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_7146187500048211410" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg3cHYwpJB50h7DFs9KX0VI-sujKpV_-wDccBKWE-YKKQTTDU5tiMG1ZO6ELu6LGqfgChivoipHFDAPnvTs-5YmWSDY2NaB1_EevKWvPTx_yIf-cct7Xua3CuIliAgnG5HFMI9tefJZ5frsrLQRjc22ZL6boPF2-TFvXxwV6OVBiyfI_cv3ozqNcdanug=s320" /></a></p><div dir="auto">Ravanan BC5000 Neptune Maandhi Son of Shani Neptune has Ring like Saturn. Call it DNA? Like Father Shani son Neptune Maandhi too has a Ring. Incredible Ramayanam Ravanan know this. Ravanan had infra red view like NASA James Webb Telescope? <div dir="auto"><br /></div><div dir="auto">கிமு5000 ராவணன் புலத்தியர் பேரன். புலத்தியர் தமிழர். ராவணன் தமிழர். 10 நாடுகள் ஆண்டதால் 10 தலை ராவணன். இவர் தனக்கு பிறக்கப் போகும் மகன் சாவே இல்லாமல் பல போர் வெற்றிகள் கொண்டு பல ஐஸ்வரியங்கள் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக அனைத்து 9 நவ கிரகங்களையும் ஜோதிட விதிப்படி நலம் பயக்கும் வீடான 11 ஆம் வீட்டில் நிற்கச் சொன்னான். கேட்காவிட்டால் 9 நவ கிரகங்களையும் இலங்கை சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகவும் கதை உண்டு. 9 நவ கிரகங்களையும் தன் அரண்மனை படிக்கட்டாக மாற்றி போட்டு அதை மிதித்து நடந்தான் ராவணன் என்றும் கதை உண்டு. அப்படி படிக்கல்லாக போட்ட போது சனி கிரகம் ராவணனை தன் கொடூரப்பார்வையால் பார்க்கவே ராவணன் ஒழிந்தான் என்றும் சொல்வார்கள். <div dir="auto">அனைத்து 9 நவ கிரகங்களையும் 11 ஆம் வீட்டில் சிறைப்படுத்தி நிறுத்திய ராவணனை பழிவாங்க சனி சரியாக ராவணன் மகன் மேகநாதன் என்ற இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் மிகச்சரியாக தனது காலை நீட்டி 12 ஆம் வீட்டில் வைத்து பழி வாங்கினாராம்.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">அதைக் கண்டதும் கோபம் அடைந்த ராவணன் உடனே தன் வாளை எடுத்து சனியின் நீட்டிய காலை வெட்டினாராம்.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">அப்படி வெட்டப்பட்டு துண்டான சனியின் உடல் பாகம் தான் சனியின் மைந்தன் சனி மகன் மாந்தி. </div><div dir="auto"><br /></div><div dir="auto">மாந்தி இருக்கும் இடம் பார்த்து தான் கேரளா ஜோதிடர்கள் முக்கியமான ஜாதக ஜோதிடம் குறிப்புகள் சொல்லுவார்கள். </div><div dir="auto"><br /></div><div dir="auto">இதனால் கேரளா மாந்திரீகம் கேரளா மாந்திரீகர்கள் என்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றார்கள் இவர்கள்..... </div><div dir="auto"><br /></div><div dir="auto">வெட்டப்பட்ட கால் சனியின் கால் துண்டாகி 12 ஆம் வீட்டில் விழாமல் லக்னம் என்னும் 1 ஆம் வீட்டில் விழுந்ததாம்.</div><div dir="auto"><br /></div><div dir="auto">இதனால் தான் அற்ப ஆயுளில் ராவணன் மகன் மேகநாதன் என்ற இந்திரஜித் ராமாயணம் போரில் செத்து போனாராம்.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">லக்னத்தில் மாந்தி = அல்பாயுசு. அற்ப ஆயுள் என்பது சாஸ்திரம். </div><div dir="auto"><br /></div><div dir="auto">ஆகவே நமது மூதாதையர்கள் எவ்வளவு அழகாக துல்லியமாக சிறப்பாக சனியின் மகன் மாந்தி என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள்? </div><div dir="auto"><br /></div><div dir="auto">அவர்களுக்கு எவ்வளவு கடவுள் சக்தி கண் பார்வை ஞான திருஷ்டி இன்ப்ராரெட் ரே அகச்சிவப்பு கதிர் பார்வை இருந்து உள்ளது? </div><div dir="auto"><br /></div><div dir="auto">இன்று காலை நாசா விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த இன்ப்ராரெட் ரே என்ற அகச்சிவப்பு கதிர் புகைப்படம் வாயிலாக நெப்டியூன் கோள் சனியை போன்றே வளையத்துடன் இருக்கும் புகைப்படம் பார்த்தோம். </div><div dir="auto"><br /></div><div dir="auto">தகப்பன் போலவே மகன். அங்க அடையாளம் உள்ளது. </div><div dir="auto">சனிக்கும் வளையம் உண்டு. சனி மகன் மாந்தி என்ற நெப்டியூன் க்கும் வளையம் உள்ளது.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">கிமு 5000 ராமாயணம் காலத்தில் சொல்லப்பட்ட எழுதப்பட்ட இந்த நெப்டியூன் என்று அழைக்கப்படும் மாந்தி சனி மகன் தன் தகப்பன் போலவே வளையம் கொண்டு உள்ளார்.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">டிஎன்ஏ குரோமோசோம் செய்த செயல் என்று சொல்லலாமா?... </div><div dir="auto"><br /></div><div dir="auto">2022 கிபி இன்று வரை அதை வெள்ளையர்கள் ஐரோப்பியர்கள் நம்பவில்லை சொல்லவில்லை எழுதவில்லை.... </div><div dir="auto"><br /></div><div dir="auto">ஆகவே யார் உயர்ந்தவர்கள்? </div><div dir="auto">யார் பழமையானவர்கள்?</div><div dir="auto">யார் அறிவாளிகள்? </div><div dir="auto"><br /></div><div dir="auto">சந்தேகம் இன்றி தமிழர்கள் இந்தியர்கள் இந்துக்கள் சனாதன தர்மம் ஆரியர்கள் ஓரியன் ஓரையன் ஓரை பார்த்து நல்ல நேரம் சுப முகூர்த்தம் சொன்ன பிரம்ம சத்ரியன் என்று தன்னை அழைத்துக் கொண்ட ராவணன் ராமன் அனுமான் ராமாயணம் காலத்து இந்தியர்கள் உலகின் தலைசிறந்த வம்சம் ரத்தம் டிஎன்ஏ குரோமோசோம் மனிதர்கள் ஆவார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை....</div><div dir="auto"><br /></div><div dir="auto">வாழ்க ராவணன். </div><div dir="auto">வாழ்க ராமன். </div><div dir="auto">வாழ்க ராமாயணம். </div><div dir="auto">வாழ்க கிமு5000 காலத்து ராமாயணம் புராணம். </div><div dir="auto">வாழ்க அனுமான். </div><div dir="auto">வாழ்க பாரதம். </div><div dir="auto">வாழ்க சனாதனம்.</div><div dir="auto">வாழ்க ஓரையன் ஓரியன் ஆரியன் சிவன் முருகன் பிள்ளையார் மகன்கள் மகள்கள். </div><div dir="auto">வாழ்க இந்தியர். </div><div dir="auto">வாழ்க தமிழர். </div><div dir="auto">வாழ்க தமிழ். </div><div dir="auto">வெல்க தமிழ்.</div></div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-14638291994482834272022-06-17T22:40:00.000+05:302022-06-17T22:41:03.481+05:30God Particle Higgs Boson SN Bose Vezh Velir Vellalar<div dir="auto">போசளர் ஹொய்சாளர் ஒய்சாளர் நளன் நளர் திருநள்ளாறு கோவில் சளன் சளர் சாளுக்கியர் அனைவரும் தமிழ் மன்னர்கள் + பிராமணர்கள் (வேள் வேளிர் வேளாளர் வேள்வி செய்த வேளாளர்) என்ற யவனர் ரோமன் கிரேக்கம் பாரசீகம் பார்சி பாரசீக பெர்சிய அரபு வெள்ளை தோல் மனைவிகளை பெற்ற தமிழ் வம்சங்கள். போசளர் தான் இன்று போஸ் சாதியாக வங்காளத்தில் உள்ளனர். கடவுள் துகள் என்ற Higgs Boson Particle தமிழ் போசளர் கண்டுபிடிக்க உதவினார் என்பது அனைத்து இந்தியருக்கும் பெருமை.<div dir="auto"><br></div><div dir="auto"><br></div><div dir="auto"><div dir="auto">You are very wrong. God particle is present in all atoms. It is the building blocks of universe. After finding atom scientists broken the atom to see electron proton neutron. Scientists wanted to know what makes the electron proton neutron. That raw material which makes atom and it's sub particle proton neutron electron is the building block of the universe. Indian scientist SN Bose Satyendra Nath Bose and Einstein's letters and equations like Bose Einstein's equations etc already found out the Boson particle Theoretically on the white paper. Later governments spent a lot of cash to invest in Large Hadron Collider which is a cyclotron to smash atoms and see what the broken pieces of atoms contains. Particle physics. CERN the Central European Research Network and it's underground tunnels helped run the cyclotron. This LHC cyclotron found out quarks anti matter matter 200 sub atomic particles etc. The final God particle the Brahma the smallest piece of universe by which all other visible touchable feelable matter are made is boson. It is weightless because it has no ego. It is God. That's why in Indian philosophy God is always shown as a witness present in all bodies. Metal water fire air animal birds mountains stones sand men women cat dog etc. This God particle as per NPE neutron proton electron numbers also can be explained very simple way. Electron Neutron Proton all sub atomic particles has mass, electric charge, weight. Nucleus, orbital electrons, protons. The nucleus is zero weight in God particle. Means all the 3 attributes of the God particle are zero. 0.0.0. This is the attribute of God.</div><div dir="auto"><br></div><div dir="auto">Zero Spin. Zero colour. Zero charge. Near Zero Weight (Mass). Means if you see a Higgs Boson God Particle it will have a nucleus but no protons (p=0). </div><div dir="auto">No electrons all 7 orbits of electron tracks are empty. (e=0). </div><div dir="auto">No mass (n= nearly 0).</div><div dir="auto"><br></div><div dir="auto">This 0.0.0 is the ip address of God. </div><div dir="auto"><br></div><div dir="auto">Tamil people explained God Particle as Enn Kunaththaan (8 attributes of Shiva) colourless odourless egoless weightless massless like this 8 attributes of Shiva is also given to God particle. </div><div dir="auto"><br></div><div dir="auto">This God particle can be used to create magic, black magic, destruction, construction, it can be used for positive or negative uses. That's why world nations spent 18 billion dollars to find this particle. </div><div dir="auto"><br></div><div dir="auto"> Means he is invisible he can't be seen he can't be touched. That God particle is the building block of universe. That God particle is explained by indians as brahma sutra. Brahman. God particle is available in all animate and inanimate things of universe. Bhakta Prahaladha Story explains this. Prahaladha breaks a Pillar and there exists the Nara Simham Avatar of God who killed the agnostic atheistic nasthik Hiranyan the King.</div><div dir="auto"><br></div><div dir="auto">The main advantage of finding God particle through cyclotron is now the Western nations became more powerful with cyclotron LHC which can create quakes storms tornadoes tsunamis. Man acquires God Power by this LHC cyclotron.</div><div dir="auto"><br></div><div dir="auto">Nepal Quake recently was caused by LHC cyclotron. It is a military machine. Too much neutrinos created by LHC cyclotron is zoomed on to mountain lava. Tectonic fissures. Fault lines. This too much neutrino bombing by the LHC cyclotron creates man made quakes tsunamis tornadoes storms by which Humanity particularly western nations can cause economic damage to enemy nations. Enemy nations can be defeated by LHC cyclotron neutrino bombing without evidence. </div><div dir="auto"><br></div><div dir="auto">West spent billions of rupees to create a military machine. They also found out God Particle.</div></div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-30003180279678533252022-06-17T22:38:00.000+05:302022-06-17T22:39:07.713+05:30LHC Large Hadron Collider is a Military Machine. It can be used to make Quakes. Part2.<div dir="auto"><div dir="auto">Large Hadron Collider என்று அழைக்கப்படும் Particle Accelerator CERN Europe அறிவியல் ஆய்வகத்தில் கடவுள் துகள்... Higgs Boson என்ற கடவுள் துகள் கண்டு பிடிக்க பயன்பட்ட நியூட்ரான் வேகமாக அனுப்பும் கருவி. எண்ணற்ற நியூட்ரினோ க்களை அனுப்பி USA NATO EU விரும்பிய நாட்டில் பூகம்பம் விரும்பிய நேரம் விரும்பிய ஆழம் விரும்பிய உயரம் (Lattitidue Longitude Azimuth) விரும்பிய சக்தி அளவில் (Richter Scale) செய்து அந்த எதிரி நாட்டை பூகம்பம் அனுப்பி கோடிக்கணக்கான மக்களை evidence இல்லாமல் ஆதாரம் இல்லாமல் கொல்ல முடியும். இதைப் பற்றி 2015 இலேயே நான் வலைப் பதிவு இட்டு இருந்தேன். பலர் சிரித்தனர். ஆனால் LHC Large Hadron Collider ஒரு அணு ஆய்தம். அதனால் தான் தேனி மாவட்டம் நியூட்ரினோ ஆய்வகம் கண்டிப்பாக இந்தியாவிற்கு தேவை. தேனியில் இருந்து அண்டை நாடுகளுக்கு பூகம்பம் அனுப்பலாம். அழிக்கலாம். </div><div dir="auto"><br></div><div dir="auto">இதே போல பறக்கும் விமானங்களை Boeing Airbus உருவாக்கி இருந்தால் USA NATO EU அல்லது France அவர்கள் விருப்பப்படி அவர்கள் விரும்பிய நேரம் சிக்னல் கொடுத்து crash உடைய செய்ய இயலும். ஏன் என்றால் fly by wire electronic systems மூலம் விமானம் தயாரித்து விற்ற நாடுகள் விமானம் வாங்கிய நாடுகளை தன் இஷ்டப்படி விமானம் உடைய வைத்து அவர்களை புதிய விமானம் வாங்க கட்டாயப் படுத்த இயலும். போர் காலங்களில் வேண்டும் என்றே விமானத்தை அப்பளம் நொறுக்குவது போல நொறுக்கி விடலாம்.</div><div dir="auto"><br></div><div dir="auto">#################</div><div dir="auto"><br></div><div dir="auto">#JUSTIN</div><div dir="auto"><br></div><div dir="auto">ஈரானின் புஷ்ஹர் பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு!</div><div dir="auto"><br></div><div dir="auto"><a href="http://www.ns7.tv">www.ns7.tv</a> | #Iran | #Earthquake</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-353903659374611377.post-19811235591651486482022-06-17T22:37:00.001+05:302022-06-17T22:37:53.448+05:30Large Hadron Collider LHC is a Military Machine. It can make Quakes.<div dir="auto"><div dir="auto">மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஐயா தேனி மாவட்டத்தில் நியூட்ரினோக்கள் ஆய்வகம் இஸ்ரோ மற்றும் அணு சக்தி கழகம் அமைக்க ஆதரவு அனுமதி தர வேண்டும்.</div><div dir="auto"><br></div><div dir="auto">High-energy radiation from space, known as galactic cosmic rays, can affect Earth's climate by increasing cloud cover and causing an "umbrella effect", according to scientists.</div><div dir="auto"><br></div><div dir="auto">Cosmic rays are immense showers of energetic subatomic particles that come from every direction in space at the same time, and which have an unclear exact origin.</div><div dir="auto"><br></div><div dir="auto">Specific telescopes were required for these measurements. The H.E.S.S. facility (which stands for High Energy Stereoscopic System) in Namibia consists of five Cherenkov telescopes that are used to investigate gamma rays from space. </div><div dir="auto"><br></div><div dir="auto">Astronomers Observe a Cosmic Particle Accelerator As Never Before. </div><div dir="auto"><br></div><div dir="auto"><a href="https://scitechdaily.com/astronomers-observe-a-cosmic-particle-accelerator-as-never-before/">https://scitechdaily.com/astronomers-observe-a-cosmic-particle-accelerator-as-never-before/</a> </div><div dir="auto"><br></div><div dir="auto"><a href="https://www.downtoearth.org.in/news/climate-change/scientists-find-evidence-cosmic-rays-influence-earth-s-climate-65436">https://www.downtoearth.org.in/news/climate-change/scientists-find-evidence-cosmic-rays-influence-earth-s-climate-65436</a> </div><div dir="auto"><br></div><div dir="auto">2012 முதல் நான் சொல்லி வருவது = Large Hadron Collider LHC = Particle Accelerator = Cyclotron = used in Particle Physics = LHC found God Particle = Higgs Boson. </div><div dir="auto"><br></div><div dir="auto">இந்த செர்ன் ஜெனீவா சைக்ளோட்ரான் ஒரு பார்ட்டிக்கிள் ஆக்சலரேட்டர். </div><div dir="auto">சைக்ளோட்ரான். </div><div dir="auto"><br></div><div dir="auto">இந்த நியூட்ரினோ ஆய்வகம் ஒரு ராணுவ அழிவு கருவி. </div><div dir="auto"><br></div><div dir="auto">இந்த நியூட்ரினோ ஆய்வகம் மூலம் கோடிக்கணக்கான டிரில்லியன் கணக்கான நியூட்ரினோ க்களை அணுவின் சில்லுகளை</div><div dir="auto">அணுத்துகள்களை </div><div dir="auto"><br></div><div dir="auto">ஐரோப்பியர்கள் விரும்பிய கண்டத்துக்கு நாட்டுக்கு எதிரி நாட்டின் பூமிக்கு கீழே உள்ள டெக்டானிக் தகடுகள் என்ற பூமிப் பந்தின் மேல் தோல்களில் செலுத்தி பூகம்பம் ஏற்படுத்த முடியும். </div><div dir="auto"><br></div><div dir="auto">LHC Large Hadron Collider ஒரு ராணுவ போர் கருவி. அழிவுக் கருவி. </div><div dir="auto"><br></div><div dir="auto">அதன் மூலமாக </div><div dir="auto">எரிமலைகளை வெடிக்க செய்யலாம். </div><div dir="auto">சுனாமி ஏற்படுத்தலாம். </div><div dir="auto">நிலச்சரிவு ஏற்படுத்தலாம். </div><div dir="auto">மேக வெடிப்பு Cloud Burst ஏற்படுத்தலாம். </div><div dir="auto">சூறாவளி Tornado ஏற்படுத்தலாம். </div><div dir="auto">ஆதாரம் இன்றி எதிரி நாட்டை அழிக்கலாம். </div><div dir="auto">எதிரி நாட்டில் பேரிடர் செய்யலாம். </div><div dir="auto"><br></div><div dir="auto">மேற்கண்ட இரண்டு வலை தளம் முகவரியில் காஸ்மிக் பார்ட்டிக்கிள் ஆக்சலரேட்டர் என்று சொல்கிறார்கள். </div><div dir="auto"><br></div><div dir="auto">அதுவும் ஷாக் வேவ்ஸ் என்ற நியூட்ரினோக்கள் அனுப்பி பூமியில் பல இன்னல்கள் துயரங்கள் பேரிடர் ஏற்படுத்துகிறது.... </div><div dir="auto"><br></div><div dir="auto">தூரம் பூமியில் இருந்து அதிகம் இருந்தால் பேரிடர் இழப்பு குறைவு. </div><div dir="auto"><br></div><div dir="auto">பக்கத்தில் இருந்தால் பேரிடர் இழப்பு அதிகம். </div><div dir="auto"><br></div><div dir="auto">அது மட்டுமல்ல. </div><div dir="auto"><br></div><div dir="auto">அந்த நியூட்ரினோக்கள் தாக்கும் இடம் புவியியல் அமைப்பு ஏற்கனவே பிரச்சினையில் இருக்க வேண்டும். </div><div dir="auto">எரிமலை</div><div dir="auto">லாவா குழம்பு</div><div dir="auto">பூகம்பம் வரும் பகுதி</div><div dir="auto">இப்படி ஏற்கனவே பிரச்சினை அதிகம் உள்ள பகுதியாக இருந்தால் நியூட்ரினோக்கள் எளிதில் பேரிடர் ஏற்படுத்தும். </div><div dir="auto"><br></div><div dir="auto">இல்லை என்றால் அவ்வளவு பாதிப்பு இருக்காது. </div><div dir="auto"><br></div><div dir="auto">பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடிக்கும் போது பிட்டியில் பிரம்பு வைத்து அடித்தால் வலி குறைவு. </div><div dir="auto">அதே பிரம்படி உள்ளங்கையில் வலி அதிகம். </div><div dir="auto">பிரம்பின் சின்ன சில்லு பறந்து சென்று கண்ணை குத்தினால் கண் பார்வை போய் விடும். </div><div dir="auto">இதனால் தான் குழந்தைகளை திருத்தும் போது செவ்வுளில் செவிட்டில் அறையாதே என்பார்கள். </div><div dir="auto">செவிட்டில் ஓங்கி அறைந்தால் காது கேளாமல் போய்விடும். </div><div dir="auto">ஆகவே செவிட்டில் அறையாமல் முதுகில் அடிப்பார்கள் அல்லது பிட்டியில் அல்லது தொடையில் அடிப்பார்கள். </div><div dir="auto">இது வலி குறைவு. </div><div dir="auto"><br></div><div dir="auto">இதே தான் நியூட்ரினோக்கள் ஆய்வகம் அனுப்பும் நியூட்ரினோக்கள் கற்றையும்.</div><div dir="auto"><br></div><div dir="auto">அந்த உப அணுக்கள் கற்றையை நாம் பூமிப் பந்தின் வலிமை குறைந்த எக்குத்தப்பான ஏடாகூடமான பகுதிகளுக்கு அனுப்பினால்.... </div><div dir="auto"><br></div><div dir="auto">சுனாமி </div><div dir="auto">சூறாவளி</div><div dir="auto">பூகம்பம்</div><div dir="auto">போன்ற பேரிடர்கள் செய்ய இயலும். </div><div dir="auto"><br></div><div dir="auto">ஆகவே திமுக மதிமுக மற்றும் அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்..... </div><div dir="auto"><br></div><div dir="auto">தேனி மாவட்டத்தில் நியூட்ரினோக்கள் ஆய்வகம் வரட்டும். </div><div dir="auto"><br></div><div dir="auto">மத்திய அரசு இது ஒரு ஆய்வகம் ஆக மட்டுமே வைத்துக் கொள்ளாமல் அதை ஒரு ராணுவ அழிவுக் கருவி ஆகவும் வைத்துக் கொண்டால்..... </div><div dir="auto"><br></div><div dir="auto">அக்னி ஏவுகணை போல.... </div><div dir="auto"><br></div><div dir="auto">பிரம்மோஸ் போல... </div><div dir="auto"><br></div><div dir="auto">எதிரி நாடுகளை இந்தியா நியூட்ரினோக்கள் அனுப்பி பேரிடர் இழப்பு செய்து போர் வெற்றி பொருளாதார வெற்றி அடையலாம். </div><div dir="auto"><br></div><div dir="auto">மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஐயா தேனி மாவட்டத்தில் நியூட்ரினோக்கள் ஆய்வகம் இஸ்ரோ மற்றும் அணு சக்தி கழகம் அமைக்க ஆதரவு அனுமதி தர வேண்டும்.</div></div> Pasughttp://www.blogger.com/profile/12503284557100404048noreply@blogger.com0